எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நீலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

தினமும் அன்னமிட்ட திருமங்கை மன்னன். தினமலர் சிறுவர்மலர் - 52.

தினமும் அன்னமிட்ட திருமங்கை மன்னன்

எவ்வளவு செல்வந்தர் ஆனாலும் ஒருநாள் உணவளிக்கலாம். இருநாள் உணவளிக்கலாம். தன் வாழ்நாள் பூராவும் வருடம் முன்னூற்றறுபத்தியைந்து நாளும் அடியார்களுக்கு அன்னமிட்ட திருமலை மன்னன் பற்றித் தெரியுமா குழந்தைகளே. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
சோழ நாட்டின் திருவாலி திருநகரி என்ற ஊருக்கு அருகிலுள்ள திருக்குரையலூரில் பிறந்தவர் நீலன் என்பார். இவர் இவரது தந்தை சோழமன்னனிடம் பணிபுரிந்தவர். அதனால் இவரும் தக்க பருவம் எய்தியதும் சோழனிடம் வீரராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். தன் திறமையினால் படிப்படியாக உயர்ந்து படைத்தலைவரும் ஆனார். இவர் எதிரிகளைத் துவம்சம் செய்வதைப் பார்த்து வியந்து சோழ மன்னரே இவர் எதிரிகளுக்குக் காலன் போன்றவன் என்ற அர்த்தத்தில் இவருக்குப் “பரகாலன் “ என்று பட்டம் வழங்கினார்.
ஒரு போரில் இவரின் வீரதீரப் பராக்கிரமத்தைப் பார்த்து அதிசயித்த சோழ மன்னன் இவரைத் தளபதி பொறுப்பிலிருந்து விடுவித்து இவரது தகுதிக்கேற்ப திருமங்கை என்ற நாட்டின் மன்னனாக ஆக்குகிறார். குறுநில மன்னர்கள் என்றால் அவர்கள் அரசர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டும். திருமங்கை என்ற குறுநிலத்தின் மன்னரானதால் இவர் திருமங்கை மன்னன் என்று அழைக்கப்படுகிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...