எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2015

பிறந்தோமே சிறந்தோமா. :)

பிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப்  படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால் பிறந்ததற்கு ஏதோ சிறப்பாகச் செய்ய முயல்கிறோம் என்பது உண்மை. 2015 ஆம் ஆண்டில் வந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

Raji Krish‎


மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
நம் இனிமையான நினைவுகள்
நிழல் போல் தொடரட்டும்
நெகிழ்வான பாசமும் நேசமும்
கருனையும் நம் மனதளவில்
மலரட்டும்... என்றும் இனிய
புன்னகையுடனும்.. இளமையுடனும்
வலம் வர வேண்டும் அன்பின் இனிய செல்ல தோழியும், சுடர் எழுத்தாளினியும், தங்கையுமான தேனிம்மாவிற்கு...
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
வாழ்க என்றும் வளமுடன்..!!
என்றும் ப்ரியமுடன்...ராஜிகா... பிக் ஹக் ♡ உம்மாஆஆ..

-- அன்பு ராஜிக்கா நன்றி :)

ரமலான் கோட்டையார்

நாளை (14-7-2015) பிறந்த நாள் கானும் முகநூலில் எனக்கு கிடைத்திட்ட முத்துக்களில் ஒன்று அன்பின் உறைவிடம் அன்பு அக்கா திருமதி . தேனம்மை லெட்சுமணன் அவர்கள் வாழ்வில் சிறப்புகள் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்கி எனதன்பின் நட்பூக்களோடு இணைந்து வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்...

நகரத்தார் குல மாணிக்கமே...
செட்டி நாட்டின் செல்லப்பிள்ளையே..
எங்களின் சிவகங்கை
மண்ணின் மகுடத்தை
அலங்கரிக்கும் வைரங்களில்
ஒன்றே...

உங்களின் எழுத்து வரிகளில் தான்
எத்துனை எதார்த்தம் பாமரனுக்கும்
புரியும் கவியும் கட்டுரையும்
புனைவதில் தங்களின் திறமை
கண்டு வியந்தவர்கள்
எத்துனை பேர் என்று
எங்களை போன்றோர் அறிவோம்

குழல் இனிது யாழ் இனிது என்பர்
தன் மழலை சொல் கேளாதோர்
சுசிலா அம்மாவின் கவிப்பட்டறையில்
பட்டை தீட்டப்பட்டதால்தான்
உங்கள் மேடைப்பேச்சில்
உங்கள் குரலும் இனிக்கின்றதோ...

”ங்கா” எனும் தாலாட்டால்
மடியில் இருக்கும் மழலைக்கும்
கவி சொல்லி
ஒளிந்து கிடந்த அரசிகளை
பட்டை தீட்டிய வைரமாக
”சாதனை அரசி”யில்
ஜொலிக்க செய்து
"அன்னபட்சி" யை
கைகளில் தவழவிட்டது வரை
உங்களின் படைப்புகளின் வரிசை
எத்தனை எத்தனை

வலைப்பூவரசியே
என்றும் புன்னகை அரசியே
வையகத்து விருதுகளெல்லாம்
உங்களை வந்து அடைந்து
குன்றா புகழுடன் அவனியில்
ஜொலித்திட வாழ்த்துகிறேன்
வாழ்வாங்கு வாழ்ந்திட.....

HAPPY BIRTH DAY AKKOVV

-- அஹா தீன் கவியே அன்புத் தம்பியே இனிய கவிதைக்கு நன்றி. நன்றி ! வாழ்க வளமுடன்


Related Posts Plugin for WordPress, Blogger...