எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.

பணம்.. அச்சடித்த ஆயுதம்.

லேசாக THE WOLF OF WALL STREET  ஞாபகம் அவ்வப்போது அலைமோதியது. அதிலும் இதிலும் பணம் ஒன்றே வேதம். மதம் பிடித்தது போல மனிதர்களை ஆட்டி வைக்கும் பெருஞ்சுழல்.

இதுதான் சுற்றிச் சுற்றி மனிதர்களை வேட்டையாடும் ஆயுதம். ஆசை பேராசை கொண்டு துரத்த வைக்கும் பொறி.

சதுரங்க விளையாட்டில் ராஜாவுக்கு ஆபத்து நேரும்போது ராணி வந்து காப்பாற்றுவாள். ராணிக்குத்தான் எண்ட்லெஸ் பவர். எல்லாப் பக்கமும் போகலாம். இதில் அன்பு ராணியான இஷாரா தன்னுடைய அன்பு வியூகங்களால் தன்னையும் தவறான வழியில் சம்பாதிக்கும் தன் கணவனையும் அதிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறாள்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

பக்தர்களா.. பதர்களா.

மாங்காடு
திருவேற்காடு
சென்றவாரம் சென்னை சென்ற போது மாங்காடு திருவேற்காடு அம்மனைத் தரிசிக்கப் போனோம். ஆடிச்செவ்வாய் விசேஷ தினம் மேலும் ரம்ஜான் விடுமுறையானதால் கூட்டம் எக்கித் தள்ளிக்கொண்டிருந்தது.

முதலில் மாங்காடு. ப்ரகாரத்திலேயே அம்மனைப்  ப்ரதிஷ்டை செய்து சுற்றிலும் கும்பங்கள் அடுக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கும் வளையல்கள் அடுக்கிப் பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் பெண்மயில்கள்.

அங்கே மூன்று விதமான க்யூ, பொது தரிசனம், 20 ரூ டிக்கெட், 50 ரூ டிக்கெட். மூன்று சுற்றுக்களாக சுற்றிச் சுற்றி வந்ததால் கூட்டத்தைக் கண்டு மலைத்து மயங்கி அமர்ந்து இருந்தபோது  பக்கத்தில் இன்னும் இரண்டு மூன்று கோயில்களுக்குச் சென்றுவிட்டுவந்த பெண் ஒருவர் குடும்பத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வேலை கிடைச்சுட்டுது..

அன்றையப் பொழுது ரொம்ப உற்சாகமாய் விடிவதாய்த் தெரிந்தது ரவிக்கு. 
 
இன்றைக்கு இருபத்தைந்தாவது இண்டர்வியூ. எம்ப்ளாய்மெண்ட் 
எக்ஸ்சேஞ்ச் மூலம் வந்தது.
 
நாலரைக்கே விழிப்பு வந்து விட்டது. எழுந்துபோய் பல் விளக்கிவிட்டு 
உள்ளே வந்தபோது ’முணுக், முணுக்’ கித்த சிம்னியில் அம்மா 
அடுப்புப் பற்ற வைக்க முயற்சிப்பது தெரிந்தது.
 
--- “ ஏம்பா ..! இப்பவே ஏந்திருச்சிட்டே..! கொஞ்சம் இரு 
டீ போட்டுத் தாரேன்..! “ என்றூ கூறிப் பின் வீட்டுக்குச் சென்று 
100 மில்லி பால் வாங்கி வந்தாள் பத்துப் பேருக்கு டீ கலக்க..! 
 
பௌர்ணமி இரவில் நட்சத்திரமே வானில் இல்லாததுபோல் 
அம்மாவும் இருந்தாள் மழுமழுவென்று, நகையணியாத பௌர்ணமி மாதிரி.!
 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஆடி பதினெட்டும் முளைக்கொட்டும்.

ஆடிமாதம் என்றால் நமக்குத் தள்ளுபடிதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு ஆடித் தள்ளுபடி, ஆடிக் கழிவு என்று பழைய சரக்குகளை எல்லாம் விற்றுவிடுவார்கள். ஆனால் ஈரோட்டில் தாமோதர் சந்துரு அண்ணன் குடும்பத்தார் பேத்தி ஆராதனாவுடன் ஆடி 18  ஐக் காவிரியில் கொண்டாடி முளப்பாரி கொட்டி இருக்கிறார்கள். .

குடும்பத்துடன் காவிரியில் நீராடி சாமிக்குப் படையல் இட்டு முளைப்பாரிகளையும் பூரண கும்பத்தையும் வைத்து 7 சாளக்கிராமங்களுக்கு மஞ்சள் குங்குமமிட்டு கருப்பண்ண சாமியையும் காவடியையும் வைத்து தீபம் காட்டி வணங்கி  முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறார்கள்.  

வளையல் காதோலை கருகமணி பூப்போட்டு சித்ரான்னம்  படைத்து வணங்கி இருக்கிறார்கள். வீட்டில் சில நாட்களுக்கு முன் ப்ளாஸ்டிக் பேசின்களில் மண் போட்டு பச்சைப் பயிறு அல்லது 21 வகையான தானியங்களைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி முளைக்கச் செய்கிறார்கள். இதற்குத் தினமும் பூஜை செய்வார்கள். அது நன்கு உயரமாக முளைத்து எழுந்தால் அந்த வருடம்வெள்ளாமை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...