எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அருண் மகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருண் மகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

குட்டிம்மாவும் குலசாமியும்.

1. செவ்வண்ணப் பறவைகளாய்
ஓடும் ரயிலுக்குள் புலம் பெயர்கிறார்கள்
கண் சிறகில் வெய்யில் விசிறிக்
கைவிரித்துத் தாவும் கைக்குழந்தைகள்.

2. காக்கையில்லாதபோது
தமக்கையின் குழந்தையை
சோறுண்ணவைக்க
அம்புலி மாமாவாகிறான்.

3. நட்சத்திரப் பருக்கைகளை
இரவுக் காக்கைக்கு வீசிவிட்டு
நிலவுக் குழந்தை துயில
மேக மெத்தையை போடுகிறது வானம்.

Related Posts Plugin for WordPress, Blogger...