எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளிக்குத் தங்கம். நம்தோழியில்.

இன்றைய நிலைமையில் தங்கத்தோட விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய விலை ஏறினாலும் நகைக் கடைகளில் கூட்டம் இருந்துகிட்டுத்தான் இருக்கு. இது முதலீடுன்னும் ., இல்லை வேஸ்ட்ன்னும் சொல்றவங்க இருக்காங்க. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் கரன்சியையும் தீர்மானிக்கிற விஷயமா தங்கம் இருந்துகிட்டு இருக்கு. அரசாங்கத்தின் தங்கத்தின் இருப்பைப் பொறுத்து அந்த நாட்டின் கரன்சி மதிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் எவ்வளவு ஏறினாலும் தங்கத்தை வாங்குவோம். அது சிறந்த முதலீடுன்னு சொல்ற இருவரையும் ., இது முதலீடு இல்லைன்னும் சொல்றவங்க கிட்ட கருத்து கேட்டோம். முதலில்.,



1. சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ரகு கீதா தம்பதி:-

இவர் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணிபுரிகிறார்.போனஸ் வந்தா மட்டுமில்ல. ஒவ்வொரு மாதமும் தங்கமா வாங்குவதா சொல்கிறார்.

”இதுக்கு ரீசேல் வால்யூ இருக்கு. தேவை ஏற்பட்டா உடனடியா பணமா மாத்திக்கலாம். இப்போ 2.500 ரூபாய் இருந்தா ஒரு கிராம் தங்கம் கூட வாங்கலாம். ஆனா இடம் வாங்கணும்னா நிறைய பணம் தேவை. இதுக்கு நல்ல அப்ரிஷியேஷன் இருக்கு. 2004 இல் என் திருமண சமயத்தில் ஒரு வாரத்துக்குள்ள அது விலை நல்ல ஏற்றம் இருந்தது. வாங்கலாம்னு நினைச்சு தாமதமாகி அதிக விலையில் வாங்கினோம். ஒரு கிராம் 600 ரூபாய்க்கு என் பொண்ணு பிறந்தப்ப வாங்கினேன். இப்ப விலை 2,500 க்கும் மேல. அதுவும் இந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலையில் நல்ல ஏற்றம். கிட்டத்தட்ட 4 மடங்கு ஏறி இருக்கு.

முதலீடுன்னு பார்த்தா நான் மாதா மாதம் உள்ள தொகைக்கு ஒரு கிராம்., 2 கிராம்., 3 கிராம்னு காயினா வாங்குவேன். என் மனைவி கொஞ்சம் அதிகமா பணம் செரும் போது வளையல் தோடுன்னு வாங்குவாங்க. கடையில் சீட்டுக் கட்டி வாங்குவதை விட இப்படி மாதா மாதம் வாங்குவது சிறந்தது . ஏன்னா நாம பணம் கட்டி முடிக்கும் போது வருட முடிவில் நிச்சயமா தங்கத்தோட விலை உயர்ந்திருக்கு. நல்ல ஃப்ளக்‌ஷுவேஷன் இருக்கு. எப்பவும் உயர்ந்துகிட்டேதான் இருக்கு. இறங்குவதே இல்லை. லிக்விடிட்டி இருக்கு. எனி டைம் மணி என்பது இதோட ஈர்ப்பு. பேப்பர் கோல்ட் அல்லது பங்குச் சந்தை கமாடிட்டி மார்கெட்டில் வாங்குவது இல்லை. பங்குச் சந்தையில் இரும்பு ( IRON & STEEL) கமாடிட்டீஸ் மட்டும்தான் வாங்குவேன். நிலத்துக்கு பதிலா தங்கத்தை பார்களாகவும் பிஸ்கட்டுக்களாகவும் வாங்குவது லாபம். ”

இவரின் தந்தை நாகேஸ்வரம் சொன்னார். தங்கத்தை விலையேத்துவதே இந்த பங்குச்சந்தை வியாபாரம்தான். அதை கண்ட்ரோல் செய்தா விலை சமனமாகும்.

2. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பத்மா., இளங்கோ தம்பதி:-

இவர் SCHWING STETTER INDIA PVT LIMITED. GERMAN MNC யில் பணிபுரிகிறார். மிகக் கணிசமான போனஸ் வருடா வருடம் க்ரெடிட் ஆகும். இவர் தன்னோட பணத்தை டாக்ஸ் சேவிங் பாண்ட் மற்றும் தங்கக் காயின்களில் முதலீடு செய்கிறார்.

”நான் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. இடம்., பாண்டுகள்., ஷேர்களுடன் பார்க்கும்போது இதுக்கு குறைந்த முதலீடே தேவைப்படுது.டாக்குமெண்ட்ஸ்., ரெஜிஸ்ட்ரேஷன்., அப்புறம் பலவித நடைமுறைகள் ., அலைச்சல்கள்., நடைமுறைச் சிக்கல்கள் இல்லை. நிலத்தில் முதலீடு செய்வதை விடப் பாதுகாப்பானது. வால்யூ அப்ரிஷியேஷன் இருக்கு ( ஷேர்ஸ் போலில்லாமல்). ஈஸியா., மாத்திக்கலாம்., அல்லது வித்துக்கலாம்

முக்கியமா அணிந்து சென்றால் சோஷியல் ஸ்டேடஸை அதிகமாக்குது. செண்டிமெண்ட் ஒரு காரணம். தங்கத்தில் முதலீடு செய்தால் நம் நிலை எப்பவும் பாதுகாப்பானது., பினான்ஷியல் ஸ்டேடஸ் இறங்காது என இன்னொரு காரணம். மூன்றாவாது காரணம்தான் முக்கியம்.. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா.. அவ திருமணத்துக்கு தங்க நகைகள் அவசியம்.எனவே நான் தங்கத்துல முதலீடு செய்றேன். இப்பவே வாங்கி வச்சிட்டா திருமண சமயத்தில் நகைகளுக்காக பெரும் தொகையை ஒதுக்க வேண்டாம்.

3. சென்னை கே. கே. நகரைச் சேர்ந்த ராதா ராமகிருஷ்ணன் தம்பதி.:-

இவங்க இல்லத்தரசி. இவங்க கணவர் ஏர் கார்கோவில் பணிபுரிகிறார். மிகச் சிறப்பான பெயிண்டிங்குகள் செய்து கண்காட்சியில் வைக்கிறார். அடுக்கடுக்காகவும்., செட்டு செட்டாகவும் நகைகள் வாங்கியும்.,அணிந்தும் மகிழும் பெண்களுக்கு மத்தியில் ஒரு மலையாளியான இவர் தங்கம் வாங்கவே மாட்டேன் என்று சொன்னது நம் கவனத்தைக் கவர ஏன் வாங்க மாட்டீங்கன்னு கேட்டோம். மலையாளிகள் மிக அருமையான நகைகள நிறைய அணிந்து கொள்வார்களே உங்களுக்கு ஏன் அந்த விருப்பம் இல்லையா என கேட்டோம்.

என் அம்மா என் திருமணத்தின் போது கொடுத்த நகைகள்தான். அதையே அணிவதில்லை. அதன்பின் ஒரு துளி தங்கம் கூட வாங்கியதில்லை. பொதுவா நான் ஜீன்., டாப்ஸ்., லெக்கின்ஸ் போன்ற மாடர்ன் உடைகள்தான் அணிவேன். அதுக்கு ஏத்த டெம்பிள் ஜுவல்லரி., வெள்ளி நகைகள் அணிவேன். ஃபாஷன் ஜுவல்ஸ்தான் இந்த வகை உடைகளுக்குப் பொருத்தமாகவும்., நன்றாகவும் இருக்கும். இது நல்ல வெரைட்டியா டிரஸ்ஸுக்கு மாட்சிங்கா அணியலாம் என இவர் சொல்லும் நகைகளும் 2000., 3000 ரேஞ்சில் இருக்கிறது.

