எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 பிப்ரவரி, 2021

பொங்கல் - சில குறிப்புகள்.

 163.

நுழைபுலம் குழுமத்துக்காகப் பொங்கலும் நாங்களும்  என்ற தலைப்பில் உரையாற்ற எடுத்த குறிப்புகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். 





அரக்கர்களை சம்ஹாரம் செய்யும் பண்டிகைகள் சிலவுண்டு. ஆனால் பூமியின் செழிப்பத்தை, வளர்ச்சியை நல்வாழ்வைக்கொண்டாடும் பண்டிகை பொங்கல். நமக்கு உணவுபடைக்கும் பூமியைச் சாமியாய் வணங்குதல், இது நன்றி தெரிவிக்கும் திருவிழா, அறுவடைத் திருநாள், தமிழர் திருநாள், பானைகளின் கழுத்தில் மங்கல மஞ்சள் திருப்பூட்டும் நாளாம் நாளாம் திருநாளாம். 



சூரியனை, நிலத்தைப் பயிர் பச்சைகளைக் கால்நடைகளை, அவற்றுக்காகப் பாடுபடுபவர்களை வணங்கிச் சிறப்பிக்கும் விழா. நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது ஒரு கவிதை. 

வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக்குடி உயரும் குடிஉயரக் கோன் உயர்வான். ஆனல் இன்றோ மழை பெய்து நெற்பயிர் சாய்ந்து கிடக்கிறது. விளை பொருட்களுக்கு உரிய தொகை கிடைப்பதில்லை. இந்தச் சூழலில்தான் நாம் இந்த நன்றி தெரிவிக்கும் விழாப் பற்றிப் பேசக் குழுமி இருக்கிறோம். 

பாவைநோன்பு, தை நீராடல் முடிந்து  வருவது பொங்கல். Solstice sun move - சூரியனின் நகர்வு. 

எங்க வீட்டுப் பொங்கலில் 1761* இரும்பு அடுப்பில் கோலம் போடுதல் உண்டு. 1762*முறித்தவலை, 1763*விளக்கிடும் சட்டியிலும் கோலமிடுவோம். 1764*சங்கு ஊதுதலும் உண்டு. சங்கு ஊதிப் 1765*படைப்போம். 1766*பால் பொங்கியவுடன் கரும்பு வெட்டுவோம். 

1767*.கொடியில் சில, செடியில் சில கிழங்கில் சில, காய்கள் பயன்படுத்துவோம்.  பலாக்காய் கூட்டு.  நாலு பொரியல் மூன்று குழம்பு, கூட்டு, ரசம் பருப்பு அப்பளம் உண்டு.

1768*.மாட்டுப் பொங்கல் என்றால் மாட்டுக்கு பூஜை செய்து மஞ்சள் குங்குமம் தீபம், பொங்கலிட்டு ஊட்டுதல். 

தஞ்சாவூரில் எங்கள் தாத்தாவுக்கு வயல் இருந்தது. சாலியமங்கலம்.  இப்போது இல்லை. விற்றுவிட்டோம். 

மூன்றாவது வருடத்தில் மேஜர் சேலை கட்டிக் கல்லூரியில் குழுவாகப் பொங்கலிட்டது மறக்கமுடியாத அனுபவம். கேண்டில் லைட் செரிமனி என்று ஒன்று உண்டு. இந்தப் பொங்கல்பற்றி சுசீலாம்மாவின் புது நாவலான தடங்கள் தடம் பதித்துள்ளது. 

நமக்குப் பொங்கல் என்றால் ஒரு பொங்கல் மட்டுமில்லை. அதாவது தைப்பொங்கல் போல 1769*சித்திரைப் பொங்கல் உண்டு. ஆடி மாதம் 1770*அம்மன்கோவில்களில் பொங்கல் வைப்பதுண்டு. ( கத்தோலிக்கக் கிறித்துவர்கள் லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் வைப்பார்கள். ). சித்திரைப் பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், கணுப்பொங்கல்,  1771*குலதெய்வம் கோவிலில் பொங்கல். 

