எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாள் வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஜூலை, 2017

ஆண்டொன்று போனால்..



HAPPY BIRTHDAY :) VAAZGHA VALAMUDAN :)

இதுதான் நான் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் என்று பார்த்தால் முகநூலில் வாழ்த்துச் சொல்லி எழுதுவது. வித்யாசமாய் செய்யவேண்டும் எனத் தோன்றியதே இல்லை.

ஆனால் என் பிறந்தநாளின்போது சில நட்பூக்கள் வாழ்த்தி இருந்தது அழகாய் இருந்ததால் அவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

நன்றியும் அன்பும் அனைவருக்கும்.  
GRASTLEY JAYA WISHES.

**Shivaji R S‎.

♪♥ (,) ♫♪♥
.....~.| |~ HAPPY
.....{░♥░}......
...{░♥░♥░} BIRTHDAY
.{░♥░♥░♥░}.......
\¤¤¤¤¤¤¤¤¤¤/
(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯) ..Shirdi Sai Baba’s Blessings ♪♫•*¨*•.¸¸¸¸.•*¨*•♫♪? ! .. Be With You Always Dear One(¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯)Vaazhga Valamudan (¯`*•.¸,¤°´`°¤,¸.•*´¯) ..

OM SREE SAMARTHA SAYEE
ANANTHAKOTI BRAHMANDA NAYAKA RAJADHIRAJA YOGIRAJA PARABRAHMA SACHIDANANDA SREE SREE SREE SAMARTHA SADGURU SAINATH MAHARAJ KI JAI..

-- நன்றி சிவாஜி சந்தானம் சார். 

** Dhavappudhalvan Badrinarayanan A M‎

வண்ண தமிழ் சொற்களின்
வான் தாண்டியும் கோலங்கள்.
நலமுடன் பல்லாண்டு
மகிழ்வுடன் வாழ
உமக்கான இந்நாளில்
அன்புடன் வாழ்த்துகிறோம்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கவிச் சகோ.

-- நன்றி தவப்புதல்வன் பத்ரிநாராயணன் சார். 

** வழக்கறிஞர் கண்ணன்

அருட் பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் , எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் அமைய வேண்டுகிறேன் .அருட் பேராற்றல் கருணையினால்உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,உயர் புகழ், மெய்ஞ்ஞானம் ஒங்கி வாழ்வு மாறு வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! என் நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

-- நன்றி கண்ணன் சார். 

** யாழகிலன் அபிமன்யு சனா

இன்று கவிதை க்கு பிறந்த நாள் விழா.
வெறுமனே கவிதை மட்டும் அல்ல
அழகான கோலமும் சமையல் தடாகம்

உண்டவராக அம்மாவுக்கு
உப்பாய் நன்றி நன்றியும் உடனாக வாழ்த்த இறைவனை வேண்டுகிறேன் அம்மா

-- நன்றி அகிலா  

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அக்கா அம்மாவானாள் !

ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஒவ்வொரு வகையான வாழ்த்துகள். முன்பு எல்லாம் அக்கா என வாழ்த்துவார்கள். இந்தச் சில வருடங்களில் சிலர் அம்மா என்றும் வாழ்த்துகின்றார்கள்.

இனிமையான வாழ்த்துகள் கண்டு மனம் நெகிழ்ந்த தருணம் அதை வலைப்பூவிலும் பதிவு செய்யும் எண்ணம் வந்தது.

உங்கள் அனைவரின் ஆசிகளும் வாழ்த்துகளும் சுமந்து இதயம் திகைத்து நிற்கிறது. நட்பெனும் பேறு பெற்றேன். சிரம்தாழ்த்தி ஏற்கிறேன். என் பிறந்தநாளில் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனம் கனிந்த நன்றி. . வாழ்க வளமுடன்.
அன்பரே ! வணக்கம் . உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! “ அறிவைத் தேடிக்கொண்டே இரு! அநீதியை எதிர்த்துக்கொண்டே இரு ! சாதியை உதறு ! மதத்தை மற! மனிதனை நினை! உழைப்பை நம்பு! அன்புடன், சு.பொ.அகத்தியலிங்கம்

Subramaniam Chupoo

அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரியாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Advance birthday wishes

புதன், 9 செப்டம்பர், 2015

பிறந்தோமே சிறந்தோமா. :)

பிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப்  படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால் பிறந்ததற்கு ஏதோ சிறப்பாகச் செய்ய முயல்கிறோம் என்பது உண்மை. 2015 ஆம் ஆண்டில் வந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

Raji Krish‎


மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
நம் இனிமையான நினைவுகள்
நிழல் போல் தொடரட்டும்
நெகிழ்வான பாசமும் நேசமும்
கருனையும் நம் மனதளவில்
மலரட்டும்... என்றும் இனிய
புன்னகையுடனும்.. இளமையுடனும்
வலம் வர வேண்டும் அன்பின் இனிய செல்ல தோழியும், சுடர் எழுத்தாளினியும், தங்கையுமான தேனிம்மாவிற்கு...
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
வாழ்க என்றும் வளமுடன்..!!
என்றும் ப்ரியமுடன்...ராஜிகா... பிக் ஹக் ♡ உம்மாஆஆ..

