எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 அக்டோபர், 2021

தாய்போல் காத்த தாரை.

தாய்போல் காத்த தாரை


நம்மைச் சார்ந்த ஒருவருக்கு ஒரு இக்கட்டு நேரும்போது காப்பது நம் கடமை. அதையும் ஒருத்தி வெகு இலகுவாகச் செய்தாள். தனக்காக மட்டுமல்ல தன் நாட்டையும் வீட்டையும் தாய்போல் தீர்க்கமான மதியுடன் செயல்பட்டுக் காத்த அந்தப் பெண்ணைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
வானர அரசன் வாலியின் மனைவி தாரை. இவள் வானரர்களின் மருத்துவர் சுசேனரின் மகள். வாலி தேவர்களுக்குத் துணையாகப் பாற்கடலைக் கடைந்தபோது அவதரித்தவள் என்றும் சொல்கிறார்கள். அவள் தன் கணவன் வாலியின்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். இவர்கள் மகன் அங்கதன்.
ஒரு சமயம் சுக்ரீவனும் வாலியும் ஒரு மாயாவி அரக்கனுடன் போர் செய்யச் சென்றபோது வாலியும் அந்த அரக்கனும் ஒரு குகைக்குள் சென்றனர். போர் தொடர்ந்தது. ஆனால் இதை அறியாத சுக்ரீவன் தனயன் திரும்பவில்லை எனவே அவனுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று சொல்லி நாடு திரும்பி அரசாட்சியை எடுத்துக் கொண்டான்.

திங்கள், 18 அக்டோபர், 2021

வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

 2921. வாசிப்பும் எழுத்தும்தான் நம்மை உயிர்ப்பிக்கின்றன. இல்லாவிட்டால் என்றோ சருகாய்ச் சுண்ணாம்பாய் ஆகியிருப்போம்..

2922. https://youtu.be/sVKS-gZ_zGc இன்றைய (29/08/2021)  நிகழ்வின் பதிவு

என்னுடன் பள்ளியில் பயின்றவர். இன்று அரசு வங்கியொன்றில் ஜி எம். கல்யாண்ஜி பற்றிய உரையில் நெகிழ்வு மிளிர்கின்றது. 

2923. https://reutersdigitaljournalism.com/?e=create_account&l=en

பரிட்சையில் தேறிட்டேன் !!!



2924. நாம் எழுந்தவுடன் வேலைகளும் விழித்தெழுந்து விடுகின்றன.

சனி, 16 அக்டோபர், 2021

சாட்டர்டே போஸ்ட். இதிகாச புராணப் பாத்திரங்களை ஓவியத்தால் உயிர்ப்பித்த திரு பிரபாகரன்.

ஓராண்டுக்கு முன் தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்த இதிகாச புராணக் கதைகள் கொரோனா காரணத்தால் சிறுவர் மலர் வெளிவராததால் நின்றுபோயின. 


அச்சமயம் மதிப்பிற்குரிய நண்பர் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் ( இவர் பற்றி மூன்று கட்டுரைகள் என் வலைத்தளத்தில் முன்பே எழுதி உள்ளேன். 2011 அக்டோபரில் வெளியான இக்கட்டுரைக்கு 17500 பார்வைகள் !. 

ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.




இவை இரண்டுக்குமே ஆயிரக்கணக்கில் பார்வைகள். ஆச்சி வந்தாச்சு இதழில் நகரத்தார் எழுத்தாளர்களில் ஒருவராக என்னை அறிமுகம் செய்வதற்காக 2010 களில் தொடர்பு கொண்டார் திரு சாத்தப்பன் சார். அதன்பின் மும்பை நகரவிடுதி, காரைக்குடியில் பாரதி ஆகிய கட்டுரைகளுக்காகத் தொடர்பு கொண்டேன். 

புதன், 13 அக்டோபர், 2021

சரத்குமார் ராதிகா.. எஸ் ராதிகா !

 சரத்குமார் ராதிகா..  எஸ் ராதிகா !


தன்னம்பிக்கை, தைரியம், உற்சாகம், உத்வேகம், விடாமுயற்சி, தொடர் உழைப்பு, ஆளுமைத் தன்மை, வெற்றி  இவற்றுக்கெல்லாம் வாழும் எடுத்துக்காட்டு ராதிகா. முதன் முதலில் வந்த படம் கிழக்கே போகும் ரயில் என்றாலும் நான் பார்த்து ரசித்தது ”அப்பவும் நான் சுதாகர் ராதிகா எஸ் ராதிகா” என்று ராதிகா தைரியமாகத் தந்தையிடமே தன் காதலைக் கூறும் நிறம் மாறாத பூக்கள்தான். 

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

வயிற்றிடை வாயனை வென்ற வீரர்கள்.

வயிற்றிடை வாயனை வென்ற வீரர்கள்.

