எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 அக்டோபர், 2011

விக்னேஷ்வராவில் (துணை)விருந்தினராக..

ஜூன் 25 ஆம் தேதி ருக்கு அம்மாவுடன் விக்னேஷ்வரா லேடீஸ் க்ளப்பின் ஒரு விழாவுக்கு செல்ல நேர்ந்தது. அது போரூர் கவர்ன்மெண்ட் பள்ளியில் ப்ளஸ்டூ படித்து நல்லமார்க் வாங்கி தேறிய குழந்தைகளுக்குப் பணப்பரிசும், 18 குழந்தைகளுக்கு சீருடையும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கும் விழா. அந்த க்ளப்பை சேர்ந்த பத்மா மணி மேடம் சிறப்பு விருந்தினராக ருக்கு அம்மாவை அழைத்திருந்தார்கள். ருக்கு அம்மாவுடன் துணைக்கு சென்ற என்னையும் துணை விருந்தினராக அமரவைத்துவிட்டார்கள். லேடீஸ் ஸ்பெஷல் வாசகியர் அவர்கள் அனைவரும் என்பதும் என்னை ஓரளவு தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதும் மகிழ்ச்சியாய் இருந்தது. (நன்றி கிரிஜாம்மாவுக்கு) .


ராமாவரத்தைச் சேர்ந்த அந்த க்ளப்பில் கிட்டத்தட்ட 45 மெம்பர்கள் இருக்கிறார்கள். சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அந்த க்ளப்பின் தலைவி சியாமளா அவர்கள் வீட்டில் அவ்வளவு பெண்கள் கூட்டத்தைப் பார்த்ததும் நமக்கு ஆச்சர்யம்தான். எல்லாரும் ஃப்ரெஷ் ஃப்ரெஷ். தூங்க, கதையளக்க, டிவி பார்க்க என பலர் வெட்டியாய் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க, இவர்களோ மிகவும் ஆக்கப்பூரவமான காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ( அதற்கு 4 நாளில் கமலா ஸ்கூலில் டெல்லி கணேஷ் தலைமையில் ஏதோ நிகழ்வு இருக்கிறதென்று வரச் சொன்னார்கள்.!) சியாமளா அவர்களின் இல்லத்திலேயே இந்த விழா நடைபெற்றது.


அவர்கள் கணவர் வெங்கட்ராமனும் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த ஒத்துழைப்பு. கணவர் பக்கபலமாக இருந்து அனைவரையும் வரவேற்றார். புகைப்படங்கள் எடுத்தார். போரூர் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஒருவரும் இந்த க்ளப்பில் மெம்பராக இருந்தமையால் அவர் அங்கு பிள்ளைகளை செலக்ட் செய்திருந்தார். பொதுவாக எல்லா இடங்களிலும் எனக்குத் தோன்றுவதுதான் இது. பிள்ளைகள் அனைவரும் கற்பூரபுத்திக்காரர்கள். அம்மா அப்பா உதவி இருந்தால் இன்னும் ஜொலிப்பார்கள். முதல் தலைமுறை கல்வி கற்கும் குழந்தைகள் அல்லது அம்மா அப்பா மிகுந்த கஷ்டத்தோடு (அடிப்படைக் கல்வி மட்டும் படித்தவர்கள். பிள்ளைகளுக்குச் சொல்லித்தரத் தெரியாது.) ஜீவனம் செய்பவர்கள்.

ருக்கு அம்மா அடிப்படையில் டீச்சர் என்பதால் தெனாலி ராமன் , பீர்பால் கதைகள் எல்லாம் சொல்லி குழந்தைகளுக்கு படிப்பின் அவசியத்தை உணர்த்தினார்கள். அம்மா சொன்ன குட்டிக் கதைகளில் நானும் மயங்கிவிட்டேன். மொத்தக் கூட்டமும் கூட. ( அம்மா வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை ஜெயா தொலைக்காட்சியில் மாலை 6 மணிக்கு குழந்தைகளுக்கு கதை நேரம் என்ற தலைப்பில் கதை சொல்கிறார்கள். நேரமிருப்பின் கேளுங்கள்.). அம்மாவின் ஸ்பீச் ஒரு பர்ஃபெக்ட் ஸ்பீச்.

அடுத்து நான் சில வார்த்தைகள் அறிவுரை கூறினேன்., “ கலைஞர், சூப்பர்ஸ்டார், ருக்கு அம்மா போன்ற பெரிய ஆளுமைகள்தான் குட்டிக் கதைகள் சொல்வார்கள். எனக்கு குட்டிக் கதைகள் எல்லாம் சொல்லத் தெரியாது. “ என்றவுடன் அனைவரும் புன்னகைத்தார்கள்.



