எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 31 ஜூலை, 2018
சிகப்பி இல்லத்தில் சில பாடல்கள்.
திங்கள், 30 ஜூலை, 2018
விடாமுயற்சிக்கு ஒரு பகீரதன். தினமலர். சிறுவர்மலர் - 28.
அது எதற்காக என்று பார்ப்போம் குழந்தைகளே.
ஞாயிறு, 29 ஜூலை, 2018
மமதையை அடக்கிய மகேசன். தினமலர். சிறுவர்மலர் - 27.
செவ்வாய், 24 ஜூலை, 2018
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். தினமலர் சிறுவர்மலர் - 26.
திங்கள், 23 ஜூலை, 2018
புதன், 18 ஜூலை, 2018
திங்கள், 16 ஜூலை, 2018
கல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.
இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தினரும், தலைவரும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு சகாய அமலன் அவர்களும் வாழ்த்துரை நல்கினார்கள். பொற்கிழிக் கவிஞர் திரு நாகப்பன் அவர்களும், சுசேந்திரன் என்னும் மாணவன் ஒருவனும் கவிதையில் வாழ்த்துரை நல்கினார்கள்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான திரு பாகை கண்ணதாசன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பற்றி சிறப்புரை நல்கினார்கள். திரு பாகை கண்ணதாசன் அவர்களின் பேச்சும் கவிஞர் திரு நாகப்பன் அவர்களின் கவிதையும் வெகு சிறப்பு. நினைவில் இருத்தியவற்றைப் பகிர்ந்துள்ளேன்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு பெற்ற மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விடுதலை வேந்தர்கள் நூலின் 25 பிரதிகளை பேர்ல் ரோட்டரி சங்கத்தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் வாங்கி அங்கேயே மாணவர்க்குப் பரிசளித்தார்கள். !
இவை அனைத்தும் கீழேயும் விரிவாகக் கொடுத்துள்ளேன்.
கல்விக்கண் திறந்த காமராஜருக்கு மரியாதை. மாணவக் கண்மணிகள் பூத்தூவி வணங்குகிறார்கள்.
வரவேற்புரை கூறி இந்நிகழ்வை ஆசிரியை திருமதி கோமதி ஜெயம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் மிக அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடைபெற்றது. பேச்சாளர்களின் உரையைக் கவனித்து சரியான தருணத்தில் கைதட்டினார்கள். ஊன்றிக் கேட்டதுமல்லாமல் கேட்டவற்றுக்குத் தக்க பதில் சொல்லி அசரடித்தார்கள்.
சனி, 14 ஜூலை, 2018
சாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.
சரஸ்வதி காயத்ரி என் முகநூல் தோழி. புத்தகங்களை வாசிப்பதிலும் அவற்றை மென் இறகால் தொடுவது போல மென்மையாக விமர்சிப்பதிலும் வித்தகி. சொல்லப்போனால் இவருக்கு கவிதைத் தொகுதிகள்தான் பிடிக்கும். வண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்.
இவர் தனது உறவினர்கள் பற்றி எழுதும் அனைத்தும் மனம் தொட்டவை. உறவுகளின் நெருக்கத்தையும் அன்பையும் வாசித்துக் கண்ணைக் கசியவிட்டவை. வீடு பற்றிய இவரது கவிதை என் உயிரைத் தொட்ட ஒன்று. வீடு என்பது சிதிலமானாலும் அதில் வாழ்ந்த அன்பு இன்னும் உயிர்த்துக்கொண்டிருக்கிறது இவரது எழுத்தில்.
இனி சாட்டர்டே ஜாலி கார்னருக்காக நான் இவரிடம் சிறுகதை, கவிதைகள் பற்றிய இவரது பார்வையைக் கேட்டிருந்தேன். அவர் கூறியதை இங்கே அளித்திருக்கிறேன்.
///பாவண்ணனின் " துங்கபத்திரை" படித்துக்கொண்டிருக்கிறேன்.
நந்தனார் படத்தில் தண்டபாணி தேசிகரின் குரலைப்பற்றி அவர் எழுதியிருப்பதை படித்தவுடன் படிப்பதை நிறுத்தி விட்டு பாடல்களை கேட்க ஆரம்பித்து விட்டேன்.துக்கப்பிரவாஹத்திலிருந்து மீள்வதற்கு படிக்க ஆரம்பித்து மீண்டுமொரு துக்கத்தில்..
புதன், 11 ஜூலை, 2018
பாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.
