எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சந்திரஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திரஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 மார்ச், 2019

நல்லவனுக்கு நேர்ந்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 9.

நல்லவனுக்கு நேர்ந்த சோதனைகள்.
ருவன் எவ்வளவு நல்லவனாக இருக்கிறானோ அவ்வளவுக்கு சோதனைகளை அனுபவிக்க நேரும். ஆனாலும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டும் தீய வழியில் செல்லாமல் நல்லவழியிலேயே வாழ்ந்த இராஜா ஒருவரின் கதையைக் கூறுகிறேன் கேளுங்கள் குழந்தைகளே.
குந்தள ராஜ்ஜியம் என்றொரு தேசம் இருந்தது. அந்த நாட்டில் அப்போது யுத்தம் நடந்துகொண்டிருந்தது. பட்டத்து ராணியோ கர்ப்பமான வயிற்றோடு பிரசவ வலியில் தவித்துக் கொண்டிருக்கிறாள். மன்னனோ பகைவர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான்.
பிரசவ நேரம் நெருங்குகிறது. மன்னனோ யுத்தத்தில் மாண்டுவிட்டான், ராணியோ ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டு அவளும் மரித்து விடுகிறாள். பகை மன்னன் நாட்டை ஆக்கிரமிக்கிறான். பாவம் அந்தக் குழந்தை. தந்தையும் தாயும் மரிக்க நாடும் பறிபோகிறது. நம்பிக்கையான பணிப்பெண் ஒருத்தி அக்குழந்தையை அயல்தேசத்துக்கு எடுத்துக் கொண்டு போய் வளர்க்கிறாள்.
ஐயகோ என்ன துர்ப்பாக்கியம் அந்தத் தாதியும் சில நாட்களில் இறந்து விடுகிறாள். அக்குழந்தையை அங்கேயிருந்த மக்களே வளர்க்கத் தொடங்குகிறார்கள். நதியில் குளித்து கரையில் விளையாடி அம்மக்கள் கொடுத்த உணவை உண்டு வளர்கிறது அக்குழந்தை.
Related Posts Plugin for WordPress, Blogger...