எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஏப்ரல், 2016

நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.

681. சின்னச் சின்ன விஷயங்களால் சின்னச் சின்ன விசாரிப்புக்களால், அக்கறையால் வாழ்க்கை சுவாரசியமாகிவிடுகிறது.. :)

happy weekend makkas.

682. எப்ப பார்த்தாலும் ஒரு சாக்ஸ் மட்டும் காணாம போயிடுதே.. கால் முளைச்சு போயிடுதா.. பசங்க போட்டா வாஷிங் மெஷின் தின்னுடுதா..

683. கை வைக்கிற இடத்துல எல்லாம் கோக் டின்னும், சிதறிக் கிடக்கும் சிப்ஸும், வாஷிங் மெஷின்ல போட்டதா இல்லையான்னு தெரியாத துணிகளும், ஆயிரம் செண்ட் பாட்டில்களும், 10 விதமான ஹேர் ஆயிலும் இருந்தா நிச்சயம் நீங்க இருக்கது பாச்சிலர்ஸ் வீடா இருக்கும். பேலசைக் கூட குப்பைத் தொட்டியா மாத்தும் இவங்க உங்க பசங்களாயிருக்கும் பட்சத்துல அந்த கோக் டின்னாலேயே ரெண்டு போடலாமான்னு வரும்.. :)


684.  /// Chinniah Kasi
March 18, 2012 at 1:22pm ·
தேனம்மை ஆச்சிக்கு வணக்கமும், நன்றியும்!
"அது ஒரு கனாக்காலம்" .....பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சில நாட்களுக்குக் குடிக்கவும்,சமைக்கவும்.நல்லவேளை தண்ணீர் தூக்க குடிதண்ணீர் ஊரணிக்கு பித்தளை குடமும் புளியுமாக போக வேண்டாம்.அங்கெ செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளேபோய் தெளிந்த தண்ணீர் மோந்துக்கிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்த்தை இல்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதை இருந்தது. (இது அவர் தினமணி கதிரில் எழுதியுள்ள சிறப்பு பரிசு பெற்ற சிறு கதையின் ஆரம்பம். ...... இது கதை அல்ல நிஜம். அந்த கதையே நிஜம்தான்! அதற்கு சிறப்பு பரிசு என்பதைத்தான் ஏற்க இயலவில்லை- பரிசுகளுக்கே சிறப்பு சேர்க்கும் எதார்த்தம் அது!, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குடும்பங்களில் ஆண் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் ஒவ்வொரு நாட்களிலும் நடைபெறும் மனங்களை பதறக் கரைக்கும் நிகழ்வுகளே)!

நான் இங்கே இதை பதிவதற்கான நோக்கம். எனது அழியாநினைவை மேலும் தூண்டிவிட்டார்! செட்டியார்களின் வீடுகள் போன்றதுதான் ஏறக்குறைய அந்தப் பகுதி மிராசுகளின் வீடுகளும். அப்படி ஒரு வீட்டிதான் எனது தாயார் பிறந்தார். தாயை பெற்ற எங்களது ஆயாவே எங்களை வளர்த்தார்! அந்த வீட்டின் ஒவ்வொரு அடுப்படியும் 30 க்கு 40 அளவுள்ளவை. மொத்தம் 3 அடுப்படிகள். அப்படியான ஒரு கூட்டுக்குடும்பம் அது. எனது தாயார் என்னையும் சேர்த்து 10 குழந்தைகளை அந்த வீட்டின் வடமேற்கு அடுப்படியில்தான் பெற்றெடுத்தார். இந்தோ அந்த வீடு ஆச்சி தேனம்மை குறிப்பிடுவதைப்போல் உயர்ந்த மண் மேடாகவே உள்ளது. காரணம் அரசாங்கத்தின் விவாசயக் கொள்கை என்பது இதன் ஊடான ஒரு உண்மைக் கதை..
நான் ஒவ்வொருமுறை ஊருக்கு போகும்போதும் நான் பிறந்த அந்த மண் மீட்டப் பார்த்து இரு துளிகள் கண்ணீராவது என்னை அறியாமலேயே வருகிறது, இது ஒரு தொடர்கதை. ராமனின் கதை அல்ல, உண்மையான விவசாயியின் கதை. அதுவும் நம்பிக்கை அல்ல, உண்மை!
நான் சொல்ல வந்ததோ "காசாணி அண்டாவை நான் குளியல் குளமாக மாற்றி உள்ளே குதித்து நீந்தியது, எங்கள் ஆயா, ராஷ்கோல் குடிக்கிற தண்ணீரை கெடுத்து விட்டானே என்று விரட்டியபோது, அம்மணமாகவே வளைவை சுற்றி ஓடியதும், வழுக்கி கீழே விழுந்ததில் நெற்றிப் பொட்டில் விழுப்புண் பெற்றதும் நீந்காநினைவாக
அடையாளம் காட்டுகிறது.
இங்கே இதுவும்கூட அவ்வளவு முக்கியம் உள்ள செய்தி அல்ல. "மிராசின் வீடு அல்லவா அது! கூட்டு மாட்டுவண்டி கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் அல்லவா! இல்லை என்றால் அவர்களின் கொவ்ரவம் என்ன ஆவது? ( அங்கு ஏன் இள வயதில் ஏற்படுத்திய தழும்புகள் கூட எனது இன்றைய மாறுதலுக்கான ஒரு காரணமாக இருக்கலாம் - உறுதியாக என்னால் சொல்ல இயலவில்லை, காரணம் அப்போதைய வயது அது) நெற்றிப்பொட்டில் அடிபட்ட பொழுது (2 முறை, அதே இடம்) என்னை வண்டியில் உட்காரவைத்து கானாடுகாத்தான் ஆஸ்பத்திரிக்கு பதறிய மனதோடு மாடுகளை விரட்டிய படிக்காசு அண்ணனை மறக்க இயலவில்லை. அவர் இப்பொது உயிருடன் இல்லை என்பது மட்டுமே தெரியும். அவரது வாரிசுகள் எங்கோ வெளி நாட்டில் கொத்தனார் வேலை செய்கிறார்களாம்! பண்ணைஅடிமை முறை ஒழிப்பு அவர்களை விடுவித்ததில் ஒரு மகிழ்ச்சி! அவர்களை ஒரு முறையாவது சந்திக்க ஆசைபடுகிறேன், என் வாழ்நாளில் இயலுமா என தெரியவில்லை. எனது படிக்காசு அண்ணனின் வாரிசுகள் அல்லவா? ////

