எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அகநாழிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகநாழிகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 செப்டம்பர், 2014

அகநாழிகை வெளியீடுகளும் எனது புத்தகங்களும் வாங்க.. இங்கேவாங்க.

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்.

சென்னை:-

1. அகநாழிகை புத்தக உலகம் - சென்னை.  
2. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.
3. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.
4. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.
5. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.

மற்றும்

புதன், 4 ஜூன், 2014

அகநாழிகையின் அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் அன்புள்ளங்களின் வருகை.

அகநாழிகையில் அன்ன பட்சி அறிமுக நிகழ்வுக்குத் தோழி பரமேசுவரி திருநாவுக்கரசு ( எழுத்தாளர் கவிஞர், மபொசி அவர்களின் பேத்தி ), தோழி நாச்சிமகள் சுகந்தி ( அவள் விகடனில் பணி புரிகிறார். கவிஞர் ) , என் மாமா மகள் வள்ளிக்கண்ணு , ( எழுத்தாளர், விமர்சகர், என் மூன்று நூல்களையும் காரைக்குடி புத்தகத் திருவிழாவில் வாங்கியவர் ) , நண்பர்கள் பாலசுப்ரமணியன் முனுசாமி ( பாண்டிச்சேரியில் இருந்து இதற்காக வந்தார்.

செவ்வாய், 27 மே, 2014

அன்ன பட்சி அறிமுக நிகழ்வில் நண்பர் திரு KT. இளங்கோ.

இளங்கோ சாரைப் பற்றிய அறிமுகம்
என்னுடைய முகநூல் நண்பர்களில் குறிப்பிடத் தகுந்தவர் திரு இளங்கோ அவர்கள். அவர் மட்டுமல்ல அவரது மனைவி திருமதி பத்மா கூட என் அன்பிற்குரிய தோழி.

என்னுடைய சாதனை அரசிகள் நூல் வெளியீட்டு விழாவுக்கு தம்பதியராய் வந்து சிறப்பித்தார்கள். அடுத்து வெளியான என் “ங்கா” கவிதைகளை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வந்து வாங்கி அதற்கு விமர்சனமும் எழுதி அனுப்பினார்கள்.

புதன், 14 மே, 2014

புத்தகத்திருவிழாக்களில் & புத்தக நிலையங்களில் அன்ன பட்சி.

அன்ன பட்சி நூல் சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. இது எனது மூன்றாவது நூல். முதல் நூல் ”சாதனை அரசிகள்”. இரண்டாவது ”ங்கா”. மூன்றாவது ”அன்ன பட்சி”.

வியாழன், 1 மே, 2014

தேனம்மை லெக்ஷ்மணனின் "அன்ன பட்சி" கவிதை நூல் குறித்து ஒரு உரையாடல். தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன். தமிழ்கூறும் நல்லுலகின் மிகப் பெரும் ( அழகான ) ஆளுமையான இவர் என்னுடைய அன்னபட்சியைப் படித்து ஒரு அறிமுகம் கொடுத்துள்ளார். ஆங்கிலப் பேராசிரியை,மிகப் பெரும் கவிஞர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், த்யேட்டர் ஆர்ட்டிஸ்ட், பல்துறை வித்தகி, மனிதநேயப் பண்பாளர், இன்னும் எவ்வளவோ சொல்லலாம். 

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

அகநாழிகையில் அன்ன பட்சி அறிமுக நிகழ்வு:-

அகநாழிகையின் அன்ன பட்சி அறிமுக நிகழ்வு வரும் ஞாயிறு மாலை 5. 30 மணிக்கு சைதாப்பேட்டையில் உள்ள அகநாழிகை புத்தக நிலையத்தில் நடைபெறுகிறது. சென்னை மக்களும் பதிவர்களும் கட்டாயம் வாங்க. இந்த சமயத்தில் வெளியூரில் இருந்து சென்னை வந்திருக்கும் நண்பர்களும் பதிவர்களும் உறவினர்களும் வாங்க.

பொன்மாலைப் பொழுதில் விமர்சனத்தைக் கூட ஆராய்ச்சிக் கட்டுரைபோல் அழகாய் வடித்து அமிழ்தினும் இனிய மொழி பேசும் தோழி, பல்துறை வித்தகி, தமிழச்சி தங்கபாண்டியன்,

புதன், 26 மார்ச், 2014

அன்ன பட்சி பற்றி இரத்தினவேல் ஐயா

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து எனக்கு பெருமாள் தாயார் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார் ரத்தினவேல் ஐயா அவர்கள். அவருடனும் அவரது துணைவியார் உமா அவர்களுடனும் பேசி இருக்கிறேன்.

