எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சாஸ்த்ரிபவனில் மகளிர் தினத்தில்.




INTERNATIONAL WOMEN’S DAY CENTENARY 1911-2011
CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION

Equal access to education, training and science and technology:
Pathway to decent work for women

19 th - TUESDAY APRIL 2011

CONFERENE HALL- I (A- WING) DURING : 3 TO 5.30 PM
SHASTRI BHAVAN CHENNAI

WELCOME ADDRESS : MANIMEGALAI - PRESIDENT
SECRETARY REPORT : SREE KUMARI - SECRETARY.
SPECIAL ADDRESS : JAYA SHREE - JT SECRETARY.
ANNUAL REPORT : PRABHAVATHY - ORG. SECRETARY,
CULTURAL PROGRAMME ; CHILDREN AND MEMBERS.


CHIEF GUEST : SMT. KAMALA SELVARAJ . MD.DGO. PHD.
OBSTETRICIAN AND GYNECOLOGIST
A PIONEER IN INFERTILLITY TREATMENT
GG HOSPITAL -CHENNAI

TOPIC :WOMEN GYNAC PROBLEMS

FELICITATION AND PRIZE DISTRIBUTION:
SMT. THENAMMAI
JOURNALIST . FREELANCER FOR 3 TAMIL MAGAZINES.

DR. SATHYA. CGHS . DISPENSARY
SHASRTI BHAVAN

SHRI.N.V.NAGARAJAN I.I.S.
JOINT DIRECTOR
DIRECTORATE OF FIELDPUBLICIY
SHASTRIBHAVAN

VOTE OF THANKS.:

PUSHPA DEVI- Treasurer

சாஸ்த்ரி பவனில் CGWEWA வுக்காக 19 ஏப்ரல் அன்று மகளிர் தினம் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்க அழைத்திருந்தார் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள். அன்புத் தங்கை கீதாவின் மூலம் போராடி ஜெயித்த பெண்ணாக அறிமுகமான மணிமேகலை சிறந்த தோழியாகி விட்டார். டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்த விழாவில் என் கருத்துக்களை மகளிரிடம் பகிர்ந்து கொள்ளவும் வெற்றி பெற்றவர்க்குப் பரிசுகளை வழங்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அதற்கு சிறப்பு ப்ரஸ் கவரேஜாக தினமலர் நிருபரும், தீக்கதிரின் நிருபர் தங்கமும் அழைக்கப்பட்டிருந்தார்கள் .



பெண்கள் சங்கத்தில் மணிமேகலை மருத்துவ் முகாம்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் எந்தப் பிரச்சனையானாலும் முன்மொழியப்பட்டால் அதற்குத் தீர்வு பெற்றுத் தரும் வரை ஓய மாட்டார். யூனியன் தலைவி மணிமேகலையின் முன்னுரைக்குப் பின் டாக்டர் கமலா செல்வராஜ் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் காலகட்டங்களை மூன்று மூன்றாகப் பிரித்து எவ்வாறு உடல் நலன் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என எடுத்துரைத்தார். ஸ்க்ரீனில் ஸ்லைட் ஷோவாக அவர் ஒவ்வொரு நிலையையும் விளக்கியது சிறப்பு. மணிப்பிரவாள நடையில் புராண., இதிகாச ., தற்கால சமூக விளக்கங்களோடு அவர் பேச்சு மிக அருமை. ரொம்ப ஹூமரஸ் சென்ஸோடும். குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பொறுப்புகள் பற்றியும் அருமையாக பேசினார்.



நிறைய கலை நிகழ்ச்சிகள் நடந்திருந்தன். ஆனால் அன்று சிறப்பாக ஒரு முன்னோடியாக மணிமேகலை ஒரு பாடலுக்கு நடனமாடி மகிழ்வித்தார். பால் போலவே வான் மீதிலே என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்த போது அப்ளாஸ் அள்ளிக் கொண்டு போனது. பெண்கள் தங்கள் கூச்சங்களையும் தயக்கங்களையும் விட்டு வெளி வந்து தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டும் என்பது அவர் கொள்கை. மிக அருமையான நடனம் அம்மணி..:)


நடிகர் ஜெமினி அவர்களின் மகள் என்ற பந்தா எதுவுமில்லாமல் டாக்டர் கமலா செல்வராஜ் என்னுடன் உரையாடினார்கள். அவர்கள் உரை முடிந்ததும் என்னுடைய கருத்துக்களைச் சொன்னேன். டாக்டர் வெகு நேரம் எடுத்துக் கொண்டதால் மணி என்னுடைய நேரத்தை 30 நிமிடத்தில் இருந்து 10 நிமிடம் பின் ஐந்து நிமிடமாகக் குறைத்து விட்டார். கொத்துப் பரோட்டா போட்டது போல கருத்துக்களை மட்டும் கடகடவென சொல்லி முடித்தேன்.



அதன் சாராம்சம்.:- பெண்கள் தினத்துக்காக நூற்றாண்டு கொண்டாடும் வரை வந்து விட்டோம். ஆனால் இன்னும் பெண்ணுரிமை., பெண் சுதந்திரம்., பெண் கல்வி பற்றி கோர வேண்டியவர்களாய் இருக்கிறோம். பெண்கள் தங்கள் உடல் நலத்தில் முதலில் அக்கறை செலுத்த வேண்டும். தற்காலத்தில் பெண்கள் கருத்தரிப்பது தொடர்பாய் பல சிக்கல்கள் இருக்கின்றன. சுற்றுச் சூழல் மாசு., உரங்கள்.,ப்ளாஸ்டிக்., ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றால் பல்வேறு உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது.



