எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 ஜனவரி, 2019

ஹோகனேக்கல் தொங்கு பாலம்.- HOGENAKKAL HANGING BRIDGE.

ஹோகனேக்கல் - காவிரி ஆறு பாயும் தமிழக கர்நாடக எல்லையில் இருக்கும் ஊர். இங்கே வட்டு எனப்படும் பரிசல் ப்ரயாணம் பிரசித்தம். இந்தியாவின் நயாகரான்னு கூட சிலாகிக்கிறாங்க. தர்மபுரியிலேருந்து பக்கம்.

அங்கே தொங்கும் பாலத்துல போய் பார்த்ததையும் அங்கே இருந்த பச்சைப் புல்வெளிகளையும் என் காமிரா கண்ணால பார்த்து எடுத்துட்டு வந்திருக்கேன் உங்களுக்காக மக்காஸ்.

தமிழ்நாடு வனத்துறை போர்டு.

வனவிலங்குகள் செல்லும் பாதை என்பதால் முன் அனுமதி பெற்றே போகணும்.


சிங்கை மாக்ரிட்சி ரிஸர்வாயர்ல எடுத்த மாதிரி இங்கேயும் இரு மந்திகளைப் படம் பிடிச்சிருக்கேன்.

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்று  பாடத் தோன்றும் பாதை.
இதுதான் அந்த தொங்கும் பாலம். முழுசா எடுக்க முடில. மக்கள் நடமாடிக்கிட்டு இருந்தாங்க.

இதுக்கும் தனியா டிக்கெட் வாங்கிக்கிட்டு போய் பார்க்கணும்.

கம்பி வலைக்குப் பின்னாடி மகா வேகத்தோட பாயும் அருவி

ஆண்களுக்குத்தனியா, பெண்களுக்குத் தனியா குளிக்குமிடங்கள்.

இங்கே பாறைகளின்பிளவில் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இந்தப் பாலம் கட்டினதுக்கு நாட்டின அடிக்கல்னு நினைக்கிறேன் இது. சரியா தெரில.
யம்மா எவ்ளோ உயரம்.

நுரையோடு அலசி வரும் மூலிகைத் தண்ணீர். குளித்தாலே புத்துணர்வும் ஆரோக்கியமும் பெற்ற மாதிரி இருந்தது,

குளிச்சு முடிச்சு வெளியே வந்தாச்சு . அங்கே ஒரு பெரிய பார்க்.பிள்ளைகள் விளையாடுவதற்காக.

பொட்டானிக்கல் கார்டன் மாதிரி நிறைய மூலிகைச் செடிகள் பேரோட வைக்கப்பட்டிருந்தன. அது போக வாத்து கொக்கு பொம்மைகளும் இருந்தன.

அங்கங்கே பொம்மைகள் அழகுக்காக.

இதுதான் எண்ட்ரன்ஸ்.
சர்வம்  பசுமைமயம்.


கொரியன் க்ராஸ் புல் வகை.

கட்டாயம் ஒரு முறையாவது உங்க குழந்தை குட்டிகளோட இந்த அருவிக்குப் போய் ஆனந்த நீராடிட்டு வாங்க. :) 

3 கருத்துகள்:

  1. துளசிதரன் : ஹொக்கேனக்கல் சென்றதில்லை. உங்கள் படங்கள் அழகாக இருக்கின்றன. ஹொக்கேனக்கலை படங்களில் பார்த்ததுண்டு...

    கீதா : படங்கள் அழகா இருக்கு தேனு. இந்த தொங்கு பாலம் பார்க் எல்லாம் நாங்க போன ரெண்டு தடவையும் இருக்கலையே...அது இருக்கும் ஒரு 15 வருஷம் முன்ன...இப்ப பங்களூ

    பதிலளிநீக்கு
  2. மிகவும் சிரமப்பட்டு எடுத்த பு.படங்கள் படங்களும் விளக்கமும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசி சகோ. அஹா பெங்களூரா கீதா. அங்கே எங்கே. ?

    நன்றி முத்துசாமி சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...