வானம் வெய்யிலைத் துறந்திருந்த அந்த ஜூலை மாத 12- ஆம் நாள் காலைப்பொழுதில், நமது மண்வாசம் இதழின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது மதுரை தானம் அறக்கட்டளையின் நிர்வாகக் கட்டிடத்தில். மிக அருமையான அந்தக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 300 சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், நமது மண்வாசம் இதழில் பங்களிப்புச் செய்துவரும் பேராசிரியர்களும், மருத்துவர்களும், இதழாளர்களும் எழுத்தாளர்களுமாக அரங்கை நிரக்கச் செய்திருந்தார்கள்.
காலை பத்து மணிக்கு திரு பால்பாண்டி அவர்கள் இறைவணக்கம் பாடினார்கள். சிறப்பு விருந்தினர்கள் முனைவர் திரு. கு. ஞானசம்பந்தன் அவர்கள் குத்துவிளக்கினை ஏற்ற தொடர்ந்து ஐந்து திருமுகங்களையும் மருத்துவர் வடிவேல் முருகன் மற்றும் சுய உதவிக்குழுக்களின் தலைவி சாந்தி மதுரேசன் ஆகியோர் ஏற்றினார்கள்.