முதலில் தங்கத்தில் செய்வதை முதலீடுன்னு சொல்லாதீங்க.. விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அது சிறந்த முதலீடே அல்ல. அது வாங்கும் காசில் பல விதமான பாஷன் ஜுவெல்ஸ் வாங்கலாம். புடவை போன்றவற்றுக்குக் கூட கிராண்டாக காண்பிக்கும். லெஹங்கா. போன்ற பார்ட்டி வேர் ட்ரெஸ்களுக்கும்., ஃபாஷன்வேர்களுக்கும்., டிசைனர் ட்ரஸ்களுக்கும் டெம்பிள் ஜுவல்ஸ் பொருந்தும் அளவு தங்கம் பொருந்தாது. தங்கம் என்றால் ஒன்றையே அணியவேண்டும். இது டிசைன் டிசைனாக அணியலாம். நாங்க பொதுவா இன்வெஸ்ட்மெண்ட் என்றால் இடம்., நிலம்., வீடு ஆகியவற்றில்தான் செய்வோம். இது விலை ஏறும் அளவு தங்கம் ஏறுவதில்லை. ஷேர்ஸ்., பேப்பர் கோல்ட் போன்றவையும் வாங்குவதில்லை. அப்புறம் முக்கியமான விஷயம் எனக்கு ரெண்டு பசங்கதான். பொண்ணு இல்லை..


இவங்க மூன்று பேரும் தங்கம் வாங்குவது தொடர்பா சொன்னதை ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் திருமதி சித்ரா நாகப்பனிடம் சொல்லி அவங்க ஆலோசனைகளை சொல்லுமாறு கேட்டோம்.

திருமதி சித்ரா நாகப்பன்.:-

எல்லாருடைய முதலீட்டிலும் தங்கத்துக்கும் ஒரு பங்கு நிச்சயமா இருக்கணும்.

முதலில் நெசப்பாக்கம் ரகு கீதா தம்பதிகள் சொல்வது போல இப்ப பணம் அவசரமா தேவையா இருக்குன்னு சொல்லி வாங்கின கடைகளில் கூட உடனடியா விக்க முடியாது. ஏன்னா அவங்க எங்களுக்குத் தங்கம் தேவையில்லைன்னு வாங்குவதில்லை. அல்லது நிறைய கழிவுகள் போக ரொம்ப குறைந்த தொகைக்குதான் விக்க முடியும். இன்றைய மார்க்கெட் ரேட் போகாது. பழைய தங்கம் எடுக்கும் விலை என்பது மிகக்குறைவுதான். அதிலும் கழிவு போக லாபம் கம்மிதான்.

சில கடைகளில் நீங்க இன்னொரு நகையா மாத்திக்கலாம் ஆனா தங்கத்தை விக்க முடியாது. ரீசேல் வால்யூ என்பது சும்மா சொல்லலாம். ஜுவல்லரியா வாங்குவது இன்வெஸ்ட்மெண்ட் அல்ல. அதுவும் பட்டுப்புடவை., டிசைனர்வேர் உடைகள் போல உபயோகத்துக்குத்தான்.

ஈ கோல்ட்., ஈ சில்வர்., பேப்பர் கோல்ட் போன்றவைதான் சிறந்த முதலீடு. தங்கமா வாங்கி விற்பதில் 15 % வரை ஏறினால்தான் லாபம் பார்க்கமுடியும். ஆனால் ஈ கோல்ட் அல்லது பேப்பர் கோல்டில் 1 % மட்டுமே கழிவு/கட்டனம். வாங்கின அன்றில் இருந்து இன்று மார்க்கெட் ரேட் என்ன உயர்ந்து இருக்கிறதோ அந்த முழு லாபமும் ஒரு பர்சண்ட் கழிவு மட்டுமே போக நமக்குக் கிடைக்கும்.

அடுத்து பத்மா இளங்கோ தம்பதி சொல்வது என்னன்னா தங்கள் பெண்ணின் திருமணத்துக்காக சேர்ப்பது. இது போன்ற தேவைகளில் கிடைக்கும்போதெல்லாம் தேவைக்கேற்ப தங்க நகைகளாக வாங்கி விடலாம். ஆனால் நகையா வாங்குவது அலங்காரத்துக்குத்தானே தவிர சோஷியல் ஸ்டேடஸ் உயர்த்துதுன்னு சொல்ல முடியாது. இன்றைக்கு சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட தங்கம் தவிர மற்ற நகைகள் அலங்காரத்துக்காக அணிகிறாங்க. இன்றைய தலைமுறையின் ரசனை மாறிவருகிறது.

