எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஆகஸ்ட், 2014

காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.


காவிரிப் பூம்பட்டினம் மழைமேக மூட்டத்தோடு கூடிய ஒரு விடுமுறைநாளில் சென்றுவந்தோம். கடல்கொண்ட மிச்சம்தான் இருக்கிறது.

ஒரு லைட் ஹவுஸும், சிலப்பதிகார நினைவுத்தூணும் நிறுவப்பட்டுள்ளது.

1973 இல் அமைக்கப்பட்ட கண்ணகி சிலை 1994 இல்  கடல் சூழ்ந்து அழிக்கப்பட்டு உள்ளது. கரை அரிப்பால் கண்ணகி சிலையை இடம் பெயர்த்து மாற்றி உள்ளார்கள்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

உள்ளங்கைக்குள் ஓவியம்.

மரக்கிளையிலிருந்து மிதந்து
மடிசேர்ந்த அதைக்
கவனமாகப் பற்றினேன்.
மெத்தென்ற தன்மை
அது இருந்த இடத்தின்
மென்மையைச் சொன்னது.
வெதுவெதுப்பு அதன்
உயிர்த்துடிப்படங்காததை உணர்த்தியது.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இருபத்து நாலு மணி நேரமும்...

இருபத்து நாலு மணி நேரமும்.
********************************

கரண்ட் கட்..

இன்வர்டரும் கீ கீ என்று கத்தியபடி நின்றுவிட்டது.

வேறு வழியில்லாமல் வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டு கம்ப்யூட்டரில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தாள் லதா. பாட்டரி இன்னும் தீராமல் இருந்தது. சீக்கிரம் முடிக்கவேண்டும்.

நிழலாடியது. பக்கத்து வீட்டக்கா கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

சனி, 9 ஆகஸ்ட், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். வல்லி சிம்ஹன். இசையோடும் இசைபடவும் வாழ்தல்.

 முகநூல் வலைத்தள நட்புகளில் அனைவருடனும் நாம் பழகினாலும் சிலர் மட்டுமே சிறப்பிடம் பிடிப்பார்கள். ஏனென்று தெரியாது பார்த்த முதல் நாளே பாசமாகி விடுவோம். அந்த வகையில் எனக்குப் பிடித்தவர் வல்லிம்மா.

வல்லி சிம்ஹன் என்ற பெயரில் என் வலைத்தளத்தில் பின்னூட்டமிட்டிருந்தாலும் முகநூலில் அறிமுகமானபின்தான் அவரோடு உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அன்பு, அறிவு, இன்சொல், பாந்தம், பாசம், பரிவு, கம்பீரம், தாய்மை இவை எல்லாவற்றும் அர்த்தம் கொடுத்தவர். இன்னொரு அம்மா போல எல்லா வலைப்பதிவர்களையும் பாசத்தோடு விளிப்பார். கேட்கும்போதே( படிக்கும்போதே )  மடியில் தலை சாய்ந்து படுக்கும் குழந்தையாகிவிடுவோம். 

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

தேன் பாடல்கள்.. தலைவர்களும் தலைவிகளும் கெமிஸ்ட்ரியும்.

91. இனி நான் என்பது நீயல்லவோ தேவதேவி..

கமலும் நிரோஷாவும் பாடும் பாடல். வழக்கம்போல தலை கெமிஸ்ட்ரியில் நூத்துக்கு நூத்துச் சொச்சம் வாங்கும் பாடல். குட்டிக் குழந்தை போல் இருப்பார் நிரோஷா.

92. எங்கிருந்தோ ஆசைகள். எண்ணத்திலே ஓசைகள்.
சந்திரோதயத்தில் ஜெயாம்மா பாடும் பாடல். காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜெயாம்மா, எம்ஜியார் காட்சி அழகு. இருவர் முகமும் கவர்ச்சியும் காந்தமும் பொருந்தியது.

93. இளமை கொலுவிருக்கும்.
சாவித்ரிம்மாவும் ஜெமினியும் நடித்த படம். அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ, அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ. என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...