எனது முகநூல் தோழன் கல்யாண். கல்யாண்குமார். அவ்வப்போது போடும் டைரிக் கிறுக்கல்கள் கவிதைகளைப் படித்து ஒரு கமெண்ட் போடுவார். ஒரு நாள் பரிட்சை பூதம் என்ற கவிதை போட்ட போது நீங்க
எங்கேயோ இருக்க வேண்டிய ஆள் என்று எழுதி இருந்தார்
(*ஒரு
பூதம்
*கேள்விகளென்னும்
பற்களை நீட்டிக்
காகிதங்களில்
தன்முகம் தனைப் புகுத்தி
வினாக்குறிகளாய்
நகங்களை விரித்து
ஒரு தேர்வுப் பூதம்
என்னை வேர்க்க வைக்கிறது.
*கேள்விப் புழுக்களைத்
தூண்டிலில் மாட்டி
மீனாய் என்னைச் சிக்கவைக்கும்.
கேள்விக் கருவாடு பூட்டி
வண்டியில் நாயாய்
என்னை ஓட்டும்
ஒரு பரிட்சைப் பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது. )
இவரது முகநூல் பக்கத்தில் நான் படித்து இப்படியும்
உண்டுமா என யோசித்த வாசகம் “விழுவதும்
எழுவதும் தொடர்கதையாய் இருக்கையில் விலாசம் சொல்வது
வெட்கக் கேடு தானே. ” 87 ஆம் வருடத்தில் இருந்து திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் டைரக்டரா இருப்பதால இவரிடம் நமது சாட்டர்டே ஜாலி கார்னருக்காக வீக் எண்ட் நிகழ்வு பத்தி எழுதித் தரச் சொல்லிக் கேட்டேன். அவரது பதில் இங்கே.
