செட்டிநாடு என்றவுடன் காரைக்குடியைச் சேர்ந்த ஊர்கள் நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட 96 ஊர்களில் வாழ்ந்திருந்த நகரத்தார் மக்கள் இப்போது 72 ஊர்களில் மட்டும் வசிப்பதாகக் கூறப்படுகிறது. உலகெங்கும் வசித்து வரும் இவர்கள் மொத்தமாக ஒரு லட்சம் மக்கள் தொகையே உள்ளார்கள்.
நான் இந்தக் கட்டுரைகளில் இவர்கள் ஆதியில் இருந்தது இன்று இருப்பது பற்றி எல்லாம் சொல்லப் போவதில்லை. ( காஞ்சி, பூம்புகார், சிதம்பரம், அதன்பின் இளையாற்றங்குடியில் வந்து 9 கோயில்களாகப் பிரிந்து இந்த 96 ஊர்களில் வசிக்கத் தொடங்கியது எல்லாம் ஏற்கனவே நகரத்தார் வரலாறு என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ). நகரத்தார் திருமண நடைமுறை என்ற புத்தகமும் வந்துள்ளது.
நான் இந்தக் கட்டுரைகளில் இவர்கள் ஆதியில் இருந்தது இன்று இருப்பது பற்றி எல்லாம் சொல்லப் போவதில்லை. ( காஞ்சி, பூம்புகார், சிதம்பரம், அதன்பின் இளையாற்றங்குடியில் வந்து 9 கோயில்களாகப் பிரிந்து இந்த 96 ஊர்களில் வசிக்கத் தொடங்கியது எல்லாம் ஏற்கனவே நகரத்தார் வரலாறு என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ). நகரத்தார் திருமண நடைமுறை என்ற புத்தகமும் வந்துள்ளது.