ரொம்பப் பேசுறவங்களை உனக்கு காது வரைக்கும் வாய் என்பார்கள். அதிகம் சாப்பிடுபவர்களையும் வயித்துல என்ன மிஷினா ஓடுது அரைச்சுக்கிட்டு இருக்கியே என்பார்கள். ஆனால் நிஜமாகவே ஒரு அரக்கனுக்கு வயிற்றில் வாய் இருந்தது. அப்படிப்பட்டவனிடம் இரண்டு வீரர்கள் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் எப்படித் தப்பித்தார்கள்னு பார்ப்போம் குழந்தைகளே.
தண்டகாரண்யத்தில் ராமரும் இலக்குவனும் சீதையைத் தேடி வருகிறார்கள். அப்போது கவந்தவனம் என்ற இடத்தைக் கடக்க நேர்கிறது. வனமா அது கொடிய பாலை போல் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பயிர் பச்சை ஏதுமில்லை. விலங்கினங்கள் கூட அறவே காணோம். என்னாயிற்று இங்கே எனப் பார்த்தபடி வந்தனர் ராமனும் இலக்குவனும்.

வியாழன், 7 அக்டோபர், 2021

பயறு வகைகளில் பல்சுவை சமையல்.

குமுதம் சிநேகிதியில் பயறு வகைகளில் பல்சுவை சமையல். 




7.10.2021 குமுதம் சிநேகிதி இதழுடன் வெளியான இணைப்பில் ”பயறு வகைகளில் பல்சுவை சமையல்”  என்னும் தலைப்பில் எனது 20 சமையல் குறிப்புகள் வெளியாகி உள்ளன.

புதன், 6 அக்டோபர், 2021

டூயிஸ்பர்க்கில் நடைப்பயிற்சி. HEALTHY LIVING AT DUISBURG

 ஜெர்மனியின் டூயிஸ்பர்க் நகரில் இரு மாதங்கள் மகனோடு வசித்து விட்டு வந்தோம். மிக அருமையான நகரம். ஜெர்மனியின் மேற்கில் ரைன் நதிக்கரையின் வடக்கில் அமைந்த நகரம். ஜெர்மனியின் பெரிய நகரங்களில் 15 ஆவது இடம் வகிக்கிறது. ரைன், ரூர் என இரு நதிகள் பாய்கின்றன. ரைன் நதிக்கரையோரம் இண்டஸ்ட்ரியல் ஏரியா. இரும்பு, எஃகு, ரசாயனத் தொழிற்சாலைகள் அதிகம். இங்கே நதி வழி சரக்குப் போக்குவரத்து முக்கியமானது. இப்போது இந்தத் தொழிற்சாலைகளில் பாதிக்குமேல் செயல்படாமல் பூட்டிக் கிடக்கின்றன. 

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படைகளால் அதிகம் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்ட ஊர்தான் டூயிஸ்பர்க். காரணம் இங்கே உள்ள தொழிற்சாலைகளும் அதனால் நாட்டின் முன்னேற்றமும்  வசதிகளும் அவர்களின் கண்ணை உறுத்தியதுதான். இருந்தும் தனது 1100 வது பிறந்தநாளை 1983 இல் கொண்டாடியதாம் சரித்திரப் புகழ் வாய்ந்த டூயிஸ்பர்க். ( இதற்கு அரண்போல் மதிற்சுவரின் எச்சங்கள் எல்லாம் இருக்கு !) 

பேருந்துப் போக்குவரத்து சாலையின் இரு மருங்கும். நடுவில் எஸ்பான், டி பான், ரைன் பான் என ரயில்வே சிஸ்டம். ட்ராம் வண்டிகளும் ஓடுகின்றன. ஹாபன்ஹாஃப் என்பது ரயில்வே ஜங்க்‌ஷன். ஆட்டோ பான் என்பது சாலைப் பேருந்துப் போக்குவரத்து. 

ஒரே நாள் இரவிலேயே ட்ராக் ரிப்பேர் எல்லாம் செய்து ட்ராக்கையே மாற்றி விடும் கில்லாடிகள் ஜெர்மானியர்கள். முதல்நாள் ஒரு ட்ராக்கில் பயணித்தோம். அர்த்த ராத்திரியில் இன்னொரு ட்ராக்குக்கு தண்டவாளங்களை இணைத்து விட்டார்கள்!

சரி வாங்க ஒரு நாளைக்கு ஒரு ரோடு என நடந்து உலா வந்து ரசிப்போம். 

நாம் செல்லும் வழியில்தான் டூயிஸ்பர்க்கின் உள் துறைமுகம், ரயில் போக்குவரத்துப் பாலம், லைப்ரரி, ஜிம் செண்டர், ஓல்ட் ஏஜ் ஹோம், கடைத்தெருக்கள், வீடுகள், அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், சர்ச்சுகள், தொழிற்சாலைகள், தாவரவியல் பூங்கா ஆகியன உள்ளன. 

