பார்க் கல்லூரியின் எஸ் வீரராகவன். :-
திருப்பூர் பார்க் கல்லூரிக்கு மகளிர் மன்ற விழாவுக்குப் போனபோது
அங்கே திருமாறன் ஜெயராமன் சார் , ரெங்கராஜன் சார் ஆகியோரோடு எஸ் வீரராகவன் அவர்களையும்
சந்தித்தேன்.
மிக ஆச்சர்யத்துக்கு உரிய மனிதர். சாஃப்ட் ஸ்கில்ஸ் ட்ரெயினராக
இருக்கிறார். மாணவிகளைத் தன் பெண் குழந்தைகளை போல அன்பு செலுத்துகிறவர்.. ஆங்கிலத்தில்
பேசப் பயிற்சிகள் அளிக்கிறார்.
நான் பேசி முடித்ததும் நடனங்கள் ஆரம்பித்தது. அங்கே இருந்த
திருமாறன் ஜெயமாறன் சார் “நான் இருந்தால் அவர்கள் கூச்சப்படுவார்கள். இது மகளிர் மன்றம். எனவே
அவர்களுக்கான தினம். மகிழ்வாய்க் கொண்டாடட்டும் ” எனச் சொல்லிப் புன்முறுவலோடு விடை பெற்றார்.
அப்போது ஒரு பெண் குழந்தை அற்புதமாக நடனமாடினாள். அருகே அமர்ந்திருந்த
வீரராகவன் சார் வியப்போடு பார்த்து ”இந்தப் பெண் எப்படி அற்புதமாக நடனமாடுகிறாள். ஆங்கிலப்
பயிற்சி வகுப்பில் பேசக் கூப்பிட்டால் பேசவே மாட்டேன்” என்கிறாள்.