எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கிருஷ்ணர் கொடுத்த குரு தட்சணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருஷ்ணர் கொடுத்த குரு தட்சணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 டிசம்பர், 2025

கிருஷ்ணர் கொடுத்த குரு தட்சணை

கிருஷ்ணர் கொடுத்த குரு தட்சணை


புராணக் காலங்களில் குழந்தைகள் குருகுல முறைப்படிக் கல்வி பயின்றனர். குருகுலக் கல்வி முடியும்போது தங்கள் குருவுக்குத் தக்க முறைப்படிக் குரு தட்சணை அளித்து வணங்கி மகிழ்வார்கள். கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக் கல்வி முடித்தபோது தட்சணை தர முன் வந்தும் அவரது குரு அதை மறுத்தார். ஆனால் தன் குருவுக்கு ஏதாவது தட்சணை தந்தே ஆக வேண்டும் என விரும்பிய கிருஷ்ணர் வித்யாசமான குரு தட்சணையைச் சமர்ப்பித்தார்.

மதுராவில் பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் கர்கர் என்ற மகரிஷி மூலம் பூணூல் சடங்கையும், காயத்ரி மந்திர உபதேசத்தையும் செய்வித்தார் வசுதேவர். அதன் பின் அவர்கள் சாஸ்திரங்களிலும் அஸ்த்ர சஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...