685. உரையாடப் பிள்ளைகள் ஒரு போதும் விரும்புவதில்லை.கணினியே கதியென்று கட்டிப் பிடித்துத் துயில்கின்றார்.என் செய்வேன் ரோகிணியே. என் செய்வேன் சொல் மாயம்.:)

686. அசை நல்லது.
அளவுக்கதிகமாய்
நசை மீறும் வரை.
கழிவரல் இனிது
ஒல்காத் துயரில்
உளம் மூழ்கும்வரை.
மடலூர்தல் மிடிமை
மிக்கூறும் மனம்
சாழலில் தாழும் வரை.


687.  கம்பர் விழாவில் நோக்கர்களின் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. நானும் நேற்று வாக்களித்தேன். கவிதாயினி வள்ளி முத்தையாவுக்குப் பிறகு கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன் என்று வாக்களிக்க அழைத்தார்கள். . 49 நோக்கர் பெருமக்களில் ஒருவராகத் தேர்வு பெற்று வாக்களித்தது இன்ப அதிர்ச்சி !!!

688. நந்தா விளக்கு விருது - 2016 திகசியின் நினைவாக அளிக்கப்படும் விருதினைப் பெறும் எங்கள் அன்பிற்குரிய மணி சார் அவர்கட்கு வாழ்த்துகள்.

689. Dhavam seivathai Vida kadinamanathu pesamal (maunamai ) iruppathu.

‪#‎chatterbox‬-thath- piths.

690. Oorayiram parvaiyilee un parvaiyai nan ariven. I mean like ai sonnen.

691. சிலபேர் நிஜ ஐடியா ஃபேக் ஐடியான்னே தெரில. ஆனா நட்பு அழைப்பு வந்திட்டே இருக்கு. பட் சிலர் நம்ம நட்புல வந்ததும் நம்ம நட்புக்களோடயும் நட்பாகிடுறாங்க. ‪#‎வாழ்க_நட்புத்_திருடர்கள்‬.

692. ஒருத்தருக்கே 10க்கும் மேல ஃபேக் ஐடி இருக்கமுடியுமா.. ஓ மை கடவுளே. !

693. உண்மைதான் ரவிநாக் ! சீக்கிரம் இத விட்டுப் போக நினைக்கிறேன். ஆனா பொழுதுபோக்கும் சோம்பேறியாகி இங்கேயே சுத்துறேன்.

#முகநூல் சிக்ஸாக்.

694. எத்தனை பொய்கள்
எத்தனை பொய்கள்
சித்தம் பேதலிக்கும்
எத்தனை பொய்கள்.

எத்தனை வார்த்தை
எத்தனை வார்த்தை
அத்தனை குளிர்நஞ்சு
எத்தனை வார்த்தை.

எத்தனை உண்மை
எத்தனை உண்மை
மத்தனை மதியள்
எத்தனை உண்மை

695. like kammiyayittu varuthey.. ellarum maranthuttangka pola iruky.. adikadi absent aaga koodthu.. appuram.. theeya velai seiyanumoo..:)

696. என்னவோ ஏதோ எண்ணம் பிறழுது ..

697. வளர்ந்தாலும் நாம் இன்னும் சிறுபிள்ளைதான்..

698. உப்பிட்டவர்களின்
உணர்வுகளுக்கேற்ப
வாலசைக்கிறது நாய்.

699.Kovama irukkavangakitta pesatheenga. Nalla kachu kachunnu kaaychi oothiruvaanga. Thiru thirunnu mulichutu vilakkam koduthalum thittuthan vilum. Thevaiya ithellam.
😢

700.''துன்பம் வரும் வேளையில்தான் உங்கள் பக்கம் உண்மையிலேயே யார் இருக்கிறார்கள் என்ற உண்மை புரியும்..'

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.
 

5 கருத்துகள்:

  1. பல்வேறு சுவையான விஷயங்களுடன் கூடிய பதிவு. 684 சம்திங் ஸ்பெஷல். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. பல்வேறு விஷயங்கள்... வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் சுவாரஸ்யம் அதுவும் முதல் இரண்டும் 686 எல்லாம் ரசித்தோம்..

    பதிலளிநீக்கு
  4. நன்றி விஜிகே சார்

    நன்றி குமார் சகோ

    நன்றி துளசி சகோ

    பதிலளிநீக்கு

  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...