மூத்தோர் தினவிழாக் கட்டுரைப் போட்டி
சர்வதேச முதியோர் தினத்தை ஒட்டி மதுரை தானம் அறக்கட்டளை வெளியிட்ட கட்டுரைப் போட்டி நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதும் வாய்ப்பு அமைந்தது.
நிலக்கோட்டை தான் கருணை இல்லக் குழந்தைகளின் கருணையும் காருண்யமும் பொதிந்த கட்டுரைகள் படித்துக் கண்கள் கசிந்தது நிஜம். முதியோர்களைப் பாதுகாக்கவும், முதியோர் நலன் பற்றியும் ஆக்கபூர்வமாய் ஆலோசனைகள் வழங்கி நம்பிக்கை தந்த குழந்தைகளுக்கு அன்பு &
வாழ்த்துக்கள்
முதியோர் நலனில் அக்கறை கொண்டு இந்நூலை ஆக்கம் செய்த தானம் அறக்கட்டளைக்கும் திரு. பகவதி திருமலை சார் அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்
& நன்றிகள்.
தான் கருணை இல்லக் குழந்தைகளின் கட்டுரைகள்.
தான் கருணை இல்லம் நிலக்கோட்டை
முகவுரை
அணிந்துரை:-
தான் கருணை இல்லக் குழந்தைகள் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் சிப்பியின் முத்துக்கள். பள்ளியில் பயிலும் வயதிலேயே தங்கள் வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டு ஒவ்வொரு மாணாக்கரும் வடித்திருக்கும் கட்டுரைகள் அதி சிறப்பு. இந்நூலில் சிறார்களுக்குச் சிறார்களின் கட்டுரைகளே ஞானக் கண்ணைத் திறக்கும் திறவுகோலாக அமைந்திருக்கின்றன.
”முதியவர்களை மதிப்பவர்கள் வெற்றியை நோக்கித் தங்கள் சொந்தப் பாதையை அமைத்துக் கொள்கிறார்கள்” என்பது ஆப்ரிக்கப் பழமொழி. ”மூத்தோர் சொல் அமிர்தம்” என்பது தமிழ் மொழி. அதை வழிமொழிகிறது செல்வி ஜெயஸ்ரீயின் கட்டுரை. முதியோர்கள் நமது வழிகாட்டிகள் என்று முத்தாய்ப்பாய்க் கூறி இருக்கிறார்.