எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜனவரி, 2020

”எழுத்தும் நானும்.” உரை சவுண்ட் க்ளவுடில்.

எழுத்தும் நானும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் ”எழுத்தும் நானும் “ என்ற தலைப்பில் உரையாற்ற அழைப்பு வந்தது.

அப்போது பேசியவற்றை சவுண்ட் க்ளவுடில் மகனார் பதிந்து அனுப்பி உள்ளார். அது இதோ உங்கள் பார்வைக்கு. அதாவது கேளுங்க, கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க  :)

https://soundcloud.com/sabalaksh/thennamai-lakshmanan-ezhuthum-naanum-speech?fbclid=IwAR2GtL18PY2kU3Ku3NyVKG-v1xyFUdbV2NmVppr8PVcdRwYo2n1J7Z-q540

இதையும் பாருங்க.

”எழுத்தும் நானும்” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

புதன், 1 ஜனவரி, 2020

”எழுத்தும் நானும்” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ( காரைக்குடிக் கிளை)  கூட்டத்தில் எழுத்தும் நானும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்றது இந்நிகழ்வு.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ( காரைக்குடி-சிவகங்கை ) மாவட்டத்  தலைவர் திருமிகு ஜீவ சிந்தன் அவர்கள் உரையாடும்படிக் கேட்டு  இந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தார்கள்.

கிட்டத்தட்டப் பன்னிரெண்டு ஆண்டுகளாக காரைக்குடியில் செயல்படுகிறது இச்சங்கம் . வாராவாரம் சனிக்கிழமைகளில் த.மு.எ.ச. வின் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் முன்பு காலமான த.மு.எ.ச. நிறுவனர் டி. செல்வராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.


Related Posts Plugin for WordPress, Blogger...