இந்தக் கோளாறுகளைக் களைய ப்ரீ மெடிக்கல் ஹெல்த் செக்கப் ( PREMEDICAL HEALTH CHECK UP) என்ற ஒன்று பயன்பாட்டில் இருக்கிறது. இது குறித்து டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களிடமும் கேட்டால் சொல்லுவார்கள். இதன் மூலம் தைராய்டு., ப்ளட் ப்ரஷர்., டயபடீஸ்., ஃபைப்ராயிட் கட்டிகள், கருப்பை வாய் புண்கள்., ஹார்மோனல் இம்பாலன்ஸ் போன்றவை கண்டு பிடிக்கப்பட்டு பெண்கள் கருத்தரியாமையின் காரணம் கண்டு பிடிக்கப்பட்டு களையப்பட்ட பின் கர்ப்பம் தரிப்பது எளிதாகிறது. இது ஆண்களுக்கும் பொருந்தும், ஸ்பெர்ம் கவுண்ட் மற்ற உடல் கோளாறுகள் கண்டு பிடிக்கப்பட்டு களையப்பட வேண்டும். இது இருபாலாருக்கும் பொது. எனவே பெண்கள் தங்கள் உடலில் உள்ள குறைகளை இனம் கண்டு மருத்துவ உதவி பெற்று தீர்வு காண வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் சிறப்பாய் வரும். குடித்தல், புகைப்பிடித்தல் மூலமும் குழந்தைப் பேறு தாமதமாகிறது. நாம் கர்ப்பம் தரிக்க தகுதியானவர்தானா என உறுதிப் படுத்திக் கொள்ளவும் அது சம்பந்தமான சிகிச்சை மேற்கொள்ளவும் இந்த ப்ரீ மெடிக்கல் செக்கப் உதவுகிறது. எனவே கர்ப்பம் தரித்தபின் போகலாம் என இருக்காமல் திருமணமாகி ஓராண்டு ஈராண்டு ஆனபின் குழந்தைப் பேறு எதிர்பார்த்து தாமதப் பட்டால் கைனகாலஜிஸ்டிடம் முழு ஹெல்த் செக்கப் செய்து கொள்ள வேண்டும்.



குடும்பத்திலும் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டுக் கூறினால்தான் தீர்வும் தெளிவும் ஏற்படும்.



நீங்கள் இதுவரை வேலை வேலை என பிஸியாக இருந்து விட்டீர்கள். ரிட்டயர்மெண்டுக்குப் பிறகு வெறுமையான நாட்களில் என்ன செய்யப் போகிறீர்கள். இந்த சமூகத்துக்கும் உங்களுக்கும் உபயோகமான விஷயங்களில் ஈடுபடுங்கள். உங்கள் சமூக சேவைகளை இன்றே கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பியுங்கள். தோழி மணிமேகலை அட்சய பாத்திரத்தில்( ஃபவுண்டேஷன் மூலம்) தன்னிடம் உள்ளதைப் பிறருக்கு வழங்குவதைப் போல நீங்களும் படிக்க முடியாத ஒரு குழந்தையை தத்தெடுத்துப் படிக்க வைக்கலாம். அநாதை ஆசிரமங்களில் தாய் தகப்பனில்லாத குழந்தைகளுக்கு உணவு ., உடை., கல்வி வழங்கலாம். முதியோருக்கும் அதே உதவிகள் செய்யலாம்.

செய்ய என்ன இருக்கிறது என்ற விரக்தியான மனநிலை வரும்முன் உங்களை உங்கள் செயல்பாடுகள் மூலம் பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். சமூக சேவையில் ( SOCIAL CAUSE) இல் ஈடுபடுங்கள். இதுவே மகளிர் தின நூற்றாண்டு நாளில் நான் பகிர விரும்பிய செய்தி.



பரிசுகள் வழங்கி விழா முடிந்ததும் இரண்டு மூன்று பேர் சொன்னார்கள் , கர்ப்பம் தரிக்க ப்ரீ மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது பற்றி இன்றுதான் அறிந்தோம். நன்றி நல்ல செய்தி சொன்னீர்கள் என்று.

13 கருத்துகள்:

  1. நல்ல பதிவு.
    நல்ல செய்திகள்.
    நல்வாழ்த்துக்கள்.
    vgk

    பதிலளிநீக்கு
  2. வலிமையான கருத்துக்கள்.
    வழி தேர்ந்து வளம் பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. சுறுசுறுப்பாகவும் பயனுள்ள வகையிலும் பணியாற்றி வருகிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. Very active association which celebrates IWD, which falls in March, in Sept !

    Better late than never.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமை.. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. அனைத்தும் அருமை.. தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப சந்தோச்ஷம் தேனக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நன்றி ராஜி

    நன்றி நேசன்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி பெயரில்லா

    நன்றி சரவணன்

    நன்றி மாதேவி

    நன்றி நந்தா

    நன்றி ஜலீலா

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...