செவ்வாய், 10 ஜூலை, 2018
ஞாயிறு, 8 ஜூலை, 2018
பழம்பெரும் வீடுகள்.
இந்த வீட்டில் காலிங் பெல் மிகப் பழமையானது. :)
சனி, 7 ஜூலை, 2018
சாட்டர்டே ஜாலி கார்னர். சுபஸ்ரீமோகனும் ஷி ஹுவாங்க்டி அளித்த சீனப்பெருஞ்சுவரும்.
சீனா அண்ணன் தேசம் என்ற நூலாசிரியர். இந்த நூலை இவர் சென்னையில் வெளியிட்ட நிகழ்வில் எங்கள் முகநூல் தோழமைகள் எல்லாம் கலந்து கொள்ள நான்மட்டும் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தம் இருந்தது.
அதைத் தீர்க்க அவரிடம் பலமுறை இந்தச் சீனாவைப்பற்றி ஏதேனும் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதிக்கொடுங்கள் என்று மன்றாடி ( ! ) இருந்தேன். ஒருவழியாக டைம்கிடைத்து என் ஞாபகம் வந்து இன்று எழுதி அனுப்பினார் சுடச் சுட அந்த சீனப்பெருஞ்சுவர் இடுகை உங்களுக்காக இங்கே. :)
அன்பும் நன்றியும் தங்காச்சி :)
வெள்ளி, 6 ஜூலை, 2018
ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷனின் அற்புத சேவைகள்.
மாமல்லபுரம் கலைச் சிற்பங்கள்.
வியாழன், 5 ஜூலை, 2018
மதினாத் ஜுமைரா சந்தையில் மணல் ஒட்டகம். - DUBAI SAND ART.
ஒரு நாள் நண்பர் & சகோதரர் எழுத்தாளர் கவிமதியும் உடன் வந்து இந்த மால்களை எங்களுக்குச் சுற்றிக் காட்டினார். நன்றி கவிமதி சகோ & மெய்யப்பன். :)
மதினாத் ஜுமைரா சந்தையில் மணல் ஒட்டகம். - DUBAI SAND ART.
துபாயில் பல்வேறு விதமான மால்கள் பிரசித்தமானவை. சில மால்களில் மட்டுமே நம்மைப் போன்றோர் பொருட்களை வாங்க முடியும். சில மால்கள் ரொம்ப காஸ்ட்லி. அது இண்டர்நேஷனல் பயணிகளுக்காக அதிக விலையுடன் (யூரோக்களுக்காகக் காத்திருக்கும்) இருக்கும் அலங்கார மாளிகைகள். எல்லாமே ஷோகேஸில் வைக்கும் அலங்காரப் பொருட்கள்தான்.
சூக் மதினாத் ஜுமைரா என்ற மாலில் இது போன்ற கலைப்பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதே போல் அங்கே சில உணவுக் கடைகளும் இருக்கின்றன. ஒரு சில பேக்கரிகளும் சாக்லேட் தயாரிக்கும் கடைகளும் இருக்கின்றன. ஆனால் எல்லாம் ஆனைவிலை, டைனோசர் விலை, திமிங்கிலம் விலைதான்.
ஒரு
நாள்
என்
தம்பியுடன் நண்பர்
& சகோதரர் எழுத்தாளர் கவிமதியும் உடன்
வந்து
இந்த
மால்களை எங்களுக்குச் சுற்றிக் காட்டினார். நன்றி கவிமதி
சகோ
& மெய்யப்பன். :)
இங்கே
எதையுமே வாங்கக்கூடாது என்று
எச்சரித்தே கூட்டிச் சென்றார் ஏனெனில் ஏதும்
வாங்க
வேண்டுமென்றால் சொத்தையே எழுதி
வைக்கவேண்டுமாம். :)
மஞ்சள் ஒட்டகம் பாருங்க. இது மெட்டலால் ஆனது. மிக உயர மர விதானங்கள். செண்ட்ரலைஸ்ட் ஏசி. லாண்டர்ன் எனப்படும் மின்சார தொங்கு ( ஹரிக்கேன்) லாந்தர்கள்.
அநேகமும் ஃபிலிப்பினோ பெண் விற்பனையாளர்தான் கடைகளில் காட்சி அளிக்கிறார்கள். கடை தப்பாமல் ஒட்டகச் சிலை இருக்கிறது. எல்லாவற்றிலும் விண்டோ ஷாப்பிங்தான் :)
இதோ
சுற்றி
சுற்றி
மாலைச்
சுற்றிக் கடைசியாக இந்த
மணல்
ஒட்டகம் ( சாண்ட்
ஆர்ட்)
செய்யும் கடைக்கு வந்துவிட்டோம்.
