பெருமதிப்பிற்குரிய நிவேதிதா மேடம் வள்ளிதாசன் சார் அவர்களுக்கு வணக்கம்.
ஹெர் ஸ்டோரீஸ் சார்பாக நடத்தப்பட்ட நாவல் போட்டியில் நடுவராக இருக்கும்படி அழைத்தமைக்கு நன்றிகள்.
இதில் 5 நாவல்கள் பங்கேற்றன. ஐந்துமே சிறப்பானவை தான். அனைத்துமே ஹெஸ்டோரிசில் நாவலாக பதிப்பாக்கம் செய்யக்கூடிய சிறப்பு பெற்றவை.
இதில் நான் எந்த வரிசையில் தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்றால் பெண்ணியத்தோடு பொதுநலமும் கலந்த வகையில் தேர்ந்தெடுத்து உள்ளேன்.
அந்த வகையில் நனைந்த பாய் என்ற கதை ஒரு சுயசரிதையாக அமைந்துள்ளதால் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. அதுவும் 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளது. அதன் மொழி நடையில் சிறிது மாற்றம் செய்து இருந்தால் அது சிறப்பு பெற்றிருக்கும். திரும்பத் திரும்ப வரும் செய்திகள் அதிகம். பெண்களுக்கான வாழ்வியல் துயரங்களைப் பட்டியலிட்டாலும் அது சந்திராவின் வாழ்வில் அவளை சுற்றி உள்ளவர்கள் மட்டுமல்ல அவளே வேண்டி விரும்பித் தன்னைத்தானே சிலுவையில் அடித்துக் கொள்ளும் ஒரு பரிசுத்த ஆத்மாவாக இருக்கிறாள். அந்த வகையில் அவள் என் இரக்கத்தை அதிகம் தூண்டினாள்.புள்ளி விவரங்கள் அதிகம் என்பதால் கட்டுரையாகும் அபாயம் அதிகம். எந்த வயதிலும் சாதிக்கத் துடிக்கும் பெண்களின் மாதிரியாக சந்திரா திகழ்வதால் அவளுக்கு என் வாழ்த்தும் லூர்துமேரி அவர்களுக்கு என் அன்பும்.


