எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 மார்ச், 2011

கடல் உள்ளும் வெளியேயும்..


கடற்கரையோரம்
செல்லும் போதெல்லாம்
சுனாமியும்
சர்வதேச எல்லையுமே
நினைவை உறுத்தி..

காற்று வாங்க நினைத்து
காற்றோடு கலந்த
மூச்சை எல்லாம் உணர்ந்து..

சங்கு., சிப்பி., மணல் குத்த
அலைச்சத்தம் துரத்த
செயலற்ற பாதசாரியாய்த்
திரும்பி ஓடினேன்..
வீட்டுக் காற்றை சுவாசிக்க..

19 கருத்துகள்:

  1. சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ

    பதிலளிநீக்கு
  2. மனதினை உலுக்கிப்போட்ட கவிதை வரிகள்& படம்.

    பதிலளிநீக்கு
  3. கவிதையைவிடப் படமே கவிதை சொல்கிறது !

    பதிலளிநீக்கு
  4. மிக அருமைஆயிரம் பக்கங்கள்
    எழுதி ஏற்படுத்த முடியாத பாதிப்பை
    உங்கள் மூன்று பத்திக் கவிதை
    என்னுள் ஏற்படுத்திபோகிறது
    நல்ல படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //செயலற்ற பாதசாரியாய்த்
    திரும்பி ஓடினேன்..
    வீட்டுக் காற்றை சுவாசிக்க..//

    கவிதை அருமை....
    நெஞ்சு வலிக்கத்தான் செய்யுது.....

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி, கடலின் ரசனையினையும் அதன் பின்னே உள்ள கோர முகத்தையினையும் கவிதையில் புனைந்திருக்கிறீர்கள்.
    //

    காற்று வாங்க நினைத்து
    காற்றோடு கலந்த
    மூச்சை எல்லாம் உணர்ந்து..//

    இங்கே வார்த்தைகள் நர்த்தனமாடுகின்றன.
    கடல் உள்ளும் வெளியேயும் இயல்பான உணர்வுகளைப் பேசி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதையம்மா..திண்ணையில் வெளியாகியானதற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. //சங்கு., சிப்பி., மணல் குத்த
    அலைச்சத்தம் துரத்த
    செயலற்ற பாதசாரியாய்த்
    திரும்பி ஓடினேன்..
    வீட்டுக் காற்றை சுவாசிக்க..//

    இறுதி வரிகளின் கனம் மிக அதிகம்..

    பதிலளிநீக்கு
  9. கடல் என்பவள் அன்னை என்றாலும் கூட சில வேளை கோபத்தில் அதிகம் குமுறுகிறாள்.
    இயற்கை தான் காப்பாற்ற வேண்டும்..

    பதிலளிநீக்கு
  10. பல பெண்கள் வீட்டுக்காற்றின் அனல் தாங்காது அலுவலக நிழலில் அமர்ந்து மூச்சு விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  11. என்ன சொல்வது என தெரியவில்லை இந்த இரங்கல் சொல்வதை தவிர்த்து, இயற்கையோடு விளையாடினால் இப்படி தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி ப்ரகாஷ்..

    நன்றி கருன்

    நன்றி கலாநேசன்

    ஆமாம் ஸாதிகா..

    நன்றி மாதவி

    நன்றி ஹேமா

    நன்றி ரமணி

    நன்றி மனோ

    நன்றி நிரூபன்

    நன்றி சதீஷ்

    நன்றி குமார்

    நன்றி பாரதி

    நன்றி சிவகுமார்

    நன்றி சசி

    நன்றி ராஜி..

    பதிலளிநீக்கு
  13. கவிதை வலியை உணர்த்துகிறது... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...