கசாக்கின் இதிகாசம்
– ஒரு பார்வை.
ரவி என்னும் பெயரை மலையாளிகள் ரெவி என்று அழைக்கக் கேட்டிருக்கிறேன்.
இதில் வரும் ரவியை இரு பெண்கள் ரவி என்றே விளிக்கிறார்கள்.
ஒருவேளை அவர்கள் தமிழ்ப் பெண்களாய் இருக்கலாம் ( சின்னம்மா, பத்மா ). இந்து, முஸ்லீம் மக்கள் இவர்களூடே நாத்திகம், கம்யூனிஸத்தின் தாக்கம், கல்வியின் முக்கியத்துவம் பற்றிய அறியாமை , மலை/கிராம மக்கள் அவர்களின் பாசிபடிந்த வாழ்க்கை, பெண்களின் நிலை, பெண்களைப் பயன்படுத்தும் நிலை, எந்த மனக்கிலேசமும் இல்லாமல் பெண்களுக்கும் பல்வேறு ஆண்களுடனான உறவுகள் ஆகியன சித்தரிக்கப்படுகின்றது இந்த நாவலில்.
