எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கருப்பாயி ஊரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்பாயி ஊரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 மார்ச், 2017

சரண்யா - முதியோர் ( பெண்கள் ) இல்லத்தில் திருப்புகழ் அமுதம்.

சென்ற மாதம் ஒருநாள் மதுரை கருப்பாயி ஊரணியில் இருக்கும் சரண்யா முதியோர் இல்லத்துக்குத் திருப்புகழ் பாராயணக்குழுவினருடன்  சென்றிருந்தேன்.

முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களாலும் ரோட்டரியாலும் மிக அருமையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது இந்த முதிய பெண்கள் இல்லம். அனைவரும் சீருடை போல மஞ்சள் புடவையும் சிவப்பு ரவிக்கையும் அணிந்திருந்தனர். அங்கே பல மதத்தைச் சேர்ந்தவர்களும் சிறப்புரை ஆற்ற வருவார்கள் என்றும் ஃபாதர், போன்றவர்களும் உரையாடுவார்கள் என்றும் சொன்னார்கள். மருத்துவரும் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.  இரண்டு பெண்கள் இங்கே பணி புரிகிறார்கள். இதனை நிர்வகிப்பவர் வீடு அருகிலேயே இருப்பதால் அடிக்கடி வந்து பார்த்துக் கொள்கிறார். 

முதுமை, உடல் நலக்கோளாறுகள், மூட்டுவலிகள் போன்றவை இருந்தும் அந்தக் காலை நேரத்தில் குளித்துவிட்டு அழகாக அனைவரும் காத்திருந்த காட்சி மறக்க இயலாதது.
வாசலில் விதம் விதமாக வண்ணக் கோலங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...