எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மாண்புமிகு ஆச்சி அலமேலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாண்புமிகு ஆச்சி அலமேலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 செப்டம்பர், 2024

மாண்புமிகு ஆச்சி அலமேலு

மாண்புமிகு ஆச்சி அலமேலு 

திருமதி அலமேலு அவர்கள் ஆறாவயல் மஞ்சி வீட்டில் பிறந்தவர்கள். தந்தை வேதாசலம் செட்டியார். தாயார் கனகாம்பாள் ஆச்சி. இவர்களுடன் கூடப்பிறந்தவர்கள் எட்டுப் பேர். ஐந்து சகோதரிகள், மூன்று சகோதரர்கள். இவரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர் தேவகோட்டை. இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர் அம்பத்தூரில் வசித்து வருகிறார். தமிழாசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுப் பட்டிமன்றங்களிலும் உரையாற்றி வருகிறார். பல்வேறு விருதுகள் பெற்ற இவர் சமீபத்தில் மாண்புமிகு ஆச்சி விருது வாங்கினார். இவரின் இளமைப்பருவம், ஆசிரியப்பணி, இலக்கியப் பணி குறித்துக் கேட்டபோது அவர் கூறியவற்றை அப்படியே தருகிறேன்.

”தேனினும் இனிய செந்தமிழ்” மொழியைக் கற்றதனால் பல பெருமைகளைப் பெற்ற அடியேன் பிறந்தது ஆறாவயல் என்ற சண்முகநாதபுரத்தில். வேதாசலம் செட்டியார், கனகாம்பாள் ஆச்சியின் மகளாகப் பிறந்தேன். நாங்கள் ஒன்பது பேர் உடன்பிறப்புக்கள். ஆண்மக்கள் மூவர். பெண்மக்கள் அறுவர். பெற்ற மக்கள் அனைவரையும் சிறந்த முறையில் நன்கு வளர்த்து ஆளாக்கி உரிய வயதில் திருமணமும் செய்து வைத்தனர் பெற்றோர்.

நான் பள்ளிக்கல்வி பயின்றது ஆறாவயலில். உயர்நிலைக் கல்வி காரைக்குடி மீனாக்ஷி பெண்கள் பள்ளியில் பயின்றேன். பின் காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் நான்காண்டுகள் பயின்று புலவர் பட்டம் பெற்றேன். அதன் பின் சென்னை சீமாட்டி வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி படித்து முடித்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...