அக்னிச் சிறகுகள்
– அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.
இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து தலைநகரை ஆட்சி செய்த ஒரு அற்புத மனிதர் தம் கனவுகள் நனவாக அக்னிச் சிறகுகள் கொண்டு சிகரத்தை நோக்கிப் பயணித்த கதைதான் இது.. பத்ம பூஷன் , பத்ம விபூஷன் பெற்றவர், அக்னி என்னும் ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தக் காரணமானவர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் , மாணவர்களை நெறிப்படுத்தியவர், சென்னைப் பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர் என்று சில பரிமாணங்களில் மட்டுமே நமக்குப் பரிச்சயமான திரு அப்துல் கலாமின் உள்ளக் கிடக்கைகளையும் உத்வேகங்களையும் சந்தித்த சோதனைகளையும் அதன் மூலம் நிகழ்த்திய சாதனைகளையும்இன்னும் பல பரிமாணங்களையும் இதில் வாசிக்கலாம்.