மேலும் திருமணமானதும் 1772*மணவறைப் பொங்கல் உண்டு. அதை பெண்ணின் &மாப்பிள்ளையின் மாமன் மனவி ( அம்மான்பெண்டிர் ) வைப்பார்கள்.  அதன்பின் திருமணம் ஆனதும் 1773*முனியையா கோவிலில் முதல் பொங்கல், அப்புறம் வீடுகளில் 1774*கார்த்திகைப் பூசை என்றால் முருகனுக்குப் பொங்கல் வைப்பதுண்டு. 1775*பள்ளயம் போடுவதுண்டு. 

வருடாவருடம் ஒரு கூடையில் மஞ்சட்டி அகப்பை, சிராட்டைத்தூள், அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் கொண்டுபோய் 1776*பிள்ளையார் கோவிலில் பொங்கல் இடுவார்கள். சாமிவீட்டில்/ 1777*படைப்பு வீட்டில் பொங்கல், அதன்பின் வீட்டில் பொங்கல் வைப்பார்கள் அம்மா வீட்டில்.  1778*பால் பொங்கிருச்சா எனக் கேட்பதும் உண்டு. 1779*பொங்கல் சீர், 1780*பொங்கப்பானை, 1781*கொப்பி கொட்டுதல், 1782*பொங்கல் காசு என்பதெல்லாம் இங்கத்திய நடைமுறைகள். 

1783*குடிபுகுதல், திருமணம் அகியவற்றின்போதும் பொங்கலிடுவோம்.

புறநானூற்றில் 22 ஆம் பாடல் ‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம்போல’ என்று குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவைச் சாறு கண்ட களம் என வர்ணிக்கிறார். 

கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த சீவகசிந்தாமணி பொங்கல் பற்றி “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்நீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” என பொங்கலைக் குறிப்பிடுவதில் இருந்தே அதன் தொன்மையை அறியலாம்.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன.

  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடைக்கால சோழர் காலத்தில் பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது. மணிமேகலையில் இந்திரவிழாவாக 28 நாள் கொண்டாடப்பட்டதாகக் குறிப்பு உள்ளது. கிராமங்களில்  மாமன்மார் தமது முறைப்பெண்களுடன் 1784*ஆவாரம்பூ பறிக்கச் செல்வார்கள். 

பொங்கலுக்கு அடுத்த நாள் ஆநிரைகளின் விழா அதாவது மாட்டுப் பொங்கல். பால் பொருட்கள், உரங்கள் தந்து விவசாயத்துக்கும் உழைத்து தம்மைச் செழிப்பாக வைத்திருக்கும் கால்நடைகளை கௌரவிக்கும் தினம். 1785*கட்டுத்துறையில் நிற்கும் மாடுகளின் ( எருதுகள், பசுக்கள் ) கொம்புகளில் வர்ணம் தீட்டி, 1786*குளிப்பாட்டித் திலகமிட்டு துண்டு மாலை போட்டுப் பூஜை செய்து தீபம் காட்டிப் பொங்கல் படைப்பார்கள். 1787*இன்று கொம்பில் அல்லது மாலையில் பரிசப்பணம் கட்டி ஜல்லிக்கட்டு, 1788*மஞ்சு விரட்டு ஆகியனவும் நடைபெறும். 

1789*ஊனையூர், சிராவயல் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் மஞ்சுவிரட்டு, ஜட்கா ரேஸ், கோழிச்சண்டை, கிடாச்சண்டை உண்டு.

