தாமிரபரணி ஆறு சலசலத்தோடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் அமைந்திருக்கிறது குருகூர் என்ற ஊர். அந்த ஊரில் மிகப் பெரிய புளியமரம் ஒன்றிருந்தது. மிக நீண்ட அடர்ந்த கிளைகள், நல்ல சாட்டை சாட்டையாய்ப் புளியம்பழங்கள் நிரம்பி இருந்தன. அதன் ஒருபுற வேரும் கிளைகளும் நீரைத் துழாவிக் கொண்டிருந்தன.
அந்த மாபெரும் புளியமரத்தில் பல்வேறு பறவைகளும் கானம் பாடிக் கொண்டிருந்தன. இரவில்கூட அம்மரத்தின் இலைகள் சலசலத்துக் கொண்டிருக்கும். எனவே அதை ஊரார் உறங்காப்புளி என அழைத்தார்கள். அந்தப் புளியமரத்தில் ஒரு மிகப் பெரும் பொந்து ஒன்று இருந்தது. அங்கே அமர்ந்திருக்கும் ஒருவரைத்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.
ஆமாம். யார் அவர்? ஏன் அந்தப் பொந்துக்குள் அமர்ந்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்குப் பதினாறே வயதுதான். இச்சிறுவயதில் அங்கே அமர்ந்திருக்கக் காரணம் என்ன ?