எப்பவும் தங்கம் வாங்கிய விலையில் இருந்து உயர்ந்து கொண்டேதான் போகிறதே தவிர, பெறிய அளவில் குறைவதில்லை. குறையாது என சொல்ல முடியாது. சிறிது விலை குறையவும் வாய்ப்பு இருக்கு. ஆனா சர்வதேச பொருளாதார நெருக்கடி காரனமாக, இன்றைய நிலைமையில் உயர்ந்து கொண்டேதான் இருக்கு.

இதுக்கு பொதுவா் என்ன காரணம் என்றால் சைனாவில் இப்போ தங்கம் அதிகம் வாங்குறாங்க. அந்த தங்கம் வாங்குவதில் இருந்த கெடுபிடி தளர்த்தப்பட்டிருக்கு. எனவே அதிக அளவில் தங்கம் வாங்கப்படுவதால் தங்கத்தின் விலை ஏறுகிறது.

மூன்றாவதா ராதா ராமகிருஷ்ணன் தம்பதி.. இடத்தில் நிலத்தில் செய்யப்படுவது மட்டுமே முதலீடு அல்ல. இடம்., நிலம் வாங்கணும்னா சில பல லட்சங்கள் தேவை. எல்லாராலும் அது முடியாது. மேலும் 3000 ரூபாய் இருந்தா ஒரு கிராம் தங்கம் வாங்கலாம்.

தங்கம் ஒரு நாட்டோட பொருளாதார., கரன்சி இருப்பை தீர்மானிக்கிற சக்தியா இருக்கு. சர்வதேச அளவில் யென்., யூரோ., டாலர்., கரன்சி ஆகியவற்றின் மதிப்பு குறையும்போது தங்கத்தின் மதிப்பு அதிகமாகுது. எனவே ஒவ்வொரு தனி மனிதரும் ஈ கோல்ட்., ஈ சில்வர்., பேப்பர் கோல்ட், கோல்ட் ஈ.டி.எஃப். போன்றவற்றில் கொஞ்சமாவது., தங்கள் சேமிப்பில் இருந்து முதலீடு செய்யணும்.

திரு நாகேஸ்வரம் அவர்கள் சொன்னது போல ஆன்லைன் ட்ரேடிங்கால தங்கம் விலை ஏறுதுன்னு சொல்ல முடியாது. ஏன்னா உளுந்து., துவரை., போன்ற பொருட்கள் ஆன்லைன் ட்ரேடிங் ( கமாடிட்டி ட்ரேடிங்க்கு) தடை விதிக்கப்பட்ட பிறகும் 2008-09 இல் இருந்து இன்றுவரை பல மடங்கு விலை ஏறி இருக்கு,

எனவே தங்கம் விலை ஏற்றதுக்கு காரணம் அதன் தேவையே அன்றி பங்குச் சந்தை வர்த்தகம் அல்ல. எனவே இன்றைய நிலைமையில் தங்கத்தில் சரியான முதலீடு., லாபகரமான முதலீடுன்னா ஈ கோல்ட்., ஈ சில்வர்., பேப்பர் கோல்டில் முதலீடு செய்வதுதான்.


டிஸ்கி .1. :- இந்தக்கட்டுரை அக் 2011 நம் தோழியில் வெளிவந்துள்ளது.


டிஸ்கி.2. :- தீபாவளி ஸ்பெஷலா சென்னையைச் சேர்ந்த ஓரியண்டல் ஸ்டாக்ஸில் MUHURAT TRADING- in Shares, E Gold & E Silver on Wednesday, 26th October 2011,. From 4.45 PM - 7.15 PM.

9 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. இனிய தீபாவளித் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பகிர்வு.

    தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


    சுப்பு தாத்தா
    மீனாட்சி பாட்டி.

    பதிலளிநீக்கு
  5. தங்கமான தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் தேனம்மை!

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள பகிர்வு.

    தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு.
    தங்கம் வாங்குவதை விட Gold ETF இல் முதலீடு செய்வது நல்லது.
    இது பற்றி கூட நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அதன் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_24.html
    வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  8. நன்றி மகேந்திரன்

    நன்றி ராஜா

    நன்றி மாதவி

    நன்றி ஸாதிகா

    நன்றி சூரி

    நன்றி சுந்தரா

    நன்றி குமார்

    நன்றி ரத்னவேல் சார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...