இது
சாப்பாட்டுக் கூடம்.
இது
ஜுமைரா
சிட்டி.
பாம்
ஜுமைரா
பில்டிங் தூரத்தே அழகாகக் காட்சி
அளிக்கிறது.
ஜுமைரா
சந்தையின் வெளிப்பகுதி. இங்கே
நீர்
நிலைகள் எல்லாம் இருக்கின்றன. படகுகளும் ஓட்டுகிறார்கள். இந்த
எண்பட்டை தாமரையின் உள்ளே
ஒரு
வெண்
தாமரையும் இதழ்
விரித்திருக்கிறது. எல்லா
இடங்களிலும் தண்ணீரை நிரப்பிக் குளிர்வித்திருந்தார்கள்.
பார்க்கும் இடமெல்லாம் பேரீச்சை மரங்கள் வேறு.
பச்சை
பேரீச்சை, அரக்கு
பேரீச்சை , ஃப்ரெஷ் பேரீச்சை எல்லாம். அதெல்லாம் இன்னொரு போஸ்டில் போடுவேன். :)
அங்கே படங்கள் நடக்கும் தியேட்டர் ஹாலும் இருக்கிறது. இந்தத் தாழ்வாரங்களில் ஒளி ஊருடுவும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கு. இது துருக்கிய பெர்சிய இஸ்லாமியக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கு.
திரும்பிப் போவோம்
வாங்க.
சாண்ட்
ஆர்ட்
ஆர்ட்டிஸ்டிடம் அம்மாவும் அப்பாவும் மணல்
ஒட்டக
ஓவியம்
வாங்க
ஆர்டர்
கொடுத்திருந்தாங்க. சுமாரா மூன்று
ஒட்டகம் வரைந்து கொடுக்க 500 ரூபாய்.
நம்மூரு காசில்.
பத்து
திர்ஹாம் என்றால் 170 . அது ஒரு
ஒட்டகத்துக்கு. அவர்
எங்களுக்காக ஒட்டகம் செய்ய
நாங்க
வெயிட்டிங்.
ஒரு
கண்ணாடிக்குடுவையில் கலர்
மணல்களை பக்குவமாக ஒரு
மினி
ஃபனலில் ( FUNNEL ) கொட்டி அதன்
சைடில்
சிறு
குழாய்
( மினி
ப்யூரட் சைஸ்
அல்லது
மினி
நீள
இங்க்
ஃபில்லர் சைஸ்.)
வழியாக
அந்த
கறுப்பு மணலை
சைடில்
கொட்டி
ஒரு
குச்சி
மூலம்
சரசரவென ஒட்டகங்களை உருவாக்குகிறார்கள். கையில்
இருக்குது வித்தை.
மேலே
பாருங்கள் ஒரு
பாலைவனமே படைத்துவிட்டார் அந்த
ஓவியர்.
இந்த
மணல்
பாட்டிலில் செட்
ஆனதும்
கலைவதும் இல்லை
அழிவதும் இல்லை.
பத்திரமாக பாலிதீன் பையில்
போட்டு
எடுத்து வந்தோம். அம்மா
வீட்டுக்குச் செல்லும்போது அந்த
ஓவியத்தை புகைப்படம் எடுத்துப் பகிர்கிறேன். ஒட்டகத்தைக் கட்டிக்கோ என்ற
பாட்டு
அசந்தர்ப்பமாக ஞாபகம்
வந்துகொண்டே இருந்தது.
கார்
பார்க்கிங்.நல்ல
வழுவழுவென்ற கார்
பார்க்கிங் தளங்களை முதன்
முறையாக நான்
துபாயில்தான் பார்த்தேன். ஒன்
திர்ஹாம் மால்,
லூ
லூ
மால்
எல்லாம் புகைப்படம் எடுக்கலை..
வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும்
விதத்தில் அமைக்கப்பட்டிருக்கு ஒவ்வொரு மாலும்.
பெட்ரோல் தீர்ந்தாலும் அவர்களுக்கு மால்கள் வருமானத்துக்கு வழி
வகுக்கும். அவ்ளோ
அழகு
மால்கள்.
அடுத்த
போஸ்ட்களில் துபாய்
மால்,
எமிரேட்ஸ் மால்,
இபுன்
படாடா
மால்
எல்லாம் பார்க்கலாம்.













