சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்
சூதாட்டத்தில் லாபமும் வரும், நட்டமும், கேடும் கூட வரும். ஒருவர் இதை எல்லாம் அறிந்து அதிலிருந்து விலகி இருக்கவேண்டும். ஆனால் பஞ்சபாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடித் தம் நாடு, படை, பட்டாளம், சேனை, செல்வம் அனைத்தையும் இழந்தார்கள். அவர்கள் உடனே இருந்த கிருஷ்ணர் சூதாடினால் கேடு வரும் என அறிந்திருந்தும் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை என்ற எண்ணம் ஒருவர் மனதில் பல்லாண்டுகாலமாய் ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகணத்தில் அதை கிருஷ்ணரிடமே கேட்டுவிட்டார். அதற்கு கிருஷ்ணர் அளித்த பதில்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதுதானே குழந்தைகளே.
கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சகோதரர் தேவபகாரியின் மகன் உத்தவர். அவர் இளம்பருவத்தில் கிருஷ்ணனுக்குத் தேரோட்டியவர். கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து தன் அவதாரப் பணியும் முடியும் தருவாயில் உத்தவரிடம் ”உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் அதைத் தரச் சித்தமாய் இருக்கிறேன்.” என்கிறார்.