வலைத்தளக் கவிதைகளைப் பார்த்துவிட்டு சமுதாய நண்பன் என்ற இதழுக்கு என்னுடைய கவிதைகளைக் கேட்டு வாங்கிப் போடச் செய்ததுமல்லாமல் எனக்கு ஒரு வருடத்துக்கான சந்தாவும் கட்டி அந்தப் புத்தகங்கள் என்னை அடையுமாறு செய்திருக்கிறார். என்னுடைய 9 கவிதைகள் சமுதாய நண்பனில் வந்திருக்கின்றன.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சாதனை அரசிகள் பற்றி இரத்தினவேல் ஐயா.

வலைப்பதிவராக அறிமுகமான திரு. இரத்தின வேல் ஐயா என்னுடைய கவிதைகளைப் படித்து வாழ்த்துக்கள் சொல்வார்கள். சிறந்ததைப் பகிர்வார்கள்.

என்னுடைய படைப்புக்கள் மட்டுமல்ல. சிறந்த எந்தப் படைப்பைப் பார்த்தாலும் பகிர்வார்கள். அவர்கள் மூலம் பலரையும் நல்ல விஷயங்கள் சென்று சேரும். தண்ணீர் யுத்தம் பற்றி, ப்ளாஸ்டிக் தீமை பற்றி, வெளிநாட்டில் பயிலும் பெண்களின் பாதுகாப்பு பற்றி, ஆன்லைன் கல்வி சேவை பற்றி எல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் போல நிறையப் பேரை ஊக்குவித்திருக்கிறார்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் பற்றி அங்கே அருகே  உள்ள மலைக் கோயில்கள் பற்றி எல்லாம் அவர்கள் வலைத்தளத்தில் படித்து அறிந்து கொண்டிருக்கிறேன்.

அவர்களுக்கு என்னுடைய மூன்று நூல்களையும் அனுப்பி வைத்தேன். அவர் அதற்கான விமர்சனங்களை அவ்வப்போது முகநூலில் பகிர்ந்து வந்தார். அதை எடுத்து நான் இங்கெ என்னுடைய வலைத்தளத்தில் பகிர்கிறேன்.


/////நான் படித்த புத்தகம்.

சாதனை அரசிகள் – எழுதியவர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்.
வெளியீடு: முத்து சபா பதிப்பகம்
முதல் பதிப்பு: ஜனவரி 2012 – விலை ரூ.50 – பக்கங்கள் 80
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.

புத்தகத்தைப் பற்றி:

புதன், 5 பிப்ரவரி, 2014

அன்ன பட்சி பற்றி புவனேஷ்வரி மணிகண்டன்.

என் வதனப் புத்தகத் தங்கை புவனேஷ்வரி மணிகண்டன்.  என் அன்ன பட்சி கவிதைத் தொகுதி வெளியீடு ஈவண்ட் போட்டவுடன் காலையே வந்து செல்வதாகச் சொன்னவர் மாலையில் எனக்காக வந்தார். முதலில் வந்து கரம்பற்றி வாழ்த்துத் தெரிவித்தார். அவர் அன்று வாங்கிய நூல்களும் அன்னபட்சி பற்றிய அவரது நிலைத்தகவல்களையும்  இங்கே பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி புவனா. 

திங்கள், 13 ஜனவரி, 2014

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை .. எனது பார்வையில்.


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை

பூட்டிக் கிடக்கும் ஒரு வீட்டைத் திறந்து ஒவ்வொரு கதவாக, ஜன்னலாகத் திறந்து வைத்துப் போகும்போது ஏற்படும் வெளிச்சம் போன்றது அகநாழிகை பொன் வாசுதேவன் கவிதைகள். ப்ரியம் பற்றிய கவிதைகள் கதகதப்பை வழிய விடுவது போல இழப்பும் இயலாமையும் பற்றிய கவிதைகள் கொஞ்சம் நசநசக்கும் குளிர் போலக் குத்துகின்றன.

திங்கள், 23 டிசம்பர், 2013

அகநாழிகையில் அன்னபட்சி.


