எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 அக்டோபர், 2014

ஸ்வரமும் அபஸ்வரமும்.

21. ஒரே ஆற்றின் இரு கரைகளில் எழுத்தாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும். நீரோட்டமற்ற பொழுதொன்று எப்போதோ வாய்க்கிறது.

********************************************************
22. அக்கினியாத்தாள் என் கொப்பாத்தா
முத்தாத்தா எங்க முத்துமாரி
எல்லாம் எங்களுக்கு எங்களைப் பெத்த ஆத்தாதான்.
நான் இன்றிருக்கும் நிலைக்கு என் அன்னையே காரணம். அவங்க கண்டிப்பும் அன்பும்தான் இன்றும் என்றும் எங்கள வழி நடத்துது. என்ன நால்வரா இருந்தோம் இப்ப மூவரா வாழ்த்துச் சொல்றோம்.( என் நடுத் தம்பிக்கும் சேர்த்து சொல்லிக்கிறேன் ) என்னைச் செதுக்கிய அன்னைக்கு அன்னையர்தின வாழ்த்துகள்.


***********************************************************  

23. சுய இரக்கம் மிகக் கொடுமையான நோய்.

**********************************************************

24.ஞாபகமறதி.. மிகச் சிறந்த வியாதி

********************************************************   

25. மிகச்சிறப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு விஷயம்/ கவிதை/கட்டுரை/ கதை/ பகிர்வு தனக்கான வாசகர்களைக் காலம் கடந்தேனும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்தே விடுகிறது. அப்போது அந்த விஷயத்தின் கனமும் மனமும் ஒன்றியிருக்க கருந்துளையும் பெருவெடிப்பும் மரணமும் பிறப்பும் துன்பமும் இன்பமும் ஒருசேர உணரமுடிகிறது.. விழிப்பற்ற நிலையா விழிப்பாவெனப் பகுபடாத ஒரு நிலையில் புத்தகம் சரணம் கச்சாமி..


--- தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளுமைகளைப் படிக்கப் படிக்கத் தோன்றிய எண்ணம்.


*******************************************************

26. தடைகள் இலக்கை நோக்கிய வேகத்தை நிர்ணயிக்கின்றன.

********************************************************   

27. பொங்கும் மனநிலையில் ஏதோ ஒன்றைத் தரத்துடிக்கும் அவசரத்தில் எதையோ ஒன்றைத் தந்துவிடுகிறோம்.

சிலசமயம் #ஸ்வரம்.. சில சமயம். #அபஸ்வரம்.


**********************************************************  

28. எதிர்பாராத ஒரு மரணச் செய்தி பலமணி நேரங்களுக்கு நம்மை மீளமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்திவிடுகிறது.

#அன்புசிவன் சார் என் லிஸ்ட்ல இல்லைனாலும் சகதோழ தோழியர் பதிவை படிச்சு காலையிலேருந்து அப்செட். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.


காரைக்குடி அழகப்பர் பதிப்பக உரிமையாளர் திரு நாராயணன் அவர்களிடம் முந்தாநாள் தொலைபேசினேன். என் புத்தகங்களை என் கணவர் மூலமாக அனுப்பி விற்பனைக்குக் கொடுத்திருந்தபடியால் அது பற்றி விசாரித்தேன். ட்ராவல்ல இருக்கேம்ம்மா. உங்க புக்ஸ் கொஞ்சம் போச்சு. அப்புறம் பேசுறேன் என்றார். இன்று நாகூர் ரூமி அவர்களின் சுவற்றில் நாராயணன் அவர்களின் மரணச் செய்தி. இன்று காலை முதலில் #அன்புசிவன் அடுத்து #நாராயணன். பார்த்தே அறியாதவர்களின் மரணச் செய்தியும் உலுக்குகிறது. இருவரது ஆன்மாவும் சாந்தியடையட்டும்.

