எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாண்டவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாண்டவர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 நவம்பர், 2023

சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்

 சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்


சூதாட்டத்தில் லாபமும் வரும், நட்டமும், கேடும் கூட வரும். ஒருவர் இதை எல்லாம் அறிந்து அதிலிருந்து விலகி இருக்கவேண்டும். ஆனால் பஞ்சபாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடித் தம் நாடு, படை, பட்டாளம், சேனை, செல்வம் அனைத்தையும் இழந்தார்கள். அவர்கள் உடனே இருந்த கிருஷ்ணர் சூதாடினால் கேடு வரும் என அறிந்திருந்தும் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை என்ற எண்ணம் ஒருவர் மனதில் பல்லாண்டுகாலமாய் ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகணத்தில் அதை கிருஷ்ணரிடமே கேட்டுவிட்டார். அதற்கு கிருஷ்ணர் அளித்த பதில்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதுதானே குழந்தைகளே.

கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சகோதரர் தேவபகாரியின் மகன் உத்தவர். அவர் இளம்பருவத்தில் கிருஷ்ணனுக்குத் தேரோட்டியவர். கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து தன் அவதாரப் பணியும் முடியும் தருவாயில் உத்தவரிடம் ”உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் அதைத் தரச் சித்தமாய் இருக்கிறேன்.” என்கிறார்.

திங்கள், 2 அக்டோபர், 2023

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

 மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேரின் பெயர்கள் தெரியுமா ?

குருக்ஷேத்திரப்போர் என்பது பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த ஒரு மிக பெரிய போர்.  இதில் தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சாகதேவன் எனப் பாண்டவர்கள் ஐவரின் பெயர்கள் நமக்கு தெரியும். ஆனால் கௌரவர்கள் 100 பேரின் பெயர் தெரியுமா ? சொல்லப்போனால் அவர்களுக்கு 101 ஆவதாக ஒரு சகோதரியும் உண்டு.

அவர்கள் யாரென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

Related Posts Plugin for WordPress, Blogger...