அகநாழிகையுடனான அறிமுகம் எனக்கு டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பட்டது. டிசம்பர் 2009 இல் வலைத்தளம் ஆரம்பித்து 6 மாதங்களில் நான் கலந்து கொண்ட முதல் புத்தக வெளியீடு அதுதான்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

வலைப்பதிவ சகோதரர்களின் புத்தக வெளியீடும் அகநாழிகை புத்தக உலகமும்.

அகநாழிகை புத்தக உலகம் சைதாப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வலைப்பதிவர் சகோ . தேவன் அதன் ஒவ்வொரு புத்தகத்துக்கும் சிறிய அழகான விமர்சனங்கள் கொடுத்து வருகிறார். அங்கே  வலைப்பதிவர் மாநாட்டுக்கு முதல் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வலைப்பதிவ சகோதர்கள் சதீஷ் சங்கவி மற்றும் வீடு திரும்பல் மோகன் குமாரின் புத்தகங்கள் வெளியிடப்படுகிறது.

சனி, 26 டிசம்பர், 2009

அகநாழிகை ..... ஒரு புத்தகப்பிரியர்

புத்தகங்களைப் படித்துவிட்டு அலமாரிகளிலோ,
ட்ரங்குப் பெட்டிகளிலோ ,எடைக்கோ போடுவது
அறிந்ததுதான்... ஆனால் படுக்கையிலும் இரண்டு
அடிக்கு புத்தகங்களுடன் வாழ்பவர் சாரு.. இதில்
எனக்கு அவர் மீது ஏற்பட்ட வியப்பைவிட அவர்
மனைவி அவந்திகாவின் மேல்தான் வியப்பு
அதிகம்.. "மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்".. "சாருவுக்கு மகனும் கூட"..

சாருவின் சில பல கதைகள் கட்டுரைகள் படித்து
இருந்தாலும் ... நன்கு பழகிய ஒருவரை நீண்ட
நாட்களுக்குப் பின் ஒரு ரயில் பயணத்தில் சந்தித்து
கையசைத்துப்பிரியும் வலியை ....அவர்
வார்த்தைகளில் படித்தபோது இன்னும் அதிகமாக
உணர முடிந்தது ...

வியாழன், 24 டிசம்பர், 2009

அகநாழிகை ....ஆரியம் திராவிடம் அற்றது அன்பு

நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து படித்து
வருவது ஆனந்த விகடனும், குமுதமும். அடிக்கடி
மாற்றலாகும் தருணங்களால் ஆசையாய்
வாங்கப்பட்ட புத்தகங்கள் அதிசோக சுமையாகும்
போது [பள்ளி கல்லூரி புத்தகங்கள் தனிசுமை
வேறு] புதிதாய் புத்தகம் வாங்கும் பழக்கம்
சிறிது குறைந்து போனது உண்மை.

எங்கிருந்தாலும் படிக்கும் விகடன் குமுதங்களில்
தன்னுடைய காரசாரமான எழுத்துக்களால்
என்னையும் என் மகனையும் கவர்ந்தவர்
திரு ஞாநி அவர்கள்.. தான் கூறும்கருத்துக்களில்
வலிமையாக நிற்கும் தன்மை, உறுதி படக்கூறுவது,
எளியோருக்கு இரங்குவது, அநேக தருணங்களில்
சரியானவற்றையே கூறுவது என என் ஆரம்ப கால
பள்ளி ஆசிரியர்களின் தொகுப்பாக இருக்கிறார்..

புதன், 23 டிசம்பர், 2009

அக நாழிகை புத்தக வெளியீடு ...ஒரு பார்வை

கிட்டத்தட்ட பதினைந்து தினங்களுக்கு முன் சக
வலைப்பதிவர் பாராவின் கருவேல நிழல்
அகநாழிகை புத்தக வெளியீடு என் வீட்டுக்கு
அருகிலேயே நடப்பது மாலை ஒரு ஐந்து
மணியளவில் தெரிந்தது...

கல்லூரிக்காலத்துக்குப் பின் எழுத்துலகுக்கு ஒரு
ஆறு மாதங்களுக்குமுன் தான் அடி எடுத்து
வைத்ததால் சகவலைப் பதிவர்களை அறிந்து
கொள்ளும் நோக்கிலும் திரு பாராவின்
கையெழுத்துடன் அவர் படைப்பை வாங்கும்
நோக்குடனும் சென்றேன் .திடீரென மாலையில்
மழை இருந்ததால் நான் கொஞ்சம் அங்கு
செல்லத்தாமதம் ஆகிவிட்டது .
Related Posts Plugin for WordPress, Blogger...