எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சூரியக்கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியக்கதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 செப்டம்பர், 2012

மயிலின் சீற்றம். வடிவுக்கரசியின் பேட்டி

மயிலின் சீற்றம் பார்த்திருக்கிறீர்களா.. தன் கொண்டையை அசைத்துக் கொண்டே அது அகவுவதைப் போல அழகாய் இருந்தது திரைப்படம் மற்றும்., தற்போது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்., இன்றளவும் வடிவழகியான நடிகை வடிவுக்கரசியின் பேச்சு.. வேறொன்றுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இருவரும் எதிர் எதிர் அணியில் அமர்ந்து பேச வேண்டியதாயிருந்தது. அப்போது நான் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு உண்டான கோபத்தில் இருந்தார் அவர். திரும்ப என் நிலைப்பாடை எடுத்துச் சொல்லி விடாது கருப்பு மாதிரி தொடந்து படையெடுத்து அவரிடம் இந்தப் பேட்டியை வாங்கினேன்..

1. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. நீங்கள் நடிக்க வந்தது எப்படி.?

எனக்கு சொந்த ஊர் வேலூர் இராணிப்பேட்டை. எட்டாவது வரை அங்கே படித்தேன். பின் ஒன்பதாவது படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன். வாலாஜா காலேஜில் பி யூ சி படித்தபின் அடையாரில் ஹோட்டல் மானேஜ்மெண்ட். அப்புறம் கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தேன்.

வியாழன், 26 ஜனவரி, 2012

முப்பெரும் சுதந்திர தேவியர். ப்ரிகேடியர் துர்காபாய், ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி, ருக்மணி சேஷசாயி.



ப்ரிகேடியர் துர்காபாய்., ப்ரிகேடியர் முத்துலெக்ஷ்மி. ருக்மணி சேஷசாயி இந்த மூன்று பேரும் தேசம் காக்கப் போராடியவர்கள். ஒருவர் சிறு வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மற்ற இருவரும் ராணுவ சேவையில் ஈடுபட்டு மருத்துவ சேவை செய்த பெண் வீராங்கனைகள். இவர்கள் பற்றி இந்த குடியரசு தின நாளில் சொல்லியே ஆகவேண்டும். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாரதி பாடிச் சென்றது இவர்கள் பற்றி இருக்கலாம். இந்தக்காலத்தில் கூட சாதாரண குடும்பங்களில் ராணுவத்தில் பணியாற்றுவதோ., காவல்துறை உத்யோகத்தில் சேர்வதோ அவ்வளவாக இல்லாத நிலையில் சுதந்திரப் போராட்டக்காலத்தில் சுதந்திரத்துக்காகவும். பின் இந்தியாவுக்காகவும் பாடுபட்ட வீரம் செறிந்த எழுச்சிப் பெண்களைப் பார்த்தபோது நாம் இந்தியர் எனப் பெருமித உணர்ச்சி பொங்கியது.

வெள்ளி, 2 டிசம்பர், 2011

ரொமான்ஸ் மழை.. சூரியக்கதிரில்..



அலுவலகம் சென்றபின்னும்
மணத்துக் கொண்டிருந்தது
கணவனின் ஆஃப்டர்ஷேவ்
லோஷன் தடவிய முத்தம்.

மீசையில் டையிட்டுக்
காய்ந்த கணவனை
முத்தமிட்டமிட்டபோது
மனைவிக்கும் மீசை வந்தது.

சனி, 7 மே, 2011

என் பெயர் அருணா..

சுவாசம் மெல்லியதாய் ஓடிக் கொண்டிருக்கிறது.. எப்போதும் மெல்லியதுதானே. இன்றென்ன புதிதாய்..

எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக மிட்டாய்களை வாயில் போட்டு என்னை பாதுகாத்துவிட்டதாக உற்சாகப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..

சனி, 23 ஏப்ரல், 2011

அதில் எனக்கு வருத்தமுண்டு.. பாரதி மணியின் பேட்டி சூரியக்கதிரில்..




பாரதி மணி சாருடன் ஒரு பேட்டி!

தேனம்மை லெக்ஷ்மணன்

விருதுபெற்ற எழுத்தாளர்களிலிருந்து விருது பெறத்துடிக்கும் நாடக நடிகர்கள் வரை இவர்களிடம் வெகு பிரபலமானவர் பாரதி மணி. எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ
உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தை சின்ன சாமி ஐயராக நடித்தவர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருக்ஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி ஐயா.
Related Posts Plugin for WordPress, Blogger...