6
”நெல்லிமரத்துப் பிள்ளையாருக்குச் செதர்காய் ஒடைச்சிட்டுத்தான்
வந்தேம்ணே “ என்று பரிதவிப்போடு கூறினான் வேலு. “பரவாயில்லை விடப்பா “ என்று பத்தாவது
முறையாகக் கூறினாக கருப்பஞ்செட்டி. கோழி விழுந்ததும் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவர்
ஒருவர் எழுந்து வந்து “அதுகளாத்தான் குறுக்கால ஓடியாந்து விழுந்துச்சுக. எங்க கோழிகதான்.
ஒங்க தப்பில்ல போங்க “ என்று கூறிவிட்டார்.
என்னவோ இன்று பலி விழுந்தது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை வேலுவுக்கு. வீட்டுக்கு வந்ததும் பங்காளி வீட்டுச் சுகுணா ஆச்சி வந்து ஆலாத்தி எடுத்தாக. சாமி வீட்டில் விளக்கேற்றி இருந்தது. மூன்று கட்டு வளவு உள்ள பெரிய வீடு அது. அப்பச்சி கூட்டிக்கினுபோய் விபூதி பூசி விட்டாக. வேலு கார் டிக்கியிலிருந்து எடுத்து பொட்டி பைகளைக் கொண்டு வந்து பட்டாலை அறையில் வைத்தான்.





.jpg)




International Women’s Day Celebration – 2026
“Give to Gain – Women Supporting Women”
Chief Guest Invitation
Date: 15 March 2026 (Sunday)
Time: 5.30 PM – 8.30 PM
Venue: Krishna Garden, Karaikudi







































