எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

அத்திப்பூ

தொழில் நுணுக்கத்தோடு
ஓடி ஓடித் திரவியம் தேடி நீ..
புன்னகை தொலைத்த உன் முகத்தில்
எப்போதாவது அத்திப்பூ மலர்ந்து..
உன் வருகைக்காய்க் காத்துப்
பூ பூத்துப் போன பின்
யுகங்களுக்கொரு முறை
வருவாய் அத்தி பூத்ததாய் ..
பூக்களின் நறுமணம் போல்
உனக்கென்றும் ஒரு ப்ரத்யேக வாசனை..

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா
நலமா .? எப்படி இருக்கிறீர்கள் .?.உங்கள் அன்பு
தோய்ந்து நானும் நலம் அம்மா...

உங்கள் எழுத்துப்பயணத்தில் எங்கேனும் இளைப்
பாற வேண்டுமெனில் எங்கள் இதயம் இருக்கிறது
அம்மா.. அருவி போல அணைத்து ஓடி கூழாங்
கற்களாய்க்கிடந்த எங்களை ( நான்., உமாமகேஸ்.,
சிகப்பி., இன்னும் பலர்) சாளக்கிராமமாய்
மாற்றினீர்கள்...கனவுச் சிறகு பொருத்தி திசை
யற்றுத்திரிந்த பறவைகளான எங்களை புலம்
பெயர் பறவைகளாக்கி பெயர் பெறும் பறவை
களாக்கினீர்கள்..நிமிர்ந்த நன்னடை., நேர்கொண்ட
பார்வை.,கம்பீரக்குரலால் எங்களை ஆட்சி செய்த
பேரரசி ...!!!குறைவொன்றுமில்லை அம்மா.
உங்களின் நிறைவான அன்பில் நான் ...!!!
.

புதன், 24 பிப்ரவரி, 2010

நாராயணன் O M S

சில பேரை நாம் சந்திக்கும் போது தெரியாது .,
இவர்கள் நம் வாழ்வில் சில நாட்கள் உடனிருந்து
உதவி செய்து நீங்காது நினைவிலிருப்பார்
களென்பது. .அவர்களுள் ஒருவர் திரு நாராயணன்
அவர்கள்.. நடைப்பயணமாக 36 ஆண்டுகள் சென்று
வந்த பின் தன்னுடைய அனுபவமும் வழிகாட்டு
தலும் பிறருக்கு உதவட்டுமென சேவை செய்பவர்
களுள் இவரும் ஒருவர். "ஓம் சேவகா சர்வீஸ்"
என்பது இவரது சேவை அமைப்பு..
இவர் ஏற்பாடு செய்த வேனில் எங்கள் பொருட்
களை எல்லாம் எடுத்து ஒரு ட்ரைவர் .,ஒரு
உதவியாளர் உடன் வந்தார். கிளம்பும்போது
நம்முடைய படுக்கை .,உடைகள்., பை போன்ற
சாமான்களை ஏற்றிவிட வேண்டும்.. கையில்
ஒரு ஜோல்னா பை போதும்..

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

என்னவளே

என்நேரமும் உன் பார்வைத்தோணியில்..
பத்திரமாய் விழிபிடித்து மிதந்துகொண்டு..

அவ்வப்போது நான் என்ற முகமூடி மாட்டி..
அன்பின் கழுத்தை இறுக்கக் கட்டி..

உன் புன்னகையையும் பார்வையையும்
தரையில் வீசி மிதித்து
காணாதது போல் புறந்திரும்பி..

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

எப்ப வருவ....?

கர்ப்பந்தான் பத்து மாசம்..
உன்னைக் காணவுமே பத்து மாசம்..
வருடத்தில் இரண்டு மாசம்..
வந்து செல்லும் என் வசந்தம்..
நீ இட்ட முத்தம்., பட்ட எச்சில்
எதுவுமே காயலயே..
டிக்கெட்டுப் போட்டாச்சு என்றதுமே
இருண்டதய்யா என் கண்ணு ...
குழம்புதான் வைக்கிறேன்
பொடியும் புளியுமில்லாம..
Related Posts Plugin for WordPress, Blogger...