இவர் பற்றிக் கேட்டபோது :)
////தற்குறி(ப்பு)
பகுத்தறிவு என்பெயர் அண்ணாதுரை கணவர்..
முற்றிலும் கிராமத்துப்பெண்.. பட்டயப் படிப்பு முடித்து சென்னையில் கொஞ்சநாள் வேலை பின்னர் தந்தை மரணம், திருமணம், இல்லறம், மகன்.. பிரபல்யன், மகள்.. பிரதான்யா.. சமீப காலமாகத்தான் முகநூல் பரிச்சயம்.. எழுத்துன்னு சொல்லிக்க பெரிதாய் ஏதுமில்லை.. நினைத்தவுடன் கவிபாடும் ஆசுகவியல்ல, கிடைத்த நேரத்தில் கிறுக்கும் ஆசுவாச கவி😊
தற்குறிப்பேற்றத்தில் உயர்வு நவின்றால் வஞ்சப்புகழ்ச்சிக்கு வழிவகுக்கும்.. அதனால் முடிச்சுக்கறேன்..////
உங்களுக்குப் பிடித்த விஷயம் பற்றி அல்லது ஏதேனும் குறிப்பான விஷயம் பற்றி மக்களுக்குச் சொல்லனும்னா என் ப்லாகுக்கு எழுதிக் கொடுங்க பகுத்தறிவு .
வாழ்வில் பல பாத்திரங்களை ஏற்று பக்குவமாய் நடப்பதாலோ என்னவோ பெண்களுக்குப் பாத்திரங்களின் மீது தனிப்ரியம்.. அழகழகான வடிவங்களில் அளவுகளில் பாத்திரங்களை வாங்கி அடுக்கி வைத்து ரசிப்பது பெரும்பாலான பெண்களுக்குப் பிடித்தமான விஷயம்..
ஒருவரை ஏமாற்ற வேண்டுமெனில் அவர்களின் ஆசையைத்தூண்டவேண்டும் என்னும் அடிப்படை விதிப்படி பெண்களின் பாத்திர ஆசையைப் பயன்படுத்திபணம் பறிக்கும் கும்பல் ஒன்றைப் பற்றித்தான் இப்போது சொல்ல வந்தேன்..
நகரில் ஒரு கடையைப் பிடித்துக்கொண்டு அலங்காரமாகப் பாத்திரங்களை அடுக்கினார்கள் முதலில்.. பின்னர் விற்பனை ஏஜண்டுகள் என்று சில பெண்களை அமர்த்தினார்கள்.. ஒருவர் 500 ரூ பணம் செலுத்தி ஒரு டோக்கன் வாங்க வேண்டும்.. அவருக்கு மூன்று டோக்கன்கள் வழங்கப்படும் . மூன்று டோக்கன்களையும் மூவரிடம் விற்கவேண்டும்.. அம்மூவருக்கும் ஆளுக்கு மூன்று டோக்கன்கள்.. அவர்கள் ஒவ்வொருவரும் மூவருக்கு விற்கவேண்டும்..
