எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 அக்டோபர், 2019

கருணை விழிகள் – ஒருபார்வை

கருணை விழிகள் – ஒருபார்வை

இராஜேஸ்வரி கோதண்டம் அவர்கள் நிறைய நூல்களை மொழிபெயர்த்துள்ளார். கிட்டத்தட்ட 100 நூல்களுக்கு மேல் இருக்கும். இவருடைய சரளமான மொழிபெயர்ப்பினால் அவை நமக்கு மொழிபெயர்ப்பு என்றே தெரியாதவண்ணம் நம் தமிழ் மண்ணின் கதைகள் போல் இருக்கும். பெயர்களையும் உணவு, இடங்களையும் வைத்துத்தான் நாம் அவற்றை பக்கத்து மாநிலங்கள் என்று உணரமுடியும்

அர்த்தமுள்ள இந்துமதம் – ஒர் பார்வை.


அர்த்தமுள்ள இந்து மதம் – ஒர் பார்வை.

அர்த்தமுள்ள இந்து மதம்

கவிஞர் கண்ணதாசன் எழுதிய மனவாசம் வனவாசம் இன்னும் பல நூல்கள் படித்திருந்தாலும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற கட்டுரைகள் தொகுப்பு திரும்ப வாசிக்கத் தூண்டிய ஒன்று. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல இல்லாமல் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவர் ஆத்மார்த்தமாக நிறைய விஷயங்களை உணர்ந்து அதை விவரித்திருப்பது சிறப்பு.

இந்தப் புத்தகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட 1973 இல் இருந்து 2009 வரை 80 எடிஷன்கள்வரை பதிப்பிக்கப்பட்டிருப்பது சிறப்பு. பாவம், புண்ணியம், விதி ,ஊழ்வினை, பூர்வஜென்மம், பிராப்தம் குறித்து அநேக கட்டுரைகள் அமைந்துள்ளன. 

வியாழன், 17 அக்டோபர், 2019

மனைவி கிடைத்தாள் – ஒரு பார்வை


மனைவி கிடைத்தாள் – ஒரு பார்வை

மனைவி கிடைத்தாள்

1980 களிலேயே ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியை, மனித மன விகாரங்களை, கீழ்த்தரங்களை , தந்திரங்களை மிகத் தெளிவாகக் கூறிய கதைகள் இவை. இக்கதைகளைப் படிக்கும்போது அன்றைக்கு நேர்ந்த இப்படியும் கூட மனிதர்கள் உண்டா என்ற விவரிக்க இயலா பிரமிப்பும் சரளமான வாசிப்பும் இன்றைக்கும் நிகழ்வது அதிசயம்.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

துரோணர் சந்தித்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 37.

துரோணர் சந்தித்த சோதனைகள்.
”வில்லுக்கொரு விஜயன்” என்று நாம் அர்ஜுனன் பற்றிப் பெருமையாகக் கூறுகிறோம். இயற்கையாகவே பாண்டவரிலும் கௌரவரிலும் அவன் திறமையானவனாக இருந்தாலும் அவனை இன்னும் ஜொலிக்கச் செய்ய துரோணர் சில சோதனைகளைச் சந்திக்க வேண்டி வந்தது. அதுமட்டுமல்ல. அவர் வாழ்வே சோதனை மயம்தான் அது என்ன என்று பார்போம் குழந்தைகளே.
பரத்துவாஜ முனிவரின் புதல்வர் துரோணர். அவரின் தாய் பெயர் கிருதசி. துரோணருக்கும் கிருபாசாரியாரின் தங்கை கிருபிக்கும் திருமணம் முடிந்து அஸ்வத்தாமன் என்ற அழகான குழந்தை பிறந்தது. அவன் சிரஞ்சீவியாக இருப்பான் என்று ஈசனிடம் வரம் பெற்றுப் பிறந்தவன். துரோணர் பரசுராமரிடம் வில் வித்தை பயின்றவர். என்ன இருந்து என்ன துரோணரை வறுமை வாட்டியது.
சிறு குழந்தையான அஸ்வத்தாமன் பாலுக்கு அழும்போதெல்லாம் சாதக்கஞ்சியைப் பால் என்று புகட்டும் துயரத்துக்கு ஆளானாள் கிருபி. அப்போதுதான் துரோணருக்குத் தன் குருகுல நண்பரான துருபதன் என்ற பாஞ்சால தேச அரசன் தான் பட்டத்துக்கு வந்ததும் தன் நாட்டில் பாதியைத் தருவதாக நட்புமுறையில் சொன்ன வாக்கு நினைவு வந்தது.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களுள் ஒருவராக..

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் காரைக்குடி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்தும் இரண்டாவது புத்தகக் கண்காட்சி  - 2019, காரைக்குடி சுபலெக்ஷ்மி மஹாலில் நடைபெற்று வருகிறது.


Related Posts Plugin for WordPress, Blogger...