********************************************************* 

29. அடிக்கிற வெய்யில்ல
*உயிர்த்திரவம் எல்லாம் சுருங்கி செத்த ஈ மாதிரி ஆயிடுவோம்போல..
* நம்ம தலைக்கு மேல நம்ம ஆவியே சுத்துறாமாதிரி ஒரே வெக்கை ஃபீலிங்.
* ஊர்ல எல்லாம் மொட்டைமாடில வத்தல் போடுவாங்க. இங்க வீட்டுக்குளேயே நாமளே வத்தலா ஆயிடுவோம்போல.
*வெளில போயிட்டு வீட்டுக்குள்ள வந்தா கண்ணுல எல்லாம் ட்ராகுலாமாதிரி ஒரே வெப்பவெள்ளம்.
*ஃப்ரிட்ஜ், கார், ஏசி இதெல்லாம் இல்லாதபோது இப்பிடி கொளுத்துச்சா வெய்யில். ?
‪#‎வெய்யில்பிதற்றல்‬

******************************************************** 

30 . நம்ம சந்தோஷத்துக்கு நாமளே சத்ரு.

*******************************************************

31. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை நட்பும். இல்லை.

*********************************************************  

32. நாம் ஒரு லைக் தலைமுறையாக உருவாகிக் கொண்டிருக்கிறோம்.

*********************************************************

33. ஒரு ஸ்டேடஸை பார்த்தவுடனே கண்ணாலேயே லைக் , டிஸ்லைக் கிளிக் பண்ற ஆப்ஷன் இருந்தா இன்னும் நிறைய ஸ்டேடஸ் படிக்கலாம்.

ஜெனரல் நாலெட்ஜை வளர்த்துக்கணும்னு அவ்ளோ ஆர்வம்


*********************************************************  

34. எந்த எதிர்பார்ப்புகளும் எந்த வெறுப்பும் இல்லாமல் அந்த அந்தக் கணத்தை சந்தோஷமா வாழுங்க.. 

*********************************************************

35.எனக்குப் பிடித்த பதிவர்கள்னு ஒரு லிஸ்ட் ரெடி செய்தேன் நேத்து. அது 100 பேரைத் தாண்டிப் போய்க்கிட்டு இருந்தது. அப்புறம் யாரையும் விட முடியல.. இங்கே போட்டு யாரும் விட்டுப் போய் இருந்தாங்கன்னா அவங்க வருத்தப்படுவாங்க. இது எதுக்கு நமக்கு.. தேவையான்னு ஜிந்திச்சுட்டு போஸ்ட் பண்ணல

*********************************************************   

37. மனக்குளத்தில் சலனக்கல்.

********************************************************

38. தேட்டம் எதுவுமின்றி பழக்கப்பட்ட பாதையிலேயே பயணிக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

********************************************************   
 
39என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள...

எத்தனை வருடங்கள் இந்தக் கோபக்காரப் பிச்சியுடன்
பொறுமையென்னும் பாசம் பூட்டி, புன்னகையும் மென்னகையுமாய் யுகம் யுகமாய்த் தொடர்கிறாய்.

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா. !.


****************************************************** 

40. சில நட்புக்கள் புதிதாய்ப் பூக்கின்றன. சில ( கருத்து வேற்றுமைகளால்) வாடிப் போகின்றன. ஒவ்வொரு வருடமும்..

முகநூல் தோட்டத்தில்.. சின்னத் தேனீயாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.

உதிர்ந்த பூக்களும் மனதோரம் மகிழமாய்.. செண்பகமாய் .. மரிக்கொழுந்தாய் மணம் வீசியபடி இருக்கின்றன.
...
புதிய ரோஜாக்களிலும் முட்கள் உண்டு..

தேனீக்குத் தேவை தேன்மட்டும்தான். அன்னத்துக்கு பால் மட்டுமே போல..

நன்றி முகநூலுக்கு,
நன்றி என் வலைப்பூக்களுக்கு,
நன்றி என் நட்பூக்களுக்கும்..வாழ்க வளமுடன்.:)
 


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

 35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

5 கருத்துகள்:

  1. அனைத்துமே ஸ்வரங்களாகத்தான் இருக்கின்றன! ஸ்வரங்களாகிப்போனதால் மிகவும் ரசித்தோம்!
    ஒன்றைத் தவிர இரு மரணங்கள்! வெயில் பிதற்றல் ரொம்பவே அருமை!

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் ரசிக்க வைத்தன... இருவரின் மரணம் குறித்த பகிர்வைத் தவிர...
    அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

    பதிலளிநீக்கு
  3. நன்றி துளசிதரன் சகோ

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அக்கா..

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

    நன்றி

    பதிலளிநீக்கு
  5. மிக அருமை குமார். மிக்க நன்றிப்பா :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...