தமிழ் சினிமாவில் பெண்கள்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமாயிற்று செல்லுலாயிட் பிம்பங்களின் ஆட்சி. இருபது வருடங்கள் பேசாப்படம் அதன் பின்பேசும் படமாக வந்து ஒரு நூற்றாண்டுக்குள் இந்தியர்களின் வாழ்விலும் செல்ஃபோனிலும் புகுந்து விட்டது.
சினிமாவை முதன் முதலில் உருவாக்கியது ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் என்றபோதும் அதன் கோட்பாட்டை உருவாக்கிய பேல பெலாஸ் என்பார் ”நம்மை இனங்காணுதல் “ சினிமா என்ற கலையில்தான் நிகழ்கிறது என்கிறார். உண்மைதானே சாதாரணப் பெண்களும் சினிமா ஹீரோயின்கள் போல் உடை உடுத்துவதும் நகைகள் போடுவதும் இன்றும் உள்ளதுதானே.
ஆதியில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். மணிமேகலை, ஔவையார், காரைக்காலம்மையார் ஆகிய கதாபாத்திரங்களாக நடித்த கேபி சுந்தராம்பாள் ஆண் வேடமுமேற்று நந்தனாராகவும் நடித்திருக்கிறார். இவர் சட்ட மேலவை உறுப்பினராகி பத்மஸ்ரீ விருதும் பெற்றார். அதே போல் சேவாசதனம், பக்த மீரா, சாவித்ரியாக நடித்த எம் எஸ் சுப்புலெட்சுமி நாரதராக ஆண் வேடமேற்றும் நடித்திருக்கிறார். பாரத ரத்னாவும் ஆகியிருக்கிறார்.
ஹேமாமாலினி, வைஜெயந்திமாலா, விஜயசாந்தி ரம்யா, போன்றோர் எம்பிக்களாகவும். பலர் தேர்தல் பிரச்சாரத்தோடும் நின்று விட கொள்கை பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஜெயலலிதா முதல்வரானார்.