என் வாழ்வின் சிறப்பான வழிகாட்டியாக, நட்பாக, ஆசானாக பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து புத்தகங்களே இருந்து வருகின்றன. படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதிலேதான் தற்போதைய சூழலில் சிரமமாக இருக்கிறது. மேலோட்டமாக படிப்பதில் விருப்பமில்லை. கிடைக்கும் நேரங்களிலும் கைப்பேசியில் படிப்பதில், பார்ப்பதில் அதிகம் போய்க் கொண்டிருந்தது. இனி புத்தகங்கள் படிக்க நேரம் ஒதுக்க வாய்ப்பு அமையுமென நம்புகிறேன்.
முதலாவதாக எழுத்தாளர் தேனம்மை லெஷ்மணன் Thenammai Lakshmanan அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பு நூலான சிவப்பு பட்டுக்கயிறு நிறைவு செய்தேன்.(புத்தகம் வாங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. முழுமையாக நிறைவு செய்து ஒரு வாரமாகிறது. )