டூயிஸ்பர்க் ரூஹ்ராட்டர்ஹாஃபன்  என்பது உலகிலேயே மிகப் பெரிய உள்நாட்டுத் துறைமுகம். இதில் 100 கார்களுக்குமேல் ஏற்றிச் செல்லக்கூடிய சரக்குக் கப்பல்களை எல்லாம் பார்த்தோம். அது எல்லாம் இன்னொரு இடுகையில். இப்போது நடக்க ஆரம்பிப்போம்.



சாலையில் இரு மருங்கிலும் கார், பஸ் செல்ல வழிகள், நடுவில் ட்ராம்,எஸ் பான் போக்குவரத்து. 

திங்கள், 4 அக்டோபர், 2021

சில பார்வைகள்.. விமர்சனங்கள்.. பாராட்டுக்கள்.

 யூ ட்யூபில் என்னுடைய நூல் பார்வை குறித்தும், நூல் அறிமுகம் குறித்தும் மேலும் அமேஸானில் வெளியாகியுள்ள என்நூல்கள் குறித்தும் நண்பர்கள் சிலரின் பார்வைகளை இங்கே அறியத்தருவதில் மகிழ்கிறேன். 

1. செவ்வரத்தை என்ற நூல் பார்வை ஒன்றை யூ ட்யூபில் வெளியிட்டு இருந்தேன். 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அது. முழுக்க முழுக்க ஈழம் வாழ் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கியது. அதில் 15 கதைகள் பரிசு பெற்றவை.  அதற்கு பொதி என்பவர் வான் அவை குழுமத்தில் வெளியிட்ட கருத்து இது. நன்றி பொதி சார். 


#செவ்வரத்தை#நூல்பார்வை#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NX_AwgcJmMU&t=8s

சனி, 2 அக்டோபர், 2021

சாட்டர்டே போஸ்ட். கொரோனா கெஸ்ட்ஸ் பற்றி எழில் அருள்

 எழில் அருள். மன நல ஆலோசகர். மனமகிழ் மைண்ட் கேர்  எனும் ஆலோசனை மையம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்துகிறார். அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கும் அகல் டிரஸ்ட் அமைப்பின் பொருளாளர். நிகழ்காலம் எனும் blog எழுதுகிறார்.  அதன் மூலம் சிறந்த பெண் பிளாக்கர் ஆக the Hindu metro plus ஆல் கவுரவிக்கப்பட்டார். 

மக்கள் தொலைக்காட்சியில் உளவியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசியுள்ளார். பல கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் மன நலம் சார்ந்த , வாழ்வியல் முன்னேற்ற பயிலரங்குகள் நடத்தியுள்ளார்.  

தங்க மங்கை என்னும் மாத இதழில் இரு ஆண்டுகள் மன நலம் குறித்த தொடர் கட்டுரை வெளியிட்டுள்ளார்...இவர்களுடைய மன நலம் குறித்த தொகுப்புகள் manamagizhmindcare யூடியுப் சேனலில் பார்க்கலாம்...

சுயமுன்னேற்றப் பயிற்சியாளர். தோழி அகிலாவுடன் குழந்தைகளுக்கு நிறைய கவுன்ஸிலிங் செய்கிறார். கோவையில் வசிக்கிறார். பல்லாண்டுகளாக என் முக நூல் தோழி.  லவ்லி லேடீஸ் என்ற வாட்ஸப் குழுமத்திலும் ஒருங்கிணைந்து இருக்கிறோம். 


ஒருமுறை க்ராஸ் கட் ரோடு சென்றபோது இவரைச் சந்தித்தேன். அங்கேயே ஆனந்த அறிமுகமாகி ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித் தரச் சொல்லிக் கேட்டபோது தான் வளர்த்த பூனைக்குட்டிகள் பற்றி எழுதிக் கொடுத்தார். 

///கொரானா கெஸ்ட்ஸ்..


   8 வருடத்திற்கு முன் வீட்டில் பூனைக்குட்டிகள் 6 வளர்த்துக் கொண்டிருந்தோம். அலுவலகம் சென்ற பின் வெளியில் இருக்கும். ஆனால் எலியைக் கொண்டு வந்து போடுவது, அங்கங்கே கக்கா போவதுன்னு என் வீட்டில் வேலை செய்பவர் மிகவும் வருத்தப்பட்டார். அதனால் அம்மா, குட்டிகள்னு எல்லோரையும் ஒன்றாக பேக் செய்து ஒரு தோட்டத்தில் கொண்டு விட்டு வந்தோம். இனி நாம் பார்ப்பதாய் இருந்தால் தான் பெட் வளர்க்கணும்னு முடிவெடுத்தோம். 

Related Posts Plugin for WordPress, Blogger...