 நப்பின்னையைத் திருமணம் செய்ய கிருஷ்ணரே ஏழு எருதுகளை அடக்கியதாகப் புராணம் சொல்கிறது. உறியடித்தல் போன்ற விழாக்களும் நடைபெறும். தென்னை ஓலையில் தீப்பிடித்து மாடுகளை மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்து ஊரெல்லையில் கொண்டுபோய்ப் போடுவார்கள். ஸ்பானிஷ் போன்ற நாடுகளில் கூட எருது அடக்கும் திருவிழா புல் ஃபைட் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

கொங்கு நாட்டில் பட்டி நோம்பி பிரசித்தம்.  1790*கட்டுத்துறையில் மாடுகள் வளர்த்து வருதல் இங்கே காரைக்குடியில் அக்கால நடைமுறை. தழுவு சோறு கொடுத்தல், கொல்லேறு தழுவுதல், கணுப்பிடி, முன்னோருக்குப் படைத்து வழிபாடு, குலவையிடுதல், கும்மியடித்தல், கோலாட்டம், ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டு/ஏறுதழுவுதல், உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், ஆவாரம்பூ பறித்தல், இளவட்டக்கல் தூக்குதல்ஆகியன பொங்கல் கொண்டாட்டங்களைச் சேர்ந்தவை. பொங்கல் ஒருநாள் பண்டிகை அல்ல. அது ஒரு தொடர் கொண்டாட்டம்.

கலித்தொகை, ஆய்ச்சியர் குரவை- சிலப்பதிகாரம், மலைபடுகடாம் ஆகியவற்றில் ஏறுதழுவுதல் பற்றிக்குறிப்பிடப்படுகிறது. 

கிருஷ்ண அவதாரத்தில் இன்னொரு சமயத்திலும் சூரிய வழிபாடு சூழ்வினை போக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறான் கோவிந்தன். தன் ப்ரியத்துக்கு உரிய நாரதரை, தன் மகன் சாம்பன் (ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்) கேலி செய்ததால் கோபம் கொண்டு, பெருநோய் பீடிக்க சாபமிட்டான் சக்ரதாரி. மகன் தவறுணர்ந்து சாபவிமோசனம் வேண்டும்போது மக்கள் நதிக்கரையில் பொங்கல் இடும்போது அந்த அடுப்பின் புகைபட்டால் நோய் நீங்கும் என்றார்.

காணும் பொங்கலன்று ”காக்கபிடி கணுபிடி” என கலர்கலரான சித்திரான்னம், காய், வாழைப்பழம், மஞ்சள் இலை, இஞ்சி கலந்து கணுபிடி எனப் பிடித்துப் பெண்கள் தங்கள் சகோதரனின் நீண்ட ஆயுளுக்காக வேண்டிக் கொண்டு பறவைகளுக்கு உணவளிப்பார்கள். அன்று மாக்கனுமா என்று ஆந்திராவில் அசைவம் உண்பதும் உண்டு. இன்று கூட்டாஞ்சோறு ஆக்கி நதிக்கரைகளுக்கு குடும்பத்தோடு எடுத்துச்சென்று உண்பதும் உண்டு. 

காணும் பொங்கலன்று உறவினர்களைக் காணச் செல்வார்கள். சிதம்பரம் போன்ற ஊர்களில் கோயில்களில் பெண்கள் குழுமி கூடை வைத்துச் சுற்றிக் கும்மி, கோலாட்டம் அடித்துக் கொண்டாடுவார்கள். ஏனைய பெண்கள் இக்கூடைகளில் காய்கறிகளைப் போடுவார்கள். 

சூரிய வழிபாடு இதிகாச புராணங்களான மகாபாரதம் , இராமாயணம் , காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி , மணிமேகலை(யில் 28 நாட்கள் இப்பொங்கல் விழா ) ஆகியவற்றில்  கொண்டாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அடுத்துத் திருவள்ளுவர் தினம்

தை முதல்நாள்தான் நமக்கு உத்தராயணம் தொடங்குகிறது. சொல்லப்போனால் அதுதான் நமக்குப் புத்தாண்டு ஆரம்பம். 

1031. திருக்குறள் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர், 

எனவே நமக்கு உணவு படைக்கும் அவர்களைத் தெய்வமாகத் தொழுது நாம் பின் செல்ல வேண்டும். 

