கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்
ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேரும்போது அதைச் சமாளிக்கமுடியாவிட்டால் யாருக்குமே கோபம் வருவது இயல்பு. அப்படி ஒருவருக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்கப் பிரச்சனைகளும் பூதாகாரமாகும். அதேபோல் சிந்தித்துக் கையாண்டால் அதே பிரச்சனைகளே புழுப்போலச் சிறுத்துப் போய்விடும் என்பதற்கு உதாரணமாக கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஒருமுறை கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் ஒரு கானகத்தைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. மாலை முடிந்து இரவும் தொடங்கியது. சில்வண்டுகளின் கீச் கீச் சத்தங்களும் விஷப் பூச்சிகளின் ரீங்காரங்களும் கொடிய வனவிலங்குகளின் உறுமல்களும் பிளிறல்களும் வனத்தை அதிரடித்துக் கொண்டிருந்தன.
நாலாபக்கமும் பார்த்தபடி சென்ற அவர்கள் இரவு சூழ்ந்ததும் அக்கானகத்திலேயே உறங்கி மறுநாள் காலை பயணத்தைத் தொடர நினைத்தனர். இத்தனை விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் மத்தியில் மூவரும் எப்படி நிம்மதியாக உறங்க முடியும். அதனால் மூன்று ஜாமங்களிலும் மூவரில் ஒருவர் விழித்திருந்து மற்ற இருவரைக் காவல் காக்க முடிவு செய்தனர்.
