எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
KAVITHA SORNAVALLI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KAVITHA SORNAVALLI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஆகஸ்ட், 2016

கவிதா.. குமார்..

நம் நட்பில் இருந்த, இருக்கும் இருவரின் காதலை நாம் தினம் தினம் சோகத்தோடு  சுமந்தலைவது எவ்வளவு கொடிது. தினம் தினம் புறாக்கள் எச்சமிட்டு எவ்விப் பறக்கும் மொட்டைமாடியின் பெஞ்சுகளில் சிதறிக்கிடக்கும் தானியங்களும் நீரும்போலக் கலந்தழிகிறது மனது. ஒரு நெருப்பை மூடியது போல, ஒரு காட்டாற்றைக் கதவடைத்து வைத்தது போல ஒன்றரை மாதங்களாகச் சூழ்ந்து செல்லும் இவ்வேதனையைக் கடப்பதெப்படி . தினம் தினம் சோர்வுறும் மனதை எதனால் புத்துணர்வூட்டிக் கொள்வது. கவிதாவைப் போலக் குமரனின் கவிதைகளிலா..

அவளும் நானும் முகநூலில்தான் நட்பானோம்..கவிதா சொர்ணவல்லி என்ற பேர் எனக்கு மிகவும் பிடித்தது. அதுவும் அவளின் படமாக அந்த ஒற்றை மயில் மாணிக்கம் அற்புதம். அவளின் சில சிறுகதைகளைப் படித்து இப்படியும் உள்மனசை, உண்மையை அதிரடியாய்ச் சொல்லமுடியுமா என அதிசயித்திருக்கிறேன்.

குமரகுருபரனை நான் நேரில் பார்த்ததேயில்லை. ஆனால் கவிதாவின் முகநூல் எழுத்துகள் வழி பார்த்திருக்கிறேன். அவரது இரு நூல்களின் வெற்றியை அவள் கொண்டாடிய ஒவ்வொரு தருணங்களிலும் பொறாமையுற்றிருக்கிறேன். அவரின் கம்பீரத்தையும் உருவத்தையும் உயரத்தையும் சிலாகித்தபோதெல்லாம் அவளிடம் செல்லக் கோபம் கொண்டிருந்திருக்கிறேன். அது அவள் என்னிடம் கொண்ட அன்பின் பங்கீட்டுக்கான பொறாமை. அவள் பொசல் வெளிவந்தபோது நான் அவள் பக்கமில்லையே என்று மிக வருந்தி இருக்கிறேன்.

எஃப் எம் ரேடியோவில் வழக்கமாக அனைவரையும் கலாய்க்கும் பாலாஜி என்னை கவிதாவின் அறிமுகத்தில் ( சர்வதேசத் திரைப்படங்கள்பற்றிய) கருத்து கேட்டபோது  மிக மிக எளிதாகப் பேச விட்டார். முதன்முதலில் வானொலியில் என் குரலை உலவவிட்ட பெருமைக்குரியவள்.
Related Posts Plugin for WordPress, Blogger...