எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 ஜூன், 2020

எனது பதிமூன்றாவது நூல் “ ஆ.. ஆ.. ஆ.. ஆத்திச்சூடிக் கதைகள் “

அதென்ன ஆ..ஆ.. ஆ.. என்று கேட்கின்றீர்களா. ”ஆராவமுதனும்,ஆதித்யாவும், ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்” என்ற தலைப்பைத்தான் டிஸ்கவரி உரிமையாளர் சகோதரர் வேடியப்பன் அவர்கள் ஷார்ட் ஃபார்மில் ஆ.. ஆ.. ஆ.. ஆத்திச்சூடிக் கதைகள் என்று மாற்றிக் கொடுத்துள்ளார். :)



ஆராவமுதன் என்ற தாத்தா தனது பேரன் பேத்தியான ஆதித்யா மற்றும் ஆராதனாவுக்குச் சொல்லிய கதைகள் இவை என்பதால் அப்படி ஒரு பேர் வைத்தேன்.  ஆத்திச்சூடியின் முதல் பத்துக் கதைகள் இங்கே நூலாக்கம் பெற்றுள்ளன. படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

திருமதி ஜோதி சுந்தரேசன் தேவகோட்டையில் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவர் தனது பள்ளியின் ஒருநிகழ்வில் கலந்து கொள்ள என்னை ஜூன் மாதம் அழைப்பதாகக் கூறினார். அப்போது அவரது மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்து அதில் வென்றவர்களுக்கு இந்நூலைப் பரிசளிக்கலாம் என்று கூறி இருந்தேன். கொரோனா எப்போது முடிந்து இதெல்லாம் எப்போது சாத்யமாகப் போகிறதோ தெரியவில்லை.

அதற்குள் நாமெல்லாருமே பேப்பர் புத்தகம் படிக்கும் வழக்கத்தை இழந்துவிட்டிருப்போமெனத் தோன்றுகிறது. ஹ்ம்ம். பார்ப்போம்.இன்னொரு விதத்தில் கொரோனா ஓய்வு காலம் வாசிப்பை ஊக்கப்படுத்தியும் இருக்கலாம்.  

5 கருத்துகள்:

  1. அருமையான முயற்சி
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி மாதேவி.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...