சிகண்டியாய் இருப்பது
எளிதல்ல..
கொஞ்சம் குத்தும்
பார்வைகள் சேமிக்க வேண்டும்.
ஊசிகளில் உறைந்து
கிடப்பவனிடம் திரும்ப செலுத்த.
வெளுப்புக் கிரீமும்
வெண்மைப் பல்லும்
மயக்கம் தருகிறது
விடிந்ததும் விலகி
வெருண்டு செல்பவனுக்கு.
உடலைப் பெண்ணாய்
உணர்வை ஆணாய்ப்
படைத்தவனுக்கும் இருக்கிறது
ஹார்மோனல் இம்பாலன்ஸ்.
வணக்கத்திற்குரிய
கோலங்களில் நின்றுகொண்டு
பிறப்பவைகளை
அலங்கோலப்படுத்துவதில் தீர்கிறது
அவனது கலியுகம்.
கோபத்தை எல்லாம்
சேமித்து சூரியனாய்
எரிவதில் தீர்வதில்லை
சடையனின் வெண்சாம்பலும்.,
மோஹினி அமிர்தமும்..
வாழ்ந்தே கிடப்பது.,
எல்லா வினைகளையும்
அனுபவித்தே தீர்ப்பது
இதுவே ஆயுதம்தான்
இந்த ஜென்மம் முழுமைக்கும்.
யாரையும் தாக்காமல்
இடப்பட்டவைகளைக்
கடந்து வெற்றிக்கொடி
கட்டுவதிலே இருக்கிறது
வாழ்விற்குண்டான பலன்..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1, 2011 உயிரோசையில் வெளிவந்தது.
எளிதல்ல..
கொஞ்சம் குத்தும்
பார்வைகள் சேமிக்க வேண்டும்.
ஊசிகளில் உறைந்து
கிடப்பவனிடம் திரும்ப செலுத்த.
வெளுப்புக் கிரீமும்
வெண்மைப் பல்லும்
மயக்கம் தருகிறது
விடிந்ததும் விலகி
வெருண்டு செல்பவனுக்கு.
உடலைப் பெண்ணாய்
உணர்வை ஆணாய்ப்
படைத்தவனுக்கும் இருக்கிறது
ஹார்மோனல் இம்பாலன்ஸ்.
வணக்கத்திற்குரிய
கோலங்களில் நின்றுகொண்டு
பிறப்பவைகளை
அலங்கோலப்படுத்துவதில் தீர்கிறது
அவனது கலியுகம்.
கோபத்தை எல்லாம்
சேமித்து சூரியனாய்
எரிவதில் தீர்வதில்லை
சடையனின் வெண்சாம்பலும்.,
மோஹினி அமிர்தமும்..
வாழ்ந்தே கிடப்பது.,
எல்லா வினைகளையும்
அனுபவித்தே தீர்ப்பது
இதுவே ஆயுதம்தான்
இந்த ஜென்மம் முழுமைக்கும்.
யாரையும் தாக்காமல்
இடப்பட்டவைகளைக்
கடந்து வெற்றிக்கொடி
கட்டுவதிலே இருக்கிறது
வாழ்விற்குண்டான பலன்..
டிஸ்கி:- இந்தக் கவிதை ஆகஸ்ட் 1, 2011 உயிரோசையில் வெளிவந்தது.

9 கருத்துகள்:
நல்ல கவிதை, ரசித்தேன்..நன்றிங்க.
KAVITHAI NANDRAGA IRUKKIRATHU
VARTHAIGAL ARUVAIPOLA VIZUGIRATHU
CONGRATS
KARUNAKARAN
Sharp and profound
//உடலைப் பெண்ணாய்
உணர்வை ஆணாய்ப்
படைத்தவனுக்கும் இருக்கிறது
ஹார்மோனல் இம்பாலன்ஸ்//
கோபத்தைக் கொப்பளிக்கும் வரிகள்!
//////வாழ்ந்தே கிடப்பது.,
எல்லா வினைகளையும்
அனுபவித்தே தீர்ப்பது
இதுவே ஆயுதம்தான்
இந்த ஜென்மம் முழுமைக்கும்//////
அருமையான, ஆழமான வரிகள் அக்கா ..!
ஆழம்.
தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html
நன்றி குமரன்
நன்றி கருணாகரன்
நன்றி அப்பாதுரை
நன்றி கோபால் சார்
நன்றி வரலாற்று சுவடுகள்
நன்றி அப்பாதுரை
நன்றி கணேஷ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக