மூங்கில்
குருத்துக்கள்
“மூங்கில் இலைக் காடுகளே.. முத்து மழை மேகங்களே..பூங்குருவிக்
கூட்டங்களே கேளுங்கள். மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலைதான் சொர்க்கம் என்றால் மேளம்
என்ன தாலி என்ன கூறுங்கள்.. “
“என்ன பாட்டு இதுன்னு கேட்டுட்டு
இருக்கே.” குளித்துவிட்டு ஈரத்தலையை சரியாகத் துவட்டாமல் சிலிப்பியபடி படுக்கையறைக்குள்
நுழைந்த ஸாம் அங்கே இருந்த ரிமோட்டை எடுத்து படக்கென்று டிவியை அணைத்தான்.
சோஃபாவில் கால் மடித்து ஒரு பக்கம் சாய்ந்தமர்ந்திருந்த தேவியின் கண்களில் கண்ணீர் வடிந்த தடம். முகம் ஊதிப்போய்க் கிடந்தது. இரவு பூரா தூங்காமல் கண்கள் உப்பி வீங்கி இருந்தன.