எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஃபெட்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஃபெட்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 செப்டம்பர், 2012

இணையத் தமிழால் இணைவோம்.. இனிய செயலால் வெல்வோம்..(ஃபெட்னாவுக்காக எழுதியது)

இயற்றமிழ், இசைத்தமிழ் நாடகத்தமிழ் இவை அறிவோம். இணையத்தமிழும் இனிமையாக இருக்கிறது.முத்தமிழும் முக்கலையும் மூவேந்தர் காத்த நாட்டில் இணையத்தில் தமிழ் வளர்க்கும் இனிய தமிழர் நாம். உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இயல்பாய் ஆக்கியுள்ளது இணையத்தமிழ் மற்றும் வலைப்பூக்கள் என்றால் மிகையாகாது. இணையத்தமிழர்கள் பெருகி வருகிறார்கள். அவர்கேற்றாற்போல இணையத்தமிழ்ப் பகிர்வுகளும் படைப்புக்களும் ஆக்கங்களும் மெருகேற வருகின்றன.

தமிழ் கூறும் நல்லுலகில் பத்ரிக்கைகளால் அறியப்பட்டவர்கள் மட்டுமே படைப்பாளிகளாகக் கருதப்பட்ட காலத்தில் இணையம் ஒவ்வொரு தனிமனிதனின் எண்ணங்களையும் பதிவு செய்ய தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. தமக்கு தாமே ஆசிரியர்கள், தம்முடைய கருத்துக்களைத் தங்கள் வலைத்தளம், வலைப்பூ ஆகியவற்றில் முழுமையாக பகிர்வு செய்து உடனடியாக விமர்சனங்கள் பெற முடிகிறது. தங்கள் கருத்தை ஒட்டிய கருத்தோ அல்லது மறுப்புக் கருத்துக்களோ உடனேயே அறிய முடிகிறது.

சனி, 1 செப்டம்பர், 2012

கவனகக்கலை செழிக்கும் கலைசெழியனின் ஃபெட்னா அனுபவங்கள்.

கவனகக்கலையில் சிறப்பாக ஜொலித்துவரும் கலைசெழியன் அவர்கள் சமீபத்தில் ஐக்கிய அமெரிக்க குடியரசில் நடைபெற்ற ஃபெட்னாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேடையில் சிறப்பு நிகழ்வுகளை நிகழ்த்தித் திரும்பி இருக்கிறார்.

அவரிடம் சில கேள்விகள்.

1, கவனகக் கலையில் எப்போதிருந்து ஈடுபட்டு வருகிறீர்கள். அஷ்டாவதானி, தசாவதானி என்பார்கள் ஒரே சமயத்தில் நீங்கள் எத்தனை விஷயங்களை கவனகப்படுத்தி இருக்கிறீர்கள் .
Related Posts Plugin for WordPress, Blogger...