எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 18 அக்டோபர், 2019
கருணை விழிகள் – ஒருபார்வை
அர்த்தமுள்ள இந்துமதம் – ஒர் பார்வை.
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞர் கண்ணதாசன் எழுதிய மனவாசம் வனவாசம் இன்னும் பல நூல்கள் படித்திருந்தாலும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற கட்டுரைகள் தொகுப்பு திரும்ப வாசிக்கத் தூண்டிய ஒன்று. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல இல்லாமல் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவர் ஆத்மார்த்தமாக நிறைய விஷயங்களை உணர்ந்து அதை விவரித்திருப்பது சிறப்பு.
இந்தப் புத்தகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட 1973 இல் இருந்து 2009 வரை 80 எடிஷன்கள்வரை பதிப்பிக்கப்பட்டிருப்பது சிறப்பு. பாவம், புண்ணியம், விதி ,ஊழ்வினை, பூர்வஜென்மம், பிராப்தம் குறித்து அநேக கட்டுரைகள் அமைந்துள்ளன.
வியாழன், 17 அக்டோபர், 2019
மனைவி கிடைத்தாள் – ஒரு பார்வை
மனைவி கிடைத்தாள்
1980 களிலேயே ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியை, மனித மன விகாரங்களை, கீழ்த்தரங்களை , தந்திரங்களை மிகத் தெளிவாகக் கூறிய கதைகள் இவை. இக்கதைகளைப் படிக்கும்போது அன்றைக்கு நேர்ந்த இப்படியும் கூட மனிதர்கள் உண்டா என்ற விவரிக்க இயலா பிரமிப்பும் சரளமான வாசிப்பும் இன்றைக்கும் நிகழ்வது அதிசயம்.




