வம்சம் தழைக்கச் செய்யும் ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தானிலிருந்து திருமயம் செல்லும் வழியில் இருக்கிறது ஊனையூர். இங்கே பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார் கோயில் கொண்டிருக்கிறார். சக்தி வாய்ந்த தெய்வம். சாத்தன் என்ற பெயர் சமணச் சார்புடைத்தாம். சமண மதம் சார்ந்த சாத்தன் என்ற பெயர் ஐயனாரையும் குறிப்பது. ஐயனார் & சாத்தன் வணிகர்களின் குலதெய்வம். சாத்தன் என்றால் காப்பவன் என்று பேராம்.
தனது வணிகக் குழுக்களைக் காக்கும் தலைவன் பெயர் சாத்தன் என்றிருந்தது போல, மக்களைக் காக்கும் பேரரசர்களுக்கும் சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது வியக்கவைக்கும் ஒற்றுமை. அரசர்களின் பெயர்கள் சாத்தன், சாத்தன் மாறன் , சாத்தன் பூதி, சாத்தன் பழியிலி மற்றும் ராணியின் பெயரும் சாத்தன் காளி என்று வழங்கப்பட்டிருக்கிறது.