எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
140. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
140. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.

131. சங்கீத ஸ்வரங்கள். ஏழே கணக்கா

அழகனில் மம்முட்டியும் பானுப்பிரியாவும் பாடும் பாடல். இரவில் ஆரம்பித்து விடியற்காலையில் முடியும். இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவும் காலையில் சூரிய கிரணங்களோடு தொலைக்காட்சி ம்யூசிக்கும் அழகு. மேலும் இருவரும் படுத்தபடியும் அமர்ந்தபடியும் திரைச்சீலையைத் தொட்டுக் கொண்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பாடல் பலரின் தூக்கத்தைக் கெடுத்ததோடு மட்டுமல்ல ரிங் டோனாகவும் இருக்கிறது. :)

132. ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி.

அவன் தான் திருடன் என்றிருந்தேன். அவனை நானே திருடிக் கொண்டேன். முதன் முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்துவிட்டேன். என்ற வரிகள் பிடிக்கும்.  புன்னகை முகத்தோடு சரோஜா தேவி பாடும் நல்ல ரிதமிக்கான பாடல். பள்ளிக் கூடத்துக்குத் தினமும் மாட்டு வண்டியில் போவோம் அந்த இனிமையான நினைவுகள் மறுபடியும் நிழலாடும் இந்தப் பாடல் கேட்கையில்.

133. காற்றில் எந்தன் கீதம்.

ஸ்ரீதேவியும் ரஜனியும் நடித்த படம் ஜானி. இதில் டபிள் ஆக்ட் ரஜனி. இந்தப் பாடல் ரொம்ப மெலடியஸாக இருக்கும். தனிமையும் ஏக்கமும் பொங்கி வழியும் பாடல். 

134. ஆசையக் காத்துல தூதுவிட்டு.

Related Posts Plugin for WordPress, Blogger...