“ படிப்பு ஒன்றுதான் நம்மை உயரவைக்கும். படிப்பு ஒன்றுதான் கள்வர் கொள்ள முடியாது. நம்மிடம் இருக்கும் திறமையை யாரும் அபகரிக்கவோ இல்லையென்று சொல்லவோ முடியாது. எந்த சூழ்நிலையிலும் விடா முயற்சியோடு படியுங்கள். அரசாங்கம் நிறைய வசதிகள் செய்து கொடுத்திருக்காங்க. மதிய உணவு , கல்வி எல்லாம். நன்கு படித்தால் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இட ஒதுக்கீட்டினால் கிடைக்கும் சலுகைகளும் கிடைக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவருக்கு வங்கிகள் கல்விக்கடன் வழங்குகின்றன. நன்கு படியுங்கள். நல்ல உத்யோகங்களில் அமருங்கள். ஆனால் லஞ்சம் கட்டாயம் வாங்காதீர்கள். ஊழல் செய்யாதீர்கள்.

அப்புறம் முக்கியமான விஷயம் என்னன்னா இந்த லேடீஸ் க்ளப் மெம்பர்கள் எப்படி உங்க கல்விக்கு உதவுறாங்களோ அதுபோல நீங்களும் நன்கு படித்து நன்கு சம்பாதிக்கும்போது உங்களால் முடிந்த கல்வி உதவிகளை அடுத்தவர்க்கு செய்யுங்கள். PAY IT FORWARD என்பார்கள். நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம். என்பதுபோல நீங்களும் அடுத்தவருக்கு உதவ வேண்டும். அதுதான் உண்மையான தொண்டு. எப்போதும் நாம் வாங்குபவராகவே இருக்கக் கூடாது., கொடுப்பவராகவும் உயரவேண்டும். இதுதான் நான் உங்களுக்குச் சொல்ல விரும்பிய செய்தி.”

இந்த க்ளப்பை சேர்ந்த எல்லாரும் மொத்தமாக சீருடை, புத்தக செலவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தனியாக தங்களுடைய அன்பளிப்பாக நல்ல மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்குப் பணப்பரிசு அளித்தார்கள்.



பின் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தபோது இந்த லேடீஸ் கிளப்பின் சேவைகள் போரூர் டைம்ஸில் வந்துள்ளதாக சொன்னார்கள். அனைவருமே லேடீஸ் ஸ்பெஷலின் வாசகியர். ஒவ்வொருவரும் தங்கள் ஹாபியையே தொழிலாக மாற்றிக் கொண்டவர்கள். பத்மாமணி அம்மா விதம்விதமான நகைகள் செய்கிறார். இன்னும் இருவர் புடவைகளில் எம்ப்ராய்டரி செய்கிறார்கள். இன்னும் இருவர் சின்னதாக விலைமதிப்புள்ள ஸ்டோன்ஸ் எல்லாம் ஒட்டிய பெயிண்டிங்குகள் செய்கிறார்கள். சிலர் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறார்கள். சிலர் இலவசமாக ஸ்லோகம் வகுப்புகள் எடுக்கிறார்கள். முடிந்த எல்லா சேவைகளும் செய்கிறார்கள். அவர்களோடு உரையாடி வந்தபின் எனர்ஜி பூஸ்டர் போட்டது போல் இருந்தது. வாழ்க விக்னேஷ்வரா., வளர்க அவர்களின் சேவை. !!!

6 கருத்துகள்:

  1. படிப்பு ஒன்றுதான் நம்மை உயரவைக்கும். படிப்பு ஒன்றுதான் கள்வர் கொள்ள முடியாது. நம்மிடம் இருக்கும் திறமையை யாரும் அபகரிக்கவோ இல்லையென்று சொல்லவோ முடியாது.
    -மிகப் பயனுள்ள அறிவுரைகள் சொல்லியிருக்கிறீர்கள். ருக்கு அம்மா சொன்ன நல்ல கதைகளில் ஒன்றிரண்டை எங்களுக்கு வழங்கியிருந்தால் நாங்களும் ரசித்திருப்போமே தேனக்கா... சரி, வரும் ஞாயிறு ஜெயா தொலைக் காட்சியில் பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள். அருமையான சில விஷயங்கள் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்

    தொலைகாட்சியில் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஸ்டார்ஜன்

    நன்றி கணேஷ்

    நன்றி ஸாதிகா

    நன்றி கோபால் சார்

    நன்றி நேசன்

    நன்றி குமார்

    நன்றி சரவணன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...