-- அன்பு ராஜிக்கா நன்றி :)

ரமலான் கோட்டையார்

நாளை (14-7-2015) பிறந்த நாள் கானும் முகநூலில் எனக்கு கிடைத்திட்ட முத்துக்களில் ஒன்று அன்பின் உறைவிடம் அன்பு அக்கா திருமதி . தேனம்மை லெட்சுமணன் அவர்கள் வாழ்வில் சிறப்புகள் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி எனதன்பின் நட்பூக்களோடு இணைந்து வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்...

நகரத்தார் குல மாணிக்கமே...
செட்டி நாட்டின் செல்லப்பிள்ளையே..
எங்களின் சிவகங்கை
மண்ணின் மகுடத்தை
அலங்கரிக்கும் வைரங்களில்
ஒன்றே...

உங்களின் எழுத்து வரிகளில் தான்
எத்துனை எதார்த்தம் பாமரனுக்கும்
புரியும் கவியும் கட்டுரையும்
புனைவதில் தங்களின் திறமை
கண்டு வியந்தவர்கள்
எத்துனை பேர் என்று
எங்களை போன்றோர் அறிவோம்

குழல் இனிது யாழ் இனிது என்பர்
தன் மழலை சொல் கேளாதோர்
சுசிலா அம்மாவின் கவிப்பட்டறையில்
பட்டை தீட்டப்பட்டதால்தான்
உங்கள் மேடைப்பேச்சில்
உங்கள் குரலும் இனிக்கின்றதோ...

”ங்கா” எனும் தாலாட்டால்
மடியில் இருக்கும் மழலைக்கும்
கவி சொல்லி
ஒளிந்து கிடந்த அரசிகளை
பட்டை தீட்டிய வைரமாக
”சாதனை அரசி”யில்
ஜொலிக்க செய்து
"அன்னபட்சி" யை
கைகளில் தவழவிட்டது வரை
உங்களின் படைப்புகளின் வரிசை
எத்தனை எத்தனை

வலைப்பூவரசியே
என்றும் புன்னகை அரசியே
வையகத்து விருதுகளெல்லாம்
உங்களை வந்து அடைந்து
குன்றா புகழுடன் அவனியில்
ஜொலித்திட வாழ்த்துகிறேன்
வாழ்வாங்கு வாழ்ந்திட.....

HAPPY BIRTH DAY AKKOVV

-- அஹா தீன் கவியே அன்புத் தம்பியே இனிய கவிதைக்கு நன்றி. நன்றி ! வாழ்க வளமுடன்


புதன், 1 ஏப்ரல், 2015

எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.



ப்ரிய மாமா
”மா” ”மா” நீங்கள்.
இந்தக் கவிதை
உங்கள் மனவீட்டுக்குள்
அரிக்காத வண்ணப்புகைப்படமாய்
இருக்க வேண்டாம்
ஒரு சுருண்ட காலண்டராகவாவது
முடங்கிக்கொள்ள அனுமதியுங்களேன்

எப்படி முடிகிறது உங்களால்
மனத்தடி மண்ணில்
கப்பும் கிளையுமாய்ப் பூக்க
வெடிக்க நினைக்கும்
ப்ரிய விதைகளை
ஆழப் புதைக்க

இன்னும் எனக்கு நீங்கள்
ஆச்சர்யம் உண்டுபண்ணும்
மனிதர்தான்

ஞாயிறு, 15 மார்ச், 2015

பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.


பிறந்தநாள் வாழ்த்துகள்  என்று சிலோன் வானொலியில் கேட்டிருக்கிறோம். 

“ பிறந்த நாள் இன்று பிறந்தநாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள். ” 

இதுக்கு அடுத்த காலகட்டம் வாரமலர், தொலைக்காட்சி போன்றவற்றில் பிள்ளைகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பார்த்தது.

நமக்கெல்லாம் வீட்ல இருக்கவங்க நினைப்பு வந்தா பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பாங்க. ஆனால் முகநூல் வந்ததில் இருந்து கிட்டத்தட்ட 5 வருடமா பிறந்தநாள் வாழ்த்துகள் அதிகரிச்சுக்கிட்டே வருது. 

அதில் சிலவற்றை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வடைகிறேன்.



வியாழன், 3 அக்டோபர், 2013

நன்றி வாழ்த்துக்களுக்கும் புகைப்படங்களுக்கும்..


Nesamithran Mithra

தாழ் பயிரின் நிறைகனம் எப்போதுமிருக்கும் செல்வத்து பாரம் ,
நாள் சுடர்த்தும் கதிர் போல் ஒளி கூடிய நல்லாயுள் பல்கிப் 
பெருகட்டும் . எந்த கோளும் இணங்கிச் சுழல்க !

வருஞ்சிறப்பும் செல்லும் துயரும் சலனிக்காதிருக்கட்டும் திண்மனதை

துணிந்தே எண்ணுவதும் எண்ணித்துணிவதும் நல்விளைவே
 தந்துவக்கட்டும்

வாழிய பல்லாண்டு ! பிறந்த நாள் நல் வாழ்த்துகள் !
Kumaresan Asak 
Related Posts Plugin for WordPress, Blogger...