எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உலகத்தமிழ் நான்காம் கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத்தமிழ் நான்காம் கருத்தரங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஏப்ரல், 2017

உலகத்தமிழ் நான்காம் கருத்தரங்கம்.

காரைக்குடிக் கம்பன் கழகத்தின் சார்பாக இந்த வருடக் கம்பர் விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இன்று அத்தத் திருநாள் பாட்டரசன் கம்பன் சமாதியில் நாட்டரசங்கோட்டையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கம்பர் விழாவை ஒட்டி செட்டிநாடும் செந்தமிழும் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. வள்ளல் அழகப்பரின் பேத்தி கோட்டையூர் வள்ளி முத்தையா அவர்களின் நூற்றாண்டுப் பாரம்பரிய இல்லத்தில் இக்கருத்தரங்கு நடைபெற்றது . கம்பன் அடிப்பொடி அரங்கம், ராய சொ அரங்கம் போன்ற ஐந்து அரங்குகளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இக்கட்டுரைகள் முன்பே கட்டுரையாளர்களிடமிருந்து பெறப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டிருந்தன என்பது சிறப்பு.

சிங்கையைச் சேர்ந்த முனைவர் லெக்ஷ்மி இரு கட்டுரைகள் பங்களிப்பு செய்திருந்தார். அதில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள் என்ற கட்டுரையில் ரமா இன்பா சுப்ரமணியன் படைப்புகள் பற்றியும் என் படைப்புகள் பற்றியும் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. !!!

பதினோரு மணியில் இருந்து ஒரு மணி வரை கட்டுரை வாசிப்பு நிகழ்ந்தது. மதிய உணவுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் மட்டும் வாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டன. முனைவர் திரு முத்தப்பன் முன்னிலையில் இக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

அருவியூர்ச் செட்டியார்களின் தமிழ்ப்பணி பற்றி பொன்னமராவதியைச் சேர்ந்த திரு திருநாவுக்கரசு என்பவர் கட்டுரை வாசித்தளித்தார்.
இராய சொ வின் ஆழ்வார் அமுது உரைத்திறன் பற்றி அழகப்பா பல்கலைக் கழகத்தின் முனைவர் சு இராசாராம் அருமையான திறனாய்வுக் கட்டுரை வாசித்தளித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...