எனவே வேளாண் பெருமக்கள் காப்பீடு செய்திருந்தால் பொதுப் பேரிடர் நேரும்போது அவர்களுக்கு அந்தக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பதை வேளாண் மையங்கள் அறிவுறுத்த வேண்டும். எனவே இந்த உழவர்கள் வாழ்வை மட்டுமல்ல நமது வாழ்வையும் புதுப்பிக்கும் இந்தத் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம். 

இதையும் பாருங்க. 


மரபும் அறிவியலும். பொங்கல். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

 

1. ஆச்சியும் அய்த்தானும்

 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

 

3. அயித்தையும் அம்மானும்.

 

4. ஆயாவின் வீடு.

 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

 

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

 

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

 

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

 

10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

 

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

 

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

 

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

 

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

 

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

 

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

 

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

 

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

 

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

 

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

 

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

 

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.

 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

 

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

 

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!!

 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

 

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

 

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

 

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும். 

 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

 

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.

 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

 

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்.

 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்.

 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

 

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

 

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

 

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

 

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

 

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.

 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

 

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

 

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

 

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

 

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்.

 

50. கோவிலூர் மியூசியம்.

 

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

 

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.

 

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

 

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

 

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.

 

58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.

 

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

 

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.

 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

 

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

 

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

 

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.

 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.

 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.

 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

 

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )

 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.

 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

 

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.

 

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும்.

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும்.

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-

 

81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச்சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.

 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.

 

87. இந்த சீர் போதுமா ?!

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு. 

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.

 

97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.

 

98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.

 

99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .

 

100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.

 

101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.

 

102. பழம்பெரும் வீடுகள்.

 

103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.

 

104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.

 

105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.

 

106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.

 

107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.

 

108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்

 

109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.

 

110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.

 

111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.

 

112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.

 

113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.

 

114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.

 

115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.

 

116. காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.

 

117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.

 

118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.

 

119. காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.

 

120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.

 

121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.

 

122. கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.

 

123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.

 

124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.

 

125.காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.

 

126.காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்

 

127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.

 

128. காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.

 

129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும்.

 

130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

 

131.காரைக்குடி முனியையா கோயில்.

 

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

 

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

 

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

 

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

 

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

 

137. வட்டாரப் பழமொழிகள் - 4.

 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

 

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

 

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

 

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

 

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

 

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

 

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

 

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

 

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

 

147. பேர் பெற்ற வீடு.

 

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

 

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

 

150. பூசைச் சாப்பாடு.

 

151. அரசாணிக்கால் ஊன்றுதலும் மாத்துக் கட்டுதலும்.

 

152. பூரங்கழித்தலும் பெண் எடுக்கிக் காட்டுதலும்

 

153. மணவறைச்சடங்கும் மாமவேவும்.

 

154. பணத்திருப்பேடும் குடிவழியும்.

 

155. ஸ்ரீதனப் பணமும், காய்ச்சி ஊற்றுதலும்

 

156. பிள்ளை எடுக்கிக் கொடுக்கும் துண்டும் சிட்டிச்சாமான்களும்.

 

157. குளுதாடிகளும் காய்கறி மரவைகளும்.

 

158. நாலு கட்டு உள்ள கோட்டையூர் வீடு.

 

159. படைப்பு வீடு சில க்ளிக்ஸ்.

 

160. முன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.

 

161.ஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்

 

162.காப்புக் கட்டுப் புதுமையும் கார்த்திகைப் புதுமையும் சுவீகாரப் புதுமையும் திருவாதிரைப் புதுமையும்

 

163.பொங்கல் - சில குறிப்புகள்

 

164.போகணியும் காப்பித்தட்டும் பால்பானைச் செம்பும் கூஜாவும்

 

 

 

டிஸ்கி :- இவற்றையும்பாருங்க.

 

1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம்

 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

 

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

 

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

 

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

 

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

 

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

 

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

 

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

 

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

 

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

 

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் )

 

13. வைரமே வைரம்...

 

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்.

 

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

 

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...