எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மணிவாசகர் பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிவாசகர் பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

தமிழ் வளர்த்த நகரத்தார்கள் நூலில் என்னைப் பற்றியும்.

மகிழ்வுடன் பகிர்கிறேன் .

நகரத்தார் திருமகள் இதழில் முனைவர் கரு முத்தையா அவர்கள் " தமிழ் வளர்த்த நகரத்தார்கள் " என்ற தலைப்பில் எழுதி வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மணிவாசகர் பதிப்பகத்தால் நூலாக்கம் செய்யப்பட்டு காவிரிப் பூம்பட்டினம் பட்டினத்தார் திருவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது. என்னைப் பற்றியும் ஒரு கட்டுரை அதில் இடம்பெற்றுள்ளது பெரும்பேறு. நன்றி திருமதி ரோஜா முத்தையா, திரு.கரு முத்தையா & மணிவாசகர் பதிப்பகம்.  

பதிப்பகம் :- மணிவாசகர் பதிப்பகம்
நூலின் பெயர் :- தமிழ் வளர்த்த நகரத்தார்.
நூலின் விலை ரூ. 150/-.

வியாழன், 19 ஜூன், 2014

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை.

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது.

நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது குறித்தும் அவர்கள் வணிகம், தெய்வ வழிபாடு, கொண்டுவிக்கப் போய் பொருளீட்டியது,தரும வட்டி வாங்கியது, சிவாலயங்கள் அமைத்தது, தருமமே குலதர்மமாகக் கொண்டது, வேத பாடசாலைகள், பசுமடங்கள் அமைத்தது, குளங்கள் வெட்டியது, அன்னதான மடங்கள் அமைத்தது, இறைத் தொண்டு  பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது
Related Posts Plugin for WordPress, Blogger...