கத்தி கபடாவெல்லாம் இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற சில அரண்மனை மியூசியங்களில் மட்டுமே பார்க்கமுடியும். அதேபோல்தான் ஜெர்மனியிலும் ஸோலிங்கன் அருங்காட்சியகத்திலும் கத்திகளின் அணிவகுப்பு.
தோழி கௌசியும் அவர் கணவரும் தங்கள் காரில் இந்த ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸிலுக்கு அழைத்துச் சென்றார்கள். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை அதன் பின் பல்வேறு மராமத்துப் பணிகளால் மீண்டு அழகாக இன்னும் காட்சி அளிக்குது. 1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார்.
ராஜாவின் கோட்டை கொத்தளம் என்பதால் கேடயம்,வில்,அம்பு, தலைக்கவசம் எல்லாம் இருந்தாலும் அங்கே இருந்த மியூசியத்தில் கத்திதான் ப்ரதான அம்சம். ஏனெனில் இதை மட்டும் கண்ணாடிக் கூண்டுக்குள் பாதுகாப்பா காட்சிப்படுத்தி இருக்காங்க. :)
தோழி கௌசியும் அவர் கணவரும் தங்கள் காரில் இந்த ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸிலுக்கு அழைத்துச் சென்றார்கள். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை அதன் பின் பல்வேறு மராமத்துப் பணிகளால் மீண்டு அழகாக இன்னும் காட்சி அளிக்குது. 1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார்.
ராஜாவின் கோட்டை கொத்தளம் என்பதால் கேடயம்,வில்,அம்பு, தலைக்கவசம் எல்லாம் இருந்தாலும் அங்கே இருந்த மியூசியத்தில் கத்திதான் ப்ரதான அம்சம். ஏனெனில் இதை மட்டும் கண்ணாடிக் கூண்டுக்குள் பாதுகாப்பா காட்சிப்படுத்தி இருக்காங்க. :)